Share

Sep 19, 2012

மாவீரன் லல்லுபிரசாத் யாதவ்


Sep 11, 2009

லல்லுபிரசாத் யாதவ் இந்திய பிரதமரிடம் சொன்னார் -
'' பல வகைகளில் என் திறமையை என்னால் நிரூபிக்க முடியும்.''

ஜெகஜீவன் ராம் இருபத்தைந்தாண்டுகள் அரசாங்க உத்தியோகம் பார்ப்பது போல காங்கிரஸில் இருந்து மந்திரி உத்தியோகம் பார்த்தவர். எமெர்ஜென்சி காலத்திலும் மத்திய மந்திரியாய் இருந்து விட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கடைசியில் கட்சியை விட்டு வெளியேறி
'Congress for Democracy ' கட்சி ஆரம்பித்து ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து இந்திரா காந்தியை எதிர்த்தவர்.
அப்போது " இந்தியாவின் பிரதமர் ஆவீர்களா?" என நிருபர்கள் கேட்ட போது பவ்யமாய், அடக்கமாய் சொன்னார் : “I never shirk any responsibility this country wants me to shoulder.” இன்றைய பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாரின் தந்தை.

அந்த காலத்தில் ஜெகஜீவன் ராம் சொன்ன அந்த வார்த்தைகளையும் ஆங்கிலத்திலேயே லல்லு மனப்பாடம் செய்து பிரதமரிடம் ஒப்பித்தார். :
“I never shirk any responsibility this country wants me to shoulder.”

கேபினெட் மந்திரி பதவி தனக்கு வேண்டும் என்ற தீரா அவா காரணமாக லல்லு மன்மோகன் சிங்கிடம் அடிக்கடி அழுத்தமாக இந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருந்தார். 'தேசத்திற்காக பதவி என்னும் பாரமான சிலுவையை சுமக்க ஆயத்தமாய் இருக்கின்றேன்.தங்கள் சித்தம் என் பாக்கியம் '

ராகுல் காந்தியிடம் லல்லுவின் இந்த அனத்தலை எப்படி சமாளிப்பது என பிரதமர் கலந்து ஆலோசித்தார். ராகுல் காந்தி பதில் :'மூன்று போட்டிகளில் லல்லு ஜெயித்தால் நாம் அவரை காபினெட் மினிஸ்டர் ஆக்கி விடலாம். அவர் சாதனை செய்த ரயில்வே துறையையே அவருக்கு தந்து விடலாம். '

போட்டி பிஹாரில் பிஹாரிகள்முன்னிலையில்.
பிஹாரிகள் பல்’லாயிரக்கணக்கில் கூடிவிட்டனர. எப்படியாவது லல்லு ஜெயித்து மத்திய மந்திரி ஆகிவிடவேண்டுமே!

மூன்று கூடாரங்கள். மூன்று போட்டி. மூன்றிலும் லல்லு வென்றாக வேண்டும்.
1 .முதல் கூடாரத்தில் ஒரு மது பாட்டில் . காக்டைல் சரக்கு.கடுமையானது. ஒரு மூன்று அவுன்ஸ் குடித்தாலே பயங்கரமாக ஏறிவிடும் . ஆனால் இந்த பாட்டிலில் முப்பது அவுன்ஸ். விஸ்கி,ரம்,பிராந்தி, எல்லாம் கலந்த மது பாட்டில். அந்த மது கலவையை raw ஆக மிச்சம் வைக்காமல் முழுதாக குடித்து விடவேண்டும்.
2. இரண்டாவது கூடாரத்தில் ஒரு சிங்கம் . பல்வலியால் துடிக்கிறது. அதன் சொத்தை பல்லை பிடுங்க வேண்டும்.
3.மூன்றாவது கூடாரத்தில் ஒரு வீராங்கனை. கராத்தேயில் பல மெடல்கள் வாங்கியவள். அவளுடன் உடலுறவு கொள்ளவேண்டும். ஆனால் அவள் சம்மதிக்கவே மாட்டாள். எங்கணமாயினும் அந்த பெண்ணை புணர்ந்து விடவேண்டும்.

கவனமாக மூன்று போட்டிகளையும் லல்லு மூளையில் ஏற்றிக்கொண்டார்.
பொதுவாக என் மனசு தங்கம்! ஒரு போட்டியின்னு வந்து விட்டா!

லல்லு முதல் கூடாரத்தில் நுழைந்து முழு பாட்டிலையும் காலி செய்ய இருபது நிமிடங்கள் ஆயிற்று.
கூடாரத்தை விட்டு வெளியே வந்தார். பிஹாரிகள் ஆரவாரம் விண்ணை பிளந்தது என்றால் மிகையாகாது.
பயங்கர போதையில் சிறுமூளை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கையை அசைத்து பாராட்டுக்களை லல்லு பெற்றுக்கொண்டு இரண்டாவது கூடாரத்திற்குள் தைரியமாக நுழைந்தார்.

