Share

Jul 29, 2019

புணர்ச்சி இயல்பு விகாரம்


புணர்ச்சி இயல்பு விகாரம்
இந்த வார்த்தை தொனி ஏதோ Sexual Perversion என்பது போல அர்த்தம் தருகிறதோ.
ஒரு ஃபாரின் ஜோக். இன்டியனைஸ், டமிலைஸ் செய்திருக்கிறேன்.
வாழ்க்கை வெறுத்துப்போன ஒரு கிழவி ஒரு பாலத்தின் மேல் தற்கொலை முயற்சியில் இருந்திருக்கிறாள். குதித்து தற்கொலை செய்யப்போகிறாள். பாலம் நல்ல உயரம். கீழே தண்ணீர் சுத்தமாக கிடையாது. குதித்தால் நொடியில் மரணம் நிச்சயம். உடனே,உடனே பிணமாகிப்போவாள்.
ஒரு சின்ன பயல் “ இருங்க, பொறுங்க” என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓடி வந்திருக்கிறான்.
கிழவி அவனைப் பார்த்தவுடன் நினைத்திருக்கிறாள்
‘யாரோ மனிதாபிமானி போல இருக்கு. ச்சே..சாக விடமாட்டான் போல இருக்கே’
அந்த அயோக்கிய பையன் பக்கத்தில் வந்தவுடன் மூச்சிறைக்க, அந்த கிழவியிடம் “நீங்கதான் தற்கொலை பண்ணிக்கப்போறீங்களே, உங்கள நான் ஒரு டொக்கு போட்டுக்கறேனே” என்று கேட்டிருக்கிறான்.
Kinky sex rogue.
சின்னப்பெண்ணான போதிலே,குமரியாய் இருந்த காலத்திலேயே, ஸ்திரிலோலர்களை கண்ட போதெல்லாம் கூந்தலை விரிச்சிப்போட்டு, ஒத்த முலைய பிச்சி வீசி, சிலம்ப உடச்சி “அத்தனையும் மாணிக்கப்பரல்டா” என்று ஆவேசமானவளாக்கும் அந்த கிழவி.

அந்த பழக்கம் சுடுகாடு வரைக்கும் இருக்குமல்லவா?
அயோக்கிய பயல் டொக்கு என்றவுடன் கிழவி பதறிப்போய் கூப்பாடு போட்டிருக்கிறாள்.
“ ச்சீ போடா பொறுக்கி, எனக்கு கற்பு தான்டா பொக்கிஷம்”
அயோக்கிய பையன் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் “சரி, பரவால்ல. நான் கீழ பாலத்துக்கு அடியில போய் வெயிட் பண்றேன்.”
ஒன்னாம் நம்பர் வெங்கம்பய.

தமிழ் இலக்கணத்தில் ’புணர்ச்சி இயல்பு விகாரம்’ வருகிறது.
தமிழ் இலக்கணம் என்றாலே எனக்கு படிக்கிற காலத்தில் பயம்.
கணக்கு, தமிழ் இலக்கணம் இரண்டுமே எனக்கு பிடிக்காத பாடங்கள்.
கணக்கு பள்ளி வாழ்க்கையோடு முடிந்து விட்டது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த காலத்திலும் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் இலக்கணம் விரட்டிக்கொண்டு வந்தது. விளக்கெண்ணெய் குடிப்பது போல இலக்கணம் படிக்க வேண்டியிருந்தது. வெறுப்பில்லை. பயம். என்ன படித்தேன் என்பதெல்லாம் எதுவுமே நினைவில் இல்லை.

படிக்கிற காலத்துக்குப்பின்னால தமிழ் இலக்கணம் பற்றி நினைத்து பார்க்க நேரம், அவசியம் இருந்ததே இல்லை. ரெண்டு மூணு நாளா 'புணர்ச்சி இயல்பு விகாரம்' போல வேறு சில ஞாபகம் வருகிறது. 'கூறு கெட்ட'ன்னு திட்டுறத போல' ஈறு கெட்ட எதிர் மறை வினையெச்சம்', அப்புறம் தேன்மாவு, புளிச்ச மாவு கணக்கா 'தேமா' , 'புளிமா' ..

சாலமன் பாப்பையா வகுப்பு போரடிக்கும். வகுப்பிற்கு வெளியே அவரிடம் பேசுவது ரொம்ப ஜாலி.தமிழ் டிபார்ட்மெண்ட்டின் ஜென்ட்டில் மேன் பாப்பையா.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.