Share

Oct 18, 2019

சாரு நிவேதிதா ஃபேஸ்புக்கில் - 18.10.2019

ராஜநாயஹம்.  உங்களுக்கு என்னை விட வயசு கம்மியாகத்தான் இருக்கும்.  வயசு என்ன வயசு.

 துறவிக்கு 12 வயசாக இருந்தாலும் பால சந்நியாசி என்று பாதம் பணிகிறது இல்லையா?  உங்கள் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க விரும்புகிறேன்.
காரணம் இதுதான்: அசோகமித்திரன் கோயில் கதை எழுதினார்.  உலகின் அதியற்புதமான சிறுகதைகளில் ஒன்று.  அது பற்றி நீங்கள் பத்து வரி எழுதியிருக்கிறீர்கள்.  அதுவும் சரி.

ஆனால் முத்தாய்ப்பாக ஹேம்லெட்டிலிருந்து ரெண்டு வரி எடுத்துப் போட்டு அந்தக் கதையை ஆகாசத்துக்கு எடுத்துக் கொண்டு போய் விட்டீர்களே ராஜநாயஹம்.  நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்.  வயசு கம்மி என்றாலும் உங்கள் பாதம் பணிகிறேன்.

-- சாரு நிவேதிதா

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.