Share

Oct 2, 2019

Misinformation is cheap to produce




மாவு தான் எப்படியெல்லாம் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.
புளித்துப்போவதே கூட Flash news ஆகி சமூகத்தை பரபரப்பாக்கி விடுகிறது.
மருந்தான மாவுக்கட்டு சமீப காலமாக காவல் துறையின் கண்ணியம் காக்க பெரியதொரு முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று காலை ஒரு செய்தி சேனலில் போலீஸை தாக்கி விட்டு தலை மறைவாய் இருந்த இளைஞனை கைது செய்ய முயன்ற போது தப்பியோடிய அவன் தடுக்கி கீழே விழுந்து
கை காலில் அடி பட்டதாம்.
ஒரு கைக்கும் ஒரு காலுக்கும் மாவு கட்டு போட்ட போலீஸ்.
டி.வியில் பார்த்த போது அந்த இளைஞன் ஏதோ மாறு கால் மாறு கை வாங்கப்பட்டது போல படுத்துக்கிடக்கிறான்.
தாக்கியவனுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ் மனிதாபிமானம் செய்தியில் பெரிதாக சிலாகிக்கப்படுகிறது.
Media Industry! Fake news.
இரு பால் இளைய தலைமுறையினரையும் அவமானப்படுத்தும் காவல் தொழில் துறை.


கவிஞனின் கீழ் கண்ட ஒற்றை வாக்கியம் தான் எவ்வளவு நிதர்சனமானது.

”இந்திய இளம் பால்யம் மூலதனத்திற்கு கீழ் குற்றம் சாட்டப் பட்டு விட்டது.”
- யவனிகா ஸ்ரீராம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.