Share

Sep 19, 2019

கத கந்தல்



கதையிலெ நெறய ஓட்டன்றதோட கதயே ஓட்டய வச்சி தான். தெனம் ஷூட்டிங் வந்தவுன்ன கதாநாயகியோட அம்மா "இன்னக்கி என்ன சார் சீனு எடுக்கப்போறீங்க?"
டைரக்டர் 'வீக்கேயார் உங்க மகள போட்ற சீன் ம்மா'

மறு நாள் 'என்ன சீனு?'
'உங்க மகள ஒய்ஜ்ஜி செய்ற சீனு'

'வெண்ணிறாட மூர்த்தி  கதாநாய்கி வீட்டுக்கே வந்து 'படுக்லாமா' ன்னு கேக்றாரு'

அடுத்த நாள் 'ஃப்ளாஷ் பேக்கு.. காலேஜ்ல படிக்கிற ஹீரோயினிய மூனு பையங்க கடத்தி கற்பழிச்சி'

கதாநாயகியோட அம்மா கூப்பாடு ' என்ன சார். உங்க படத்துல வேற சீனே கெடயாதா? தெனம் இப்படியா?'

'எம்மா சப்ஜெக்டே கால் கேர்ள வச்சி தாம்மா. கத ஒங்கட்ட சொல்லி தானேம்மா ஒங்க மகள புக் பண்ணோம்'

கூப்பாடு 'ஏன் சார். அதுக்குன்னு இப்டி எம்பொன்ன படுத்தியெடுக்றீங்க'

டைரக்டரு (aside) 'இவளே பெசண்ட் நகர்ல ப்ராத்தல்ல அடி பட்டவ. பெர்சா அலட்றா'

...

'என்ன சார்? எப்ப சார் எம் மகள கிளம்ப விடுவீங்க '

' எம்மா, ராத்ரி பத்து மணிக்கு ஒங்ள அனுப்பிடறம்மா. இப்ப ஏழுக்கு தான ஃபர்ஸ்ட் ஷாட்டே .. '

ஏ. வி. எம் ல ரோட்டுல ஷூட்டிங்.

பத்து மணிக்கு நகத்த கடிக்குது. ஆளு கதாநாயகி மாரி நல்ல ஒசரமா, டக்கரா தான் அம்மாவும். ஆனா, ஆவன்னா..கொழு, கொழுன்னு குண்டு. வாய் ஏதானும் கொறிச்சிக்கிட்டே..

பதினோரு மணி. வாய் எதயோ தின்னும் போதே கண்ணு உருளுது. செவக்குது.

அன்னக்கி ராத்திரி பன்னண்டு மணி. ஷாட் ப்ரேக்.

கதாநாயகியோட அம்மா ஒக்காந்திருக்ற எடத்லருந்து எந்திரிக்குது. கோபம் கொப்பளிக்க டைரக்டர பாக்க நடக்க ஆரம்பிக்கிது.

நீதி மத யானை வீதி வழி வந்ததம்மா

டைரக்டர் அந்தம்மா ஆக்ரோஷமா வந்துக்கிட்டு இருக்றத பாத்தவுன்ன 'நானும் சரோஜாதேவி, விஜய குமாரி, கே.ஆர் விஜயா,  லச்சுமின்னு எப்பேர்ப்பட்ட நடிகைங்கள எல்லாம் மேச்சி படம் எடுத்தவன். இந்த கண்டார ஓலிய சமாளிக்க முடியாம.... வாங்கம்மா '

பக்கத்ல வந்துடுச்சு.
' வாங்கம்மா '

வெடித்து கூப்பாடு' இப்ப மணி என்ன சார். எம் மக என்ன மிசினா..என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க. நாங்க கெளம்ப்றோம் '

டைரக்டர் கத கந்தல்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.