Share

Mar 1, 2018

நுட்ப தொடர்பு


சரோஜா தேவி பல படங்களில் ஜெமினி கணேசனுடன் ஜோடியாக நடித்தவர். கல்யாண பரிசு, வாழ வைத்த தெய்வம், ஆடிப்பெருக்கு, பனித்திரை, வாழ்க்கை வாழ்வதற்கே, பணமா பாசமா, ஐந்து லட்சம், தங்கமலர், தாமரை நெஞ்சம், குலவிளக்கு, மாலதி என எத்தனையோ படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

சரோஜா தேவி எப்போதும் ஜெமினி கணேசனை அண்ணா என்று தான் அழைத்திருந்திருக்கிறார்.
கமல்ஹாசன் முதல் முதலாக ஸ்ரீதேவியை 15, 16 வயது பெண்ணாக சந்தித்ததாக சொல்கிறார். தினத்தந்தி செய்தி. மூன்று முடிச்சு படத்தில் நடிக்கும் போது ஸ்ரீதேவிக்கு 15,16 வயது.

27 படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. நிச்சயம் அவரே சொல்வது போல ஆயுளில் குறிப்பிட்ட ஒரு பகுதி.
ஆனந்த விகடனில் கமல் “ஸ்ரீதேவி என் தங்கச்சி” என்று சொல்கிறார்.’ அண்ணன் தங்கை போல தான் நானும் ஸ்ரீதேவியும்.’
“உங்களை அப்படி ஜோடியா கொண்டாடிட்டிருக்கிறப்ப இதெல்லாம் வெளியில போய்ச் சொல்லாதீங்க” என்பார்களாம்.
இது உண்மையென்றால் அபூர்வமான விஷயம்.
விரித்துப் பேச வேண்டியதில்லை.
............................................

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர்
ஒரு மடாதிபதியும் இளைய மடாதிபதியும் காவிரிக்கரையை ஒட்டிய ஒரு ஊரில் எழுந்தருளியிருக்கிறார்கள்.
பூஜை, வியாக்யானம் என்று திவ்விய நிகழ்வில் உள்ளூர் ஆண்கள், பெண்கள் கலந்து பக்தியில் ஊறி கரைந்திருக்கிறார்கள்.
ஒரு பெண் இளைய மடாதிபதியிடம் வந்து “ நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறாள்.
மூத்த சுவாமி இளைய மடாதிபதியை பார்த்து 
” காவிரி நீரில் இறங்கி நில்” என்று தண்டனையாக சொன்னாராம்.
மணிக்கணக்கில் இளைய மடாதிபதி இடுப்பு நனைய நீரில் நின்றாராம்.
ஊரை விட்டு கிளம்பும் போது தான் நீரை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டார் இளைஞனாய் இருந்த அந்த இளைய மடாதிபதி.
மூத்த சுவாமிகள் சொன்னாராம் “ உன்னிடமிருந்து காதல் கசிய, விரக பார்வை, சமிக்ஞை வராமல் நிச்சயம் அந்தப் பெண் உன்னிடம் அப்படி கேட்டிருக்கவே மாட்டாள்.”
.....................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.