Share

Sep 3, 2019

சேவல் முட்டை


அசோகமித்திரனுக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மளையாள சினிமா பாடலாசிரியர் ஒருவருக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டது.                                                 அசோகமித்திரனிடம் அலை பேசி உரையாடிய போது சொன்னார் 'இங்கே செல்வாக்கு மிகுந்த திரை பாடலாசிரியருக்கு இந்த விஷயம் மிகுந்த ஊக்கம் ஏற்படுத்தும். தனக்கான முயற்சிக்கு வேகமாக செயல் பட வைக்கும்.'

கி. ராஜநாராயணனுக்காவது அடுத்து ஞான பீட விருது கிடைத்து விடாதா? எதிர்பார்ப்பில் வருடங்கள் ஓடுகின்றன.

இன்று காலை ஒரு செய்தி கண்ணில் விழுந்தது.  ஒரு முன்னணி தமிழ் திரை நடிகர் ஏதோ ஒரு மளையாளப் படத்துக்கு பாடல் எழுதுவதாக.

                அதிர்ஷ்டக்காரனுடைய சேவல் முட்டையிடும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.