Share

Jul 28, 2018

எம்.ஜி.ஆர் காலமான தினம்



இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை.
எம்.ஜி.ஆர் காலமான தினம் வேறு யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்த வேண்டியவர்கள் திண்டாடிப்போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கிலை யாரும் முன் கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்க மாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச்சின்னங்கள். எம்.ஜி.ஆர் இறந்த தினம் இந்தத் துக்கச்சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது.
தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால், பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி, பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச்சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது. ஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர்கள் உடலை மருத்துவ மனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது.
யாரிடம் எதற்கு அனுமதி?
“என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க.”
”எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது.”
”அதுக்குள்ளே எடுத்துப் போயிடறோம்.”
“எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம் தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு.”
அப்பா பிணவறையில் இருந்து எழுந்து நடந்து போனார்.

- அசோகமித்திரன் “ யுத்தங்களுக்கிடையில்..” நாவலில்



..........................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.