Share

Aug 2, 2018

சந்தேக தாமஸ் கேள்விகள்

ஆத்திமூக்காக்காரர்கள் தயவு செய்து ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
ஸ்டாலின் செயல்பாடு போற்றப்படுகிறது. தன் கட்சிக்காரர்களால் தாக்கப்பட்ட பிரியாணி கடை ஊழியர்களுக்கு, நேரில் போய் ஆறுதல் கூறுகிறார்.
எதிர் கட்சித்தலைவராக இருக்கும் போது இப்படி செய்யும் ஸ்டாலின் நாளை ஆட்சியை கைப்பற்றிய பின் இந்த கண்ணியத்தை கடைப்பிடிப்பார் என்று உறுதி சொல்ல முடியுமா? ஏனென்றால் Politician out of power is a different species.
When the devil is sick, it would be a saint.
இவர் முதல்வராய் இருக்கும் போது, இந்த வன்முறை நடந்த பின் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ, வட்டச்செயலாளர் போன்றவர்கள் பிரியாணி கடை, போலீஸ் என்று இரு பக்கத்திலும் தங்கள் பவரை காட்ட முடியாத படி ஸ்டாலின் மூக்கணாங்கயிறு போடுவாரா? அரெஸ்ட் செய்யமுடியாத படி குற்றவாளிகள் தலைமறைவாக கட்சி மேல் மூடிகளே உதவாத படி தடுப்பாரா?
இன்றைய நிலவரத்தில் அடுத்து ஆட்சிக்கு வர அதிக வாய்ப்பு தி.மு.கவுக்கு தான்.
இப்போதே அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க குடும்ப சொந்தங்கள் வற்புறுத்துகின்றதாக தகவல்.
அழகிரிக்கு கட்சியில் இடம் கொடுத்த பின் ஸ்டாலின் ஆட்சியில் மதுரையில் அராஜகம் நடக்காது என்று உத்தரவாதம் தரமுடியுமா? அப்படி மதுரையில் அழகிரி அடிப்பொடிகள் தடியெடுத்து தண்டல்காரர்களாக மாறினால் அண்ணனையோ, மதுரை ரௌடித்தனத்தையோ கண்டிக்கிற பேராண்மை அவருக்கு இருக்குமா?
ஏன்னா, ஏயன்னா, போன தடவ தீமூக்கா ஆட்சியில ஸ்டாலினே மதுரைக்குள்ள போக சிரமப்பட்டாரு.

சோரம் செய்யாமல், தீமை செய்யாமல் ஊரை ஆளும் முறைமை ஓர் புரத்துமில்லை என்று தான் பாரதி சொல்லியிருக்கிறான்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.