Share

Jan 21, 2018

கல்லு மனசு


  ந.முத்துசாமிக்கு ’பெருந்தமிழர்  விருது’ ஆனந்த விகடன் வழங்கிய விழாவிற்கு போயிருந்த போது உட்காரு முன் ’அருவி’ அதிதி பாலனை சந்தித்தேன்.
அதிதியை சந்திக்க வாய்க்கும் என்று நினைத்தே பார்த்திராத எனக்கு Surprise.
Serendipitious Happy Discouvery!

அதிதி தேவோ பவ. அதிதி என்றால் விருந்தாளி என்று அர்த்தம்.தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள புதிய விருந்தாளி.விகடன் விழாவுக்கும் அன்று Guest அதிதி பாலன்.
தோரணையும் அகங்காரமுமாகவே பல நடிகைகளை பார்த்திருக்கிறேன்.
உட்கார்ந்து பேசும் போது அதிதி தெய்வசந்நிதானத்தில் அமர்ந்திருப்பது போல என்னை கை கூப்பி, கண் மூடி, தலை வணங்கி மரியாதை செய்து கொண்டேயிருந்தார்.
" You will see greater things in your life" என்று நான் ஆசி வழங்கினேன்.
.......................................


அருவி படம் பார்க்க என் மனைவியை அழைத்துச் சென்றிருந்தேன். சிரிக்க வேண்டிய காட்சிகளில் சிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் என் திருமதி. கடைசியில் கண் கலங்கி கண்ணீர் விட்டுக்கொண்டு.....
” என்னம்மா?” என்று நான் கேட்டேன்.
மீண்டும் அழுது கொண்டே தான் இருந்தார்.
நான் அழாமல் படம் பார்த்தேன் என்பதற்காக எனக்கு Compliment வேறு!
“கல்லு மனசுங்க உங்களுக்கு...கல்ல்லு மனசு. “
’கல்ல்ல்லு’ மனசு எனக்கு. ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்.

.................................................








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.