மகமாயி - வேஷ்டி

சாதாரணமா இந்த நவீன யுகத்தில் ஏழ்மையில் உள்ள ரொம்ப சுமார் பெண்களைப் பார்த்தால் "அட்டு பிகர் " என்று விவரிக்கிற காலம் இது .


முகத்தில் அம்மைத்தழும்பு. ஒரு ஏழைப்பெண் . இவள் பெயர் பார்வதி . இவளைப்பற்றி ந .சிதம்பர சுப்பிரமணியம் " என்று வருவானோ " என்ற சிறுகதையில் விவரிக்கும் அழகு : " லக்ஷ்மியின் அருள் அவளிடம் விழவில்லையானாலும் மகமாயி யின் கருணை அவள் மேல் விழுந்து முகத்தில் அநேக இடங்களில் பதிந்திருந்தது ."


வீட்டில் அறைக்குள் சூரிய வெளிச்சம் விழுவதும் பின் மறைவதும் சாதாரணம் தான் . இதை ந .பிச்ச மூர்த்தி ' வலி ' சிறுகதையில் எப்படி விவரிக்கிறார் :


கண்ணுக்கு எதிரே வெள்ளைத்துணி பறந்தது .... ஒன்றுமில்லை . எதிர்ப்புரத்து சன்னல் வழியாக சூரியன் நுழைந்து சுவரில் வெள்ளைத்துணியைக் கட்டிக்கொண்டிருந்தான் ...


( கொஞ்ச நேரங்கழித்து )


சூரியன் கட்டிய வெள்ளை வேஷ்டி சுவரில் பாதியும் தரையில் பாதியுமாகக் கிடந்தது .


(இன்னும் நேரங்கழித்து )


கீழே புரண்ட துணியை சூரியன் எடுத்துக் கொண்டு போய் விட்டான் .



2 comments:

  1. kalai said...:

    Kalakkal padhivu :)

  1. Kannan said...:

    Sir,

    The degree of your reading is unfathomable. So is your experience in various spheres of life. Ordinary mortals like me can't ever dream of having such knowledge and wisdom. We are fortunate even to know of someone like you. Keep up your good work. Sincerely, N.Ramakrishnan

Post a Comment

Followers