Share

Jun 8, 2024

கல்லு பீடத்தில

திருப்பூர் D. மயில் சாமியின் ( இவரைப் பற்றி R.P. ராஜநாயஹம் 'கிளர்ந்தெழும் தாபம் - 1'ல் குறிப்பிடப்பட்டுள்ளது)
 தகப்பனார் இறந்த போது
 அந்த பெரிய காரியத்திற்கு வந்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் 
சி.கே. குப்புசாமி அந்த நேர பனியன் தொழில் சிக்கல் பற்றி உரக்க சொன்னார். 
" இன்னும் பல வருடத்துக்கு இப்படித்தான் இருக்கும். ' ஆண்டவன் இருக்கான். திருப்பூர காப்பாத்துவான்'னு நீயா சொல்லிக்க வேண்டியது தான். 
கல்ல நட்டு வச்சி 'சாமி'ன்ற. அது வந்து ஒன்ன காப்பாத்துமா? கல்லு எப்படி
 திருப்பூர காப்பாத்தும்?"

சி.கே. குப்புசாமி காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்காரர் 

ஜார்க்கண்ட் - தெலிங்கானா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனின் சித்தப்பா சி.கே. குப்புசாமி. அப்பாவின் சகோதரர்.

கல்ல கடவுள்னு நம்பற வரைக்கும்
 கல்லு பீடத்தில ஒக்காந்திருக்கும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.