சாதாரணமா இந்த நவீன யுகத்தில் ஏழ்மையில் உள்ள ரொம்ப சுமார் பெண்களைப் பார்த்தால் "அட்டு பிகர் " என்று விவரிக்கிற காலம் இது .
முகத்தில் அம்மைத்தழும்பு. ஒரு ஏழைப்பெண் . இவள் பெயர் பார்வதி . இவளைப்பற்றி ந .சிதம்பர சுப்பிரமணியம் " என்று வருவானோ " என்ற சிறுகதையில் விவரிக்கும் அழகு : " லக்ஷ்மியின் அருள் அவளிடம் விழவில்லையானாலும் மகமாயி யின் கருணை அவள் மேல் விழுந்து முகத்தில் அநேக இடங்களில் பதிந்திருந்தது ."
வீட்டில் அறைக்குள் சூரிய வெளிச்சம் விழுவதும் பின் மறைவதும் சாதாரணம் தான் . இதை ந .பிச்ச மூர்த்தி ' வலி ' சிறுகதையில் எப்படி விவரிக்கிறார் :
கண்ணுக்கு எதிரே வெள்ளைத்துணி பறந்தது .... ஒன்றுமில்லை . எதிர்ப்புரத்து சன்னல் வழியாக சூரியன் நுழைந்து சுவரில் வெள்ளைத்துணியைக் கட்டிக்கொண்டிருந்தான் ...
( கொஞ்ச நேரங்கழித்து )
சூரியன் கட்டிய வெள்ளை வேஷ்டி சுவரில் பாதியும் தரையில் பாதியுமாகக் கிடந்தது .
(இன்னும் நேரங்கழித்து )
கீழே புரண்ட துணியை சூரியன் எடுத்துக் கொண்டு போய் விட்டான் .


Kalakkal padhivu :)