Share

Sep 17, 2018

Out stealing horses – Per Petterson


பதினைந்து வயது பையன், அடுத்து அவனே அறுபத்து ஏழு வயதாகும்போது என இரண்டு கட்டங்கள். இதை வைத்து பெர் பெட்டர்சன் எழுதியுள்ள நார்வேஜியன் நாவல். "Out  stealing horses"

If I just concentrate I can walk into memory's store and find the right shelf with the right film and disappear into it....
அறுபத்தேழு வயதில் தனிமை. மௌனம். மரணத்தை எதிர்நோக்கிய நிலை. Trond craves Isolation.
அப்பா. Invariably, a father is a mystery to his son.
தன் நண்பன் ஜானுடைய அம்மாவை காதல் முத்தமிடும் தன் அப்பா.
“But that’s life. That’s what you learn from; When things happen.
Especially at your age. You just have to take it in and remember to think afterwards and
not forget and never grow bitter.”
இரண்டாம் உலகப்போரில் மறைமுகமான ஜெர்மன் எதிர்ப்பாளராக அப்பாவை அடையாளம் காணும் ட்ரோண்ட் எனும் பதினைந்து வயது சிறுவன். வாழ்ந்து முடித்த பின் அறுபத்து ஏழு வயதில் நனவோடையில் நீந்துகிறான்.
இயற்கையோடு ஒன்றி விடும் நாவல் களம்.
சிறுவர்கள் ட்ரோண்டும் ஜானும் காட்டில் காணும் சாகச அனுபவங்கள்.
ஜானின் ரெட்டை சகோதரர்கள்.
ட்ரோண்ட் தாயோடு பிறந்த மற்றொரு ரெட்டையர்கள்.
ஜானின் ரெட்டை சகோதரர்களில் ஒருவனான லார்ஸ் மற்றவனை பத்து வயது பாலகனாக இருக்கும்போது விளையாட்டாக சுட நேர்ந்து விடுகிறது.
தன் தாயோடு பிறந்த ரெட்டையர்களில் ஒருவர் ஜெர்மனியின் மறைமுக எதிர்ப்பாளனாக போலீஸால் சுடப்பட்டு இறக்கிறார்.
தன் அப்பாவைப் போலவே ட்ரோண்ட் தன் மகளுக்கே தெரியாமல் தனிமையில் மறைந்து வாழ ஆசைப்படுவது.
பதினைந்தாவது வயதில் ஒரு பாலகனாக தான் கண்ட லார்ஸ் இப்போது ட்ரோண்டின் அறுபத்தேழு வயதில் அண்டை வீட்டுக்காரனாக பார்க்க நேர்வது.
ஆற்றில் மரக்கட்டைகளை போடும் அப்பாவின் கடும் உழைப்பு பலனற்று போவது. அதில் கிடைக்கும் சொற்ப பணம்.
குடும்பத்தலைவன் இனி வரமாட்டான். A planned betrayal. 

காற்றின் வேகத்தில் வளைந்து கீழ் சாயும் பைன் மரங்கள் உடைந்து வீழ்ந்து விடுவதில்லை. மீண்டும் நிமிர்ந்து நிற்கின்றன.

கைக்கு கிடைத்த அந்த சின்ன தொகையை மகனுக்கு செலவழிக்கும் தாய். மகனோடு கை கோர்த்து நடக்கிறாள். கழுத்துப்புருஷன் இல்லையென்றால் வவுத்துப் புருஷன் தானே ஒரு பெண்ணுக்கு. நாவல் மீண்டும் பதினைந்து வயது சிறுவனின் வாழ்வின் வினோதமான இந்த நிகழ்வுடன் முடிந்து விடுகிறது. வாழ்வின் கதை எங்கே தான் நிறைவுறும்.
We do decide for ourselves when it will hurt.

Bittersweet memories.

……………….

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.