ஸ்டீபன் ஸ்பெண்டரும் ஹிண்டு எடிட்டர் நா. ரகுநாதய்யரும் பற்றி க. நா. சு வின் நினைவுகள் பற்றிய என் பதிவை படிக்கிற யாராவது ரகுநாய்யர் தான் தமிழில் சிறுகதைகள், ஏன் நாடகங்களும் எழுதிய ’ரஸிகன்’ என்ற எழுத்தாளர் என்பதை கண்டு கமெண்ட் செய்ய மாட்டார்களா என்று நினைத்தேன்.
அப்படி பின்னூட்டம் தான் என் பதிவுகளுக்கு என் எதிர்பார்ப்பு.
1939ல் கே.எஸ் வேங்கடரமணி ஆரம்பித்து ஒரு வருடம் நடத்திய பாரத மணி பத்திரிக்கையில் அவருடன் கு. ப. ரா. வும் இணைந்து எழுதிய போது அதில் ரஸிகன் என்ற புனைபெயரில் ரகுநாதய்யரும் கதை, நாடகம் பல தரமாக எழுதியிருக்கிறார். புத்தகமாகவும் அவை வெளிவந்து பரவலாக கவனம் பெற்றன. க. நா. சு. வின் அபிப்ராயத்தில் 'தரையில் காலூன்றி எழுதிய லட்சியவாதியாக' ரஸிகன் தோற்றம் தந்திருக்கிறார்.
அவர் மனைவியுடன் வாழ முடியாத நிலையில் தனியாக இருக்க நேர்ந்திருக்கிறது.
அவருடன் அளவளாவிய போதெல்லாம் அளவற்ற பொக்கிஷங்கள் தான் கிடைக்கப்பெற்றதாக க. நா. சு. 'இலக்கியச் சாதனையாளர்கள்' நூலில் பெருமிதமாக நினைவு கூர்ந்தார்.
https://m.facebook.com/story.php?story_fbid=2504298563116928&id=100006104256328

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.