Share

Aug 24, 2009

Carnal Thoughts -22


சும்பன் மதுரை டவுன் ஹால் ரோட்டில் ரீகல் தியேட்டெர் எதிரில் அல்வாகடையில் அல்வா சாப்பிடும்போது குசும்பன் " டே ! எப்படிரா இருக்கே !" குசலம் விசாரித்தான் . சும்பன் அவனுக்கு அல்வா வாங்கி கொடுத்து " எனக்கு கல்யாணம் டா ! அடுத்த மாசம் . இன்னைக்கு தான் பொண்ணு பார்க்க போறேன் " -சந்தோசமாய் சொன்னான் .
குசும்பன் " பொண்ணு யாருடா "
சும்பன் " ஒத்தப்பட்டி தமன்னா "
குசும்பன் " டே அவளா ! ஒத்தப்பட்டிலே பாதி பேருக்கு மேலே அவளோட பழக்கம் டா ! வேணாண்டா. சொன்னா கேளு ஊருலே பாதி ஆம்பளைங்க அவள அனுபவிச்சிருக்கானுகடா !"
சும்பன் " என்ன சொல்றே . நிஜமாவா " பேயறைந்தாற்போல ஆகிப்போனான் .

.....
ஆனால் சும்பன் எதையுமே அலசி ஆராய்பவன்.'கொக்குக்கு ஒரே புத்தி ' ன்னு இருக்கக்கூடாது .எந்த விஷயத்தையும் பல கோணங்களில் பார்ப்பவன் .போலீஸ்காரன் அல்லவா !ஒற்றை பரிமாணத்தில் எதையுமே பார்ப்பது தவறு என்ற தீர்க்கமான எண்ணம் கொண்டவன் . தனக்குன்னு ஒரு பாணி வச்சிருக்கான் . அந்த முத்திரையை குத்திடுவான் .

ஒருமுறை எஸ் ஐ " கொலை நடந்த இடத்தில் கொலைகாரனின் கைரேகை மட்டும் தான் நமக்கு கிடைத்திருக்கிறது . இதிலிருந்து என்ன தெரிகிறது " என்று கான்ஸ்டேபிள் சும்பனிடம் கேட்டார் . யோசித்து அலசி சும்பன் மிகச்சரியாக நெத்தியில் அடித்தாற்போல சொன்னான் " கொலைகாரனுக்கு எழுதப்படிக்க தெரியாது என்று தெரிகிறது "
...
அடுத்த நான்காவது மாதம் மேல மாசி வீதியிலே சும்பன் வந்துகொண்டிருந்த போது குசும்பன் இவனை பார்த்து " டே எப்படிரா இருக்கே !"
சும்பன் : நல்லாயிருக்கேன் !எனக்கு கல்யாணமாகி மூணு மாசமாயிடுச்சி !
குசும்பன் : பொண்ணு யாருடா !
சும்பன் : ஒத்தப்பட்டி தமன்னா தான் .
குசும்பன் :( தன் தலையில் அடித்துக்கொண்டு ) டே ! அன்னைக்கே சொன்னேன் . கருமம் அந்த ஊருலே பாதி பேருக்கு மேல அவளோட .....
சும்பன் :(பயங்கர கோபமாகி ) நிறுத்து .நிறுத்து .போயி ஊரைப் பார்த்தேன் . ஒத்தப்பட்டி ரொம்ப ரொம்ப சின்ன ஊரு !
....

கல்யாணமான ஏழாவது வருடம் சும்பன் -தமன்னா தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள் .
சும்பனுக்கு ஒரு சின்ன சந்தேகம் . அந்த நான்காவது பயல் பற்றி . இந்த பக்கி மட்டும் தனக்கு பிறக்காதவன் ஆக இருப்பானோ . மற்ற பிள்ளைகளுக்கும் நான்காவது பயலுக்கும் நிரம்ப ,நிறைய்ய வித்தியாசம் தெரிந்தது .
தமன்னாவிடம் கேட்டே விட்டான் .
தமன்னா வெட்கப்பட்டுக்கொண்டே சற்றே செல்ல கோபத்துடன் சொன்னாள்:

"யோவ் ! அவன் தான்யா உனக்கு பிறந்தவன் ."

.. ..... ....



குசும்பன் தன் மற்றொரு நண்பன் நிசும்பனிடம் இந்த சும்பன் மனைவி குறித்து செய்த வியாக்கியானம் கீழ் வருமாறு :

"தமன்னா தமக்கென வாழா தியாகத்தின் சீலி . அன்னார் திருமணத்திற்கு முன்பே ஊருக்காக தன்னை கொடுத்தவள். செப்பும் தரமன்று .தான், தன் கணவன் என்று சுயநலமின்றி பரந்த மனசோடு ஒரு நாலு ஆம்பளைகளுக்கு பிள்ளை பெற்று - கணவனுக்கு கொடுத்திருக்கிறாள் . அவள் பிறந்த ஊர் ஒத்தப்பட்டி
' பிள்ளை கொடுத்தாள் விளை' என பிற்காலத்தில் பொதுமக்களால் புகலப்பட்டு ,புகழப்பட்டு பெருமையடையும் என்பது திண்ணம் .சரித்திரத்தில் இடம் பெறும் என்பதை சொல்லவும் வேண்டுமோ! "

....

4 comments:

  1. Nice joke.

    //ஒத்தப்பட்டி தமன்னா //

    பேர்ல any spelling mistake? :)

    ஆனாலும் அட்டகாசமான பேர்.

    ReplyDelete
  2. //"யோவ் ! அவன் தான்யா உனக்கு பிறந்தவன் ."//

    க்ளைமாக்ஸ் கொஞ்சம் மாத்தி எழுதின மாதிரி இருக்கே!

    ReplyDelete
  3. ' பிள்ளை கொடுத்தாள் விளை'
    Is it by any chance a reference to Su.Ra's short story
    'பிள்ளை கெடுத்தாள் விளை' which caused lots of controversy!!!

    ReplyDelete
  4. எனக்கு இங்கிலீஷில் இதுமாதிரி ஏதோ படிச்சமாதிரி ஞாபகம். நல்லா இருக்கு.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.