சிங்கம் கர்ச்சனை.
" டே அயோக்கியா !" கோபமாக சிங்கம் போராடும் சத்தம்.
" என்னை விடுறா " சிங்கத்தின் பயங்கர கூப்பாடு.
"கொலை வெறி ஆயிடுவேண்டா "
" ச்சீ .. ச்சீய் .. அசிங்கம் பிடிச்சவனே ..விடுறா என்னை ..
உங்கொப்பன் மகனே நான் ஆம்பள சிங்கம்டா "

பிஹாரிகள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.

'' அவசரத்துலே அன்டாக்குள்ளேயே கை போகாது. சிங்கம் வாய்க்குள்ளே சொத்தைப் பல்லு. நல்ல போதையிலே கவனமா எப்படி புடுங்கப் போறாரோ தெரியலெயே.லல்லுவுக்கு உயிராபத்து ஏற்பட்டு விடக்கூடாது கடவுளே! பொல்லாத சிங்கம் அவரை கொன்று விடக்கூடாது.''

கடைசியில் பல நிமிடங்கள் நிசப்தம். ஒரே சஸ்பென்ஸ்.கூடாரத்தினுள் என்ன ஆயிற்று..?
முப்பது நிமிடம் கடந்தது. லல்லு இரண்டாவது கூடாரத்தில் இருந்து ரொம்ப களைப்பாக தள்ளாடியவாறு வெளியே வந்தார். பிஹாரிகள் கரகோஷம் மீண்டும் விண்ணைப் பிளந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ!

லல்லு வணங்கிய பாவனையில் தலைகுனிந்து ,கையை கூட்டத்தை நோக்கி ஆட்டி விட்டு குழறியவாறு கேட்டார் " அந்த பல்லு பிடுங்கவேண்டிய பொம்பளை எங்கே ? "


அந்தோ! மத்திய மந்திரி பதவி கை நழுவி விட்டது.
A slip between the cup and lip!
அறியப் படும் நீதி : குடி போதையில் குழப்பமில்லாமல் முக்கிய காரியங்களை, சவால்களை திட்டமிடுதல் மிகவும் சிரமம். வெற்றிகரமாக சவால்களை ஜெயிப்பதும் துர்லபம்.

ராகுல் காந்தி   முதல் போட்டியாக மது பாட்டிலை வைத்தது அதனால் தான். என்ன ஒரு மாபெரும் திருப்பம் எனில், முதல் கூடாரத்திலேயே லல்லு flat ஆயிடுவார்னு தப்பு கணக்கு ... ம்ம் ..ராகுல் தப்புகணக்கு நிறைய போடக்கூடிய ஆள் தானே!

.....

இந்த' பல்லு புடுங்க வேண்டிய பொம்பளை ' ஜோக் ரொம்ப ரொம்ப பழசு. ஓஷோ ரஜ்னீஷ் சொன்னது.ஆனால் மறைந்த சுஜாதா சில வருடங்கள் முன் இந்த ஹைதர் காலத்து அரத பழசை பெரிய பத்திரிகையில் எழுதி மகிழ்ந்திருந்தார்.

இப்போது இங்கே என்னால் 'இந்திய அரசியல் சாயம்' பூசப்பட்டு வேற்றுரு கொண்டு விட்டது . Art Buchwald இந்த பாணியில்தான் அந்தக்காலத்தில் அமெரிக்க அரசியல் பற்றி எழுதுவார்.


அவமானம் தாங்க முடியாமல் குன்றிப்போய்,தன் கற்பை காப்பாற்ற போராடிய சூழ்நிலையில், லல்லுவை நோக்கி கர்ஜித்த சிங்கத்தின் கோப ஆவேச வசனங்கள் ரீப்ளே :-
" டே அயோக்கியா !"
" என்னை விடுறா "
"கொலை வெறி ஆயிடுவேண்டா "
" ச்சீ .. ச்சீய் .. அசிங்கம் பிடிச்சவனே ..விடுறா என்னை ..உங்கொப்பன் மகனே நான் 'ஆம்பள' சிங்கம்டா "

3 comments:

  1. I laughed uncontrollably after a long time! Thanks.

    ReplyDelete
  2. Parthasarathi JayabalanFriday, 21 September, 2012

    ராஜநாயஹம் சார் - சிங்கத்தின் வசனங்கள் சரவெடி. நீங்க திருப்பூர்ல இருக்கீங்களா?

    ReplyDelete
  3. சிரிச்சி மாளல!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.