rajasundararajan said...
Dear Rajanayahem,
Your length of writing was very convenient to me, for I was using only office computer. Incidentally, I had been given compulsary retirement by 15th April. Yet, I am sad to know about your problem. Let us hope you get your opening very soon. Like you, I too maintain my pen name as it is modified by Pramil.
Take care.
Rajasundararajan
Monday, 06 April, 2009
...
வியாழக்கிழமை 06.08.09
'ஒரு இடைவேளை ' என்ற என் பதிவுக்கு வந்த மேற்கண்ட பின்னூட்டம் நான் எதிர் பாராத ஆச்சரியம் .
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் பின் பகுதியில்' உயிர் மீட்சி ' என்ற அழகான தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு . சுந்தர ராமசாமியின் அற்புதமான முன்னுரையுடன் . கவிஞர் ராஜசுந்தரராஜன் கவிதைகள் .
சட்டென்று நினைவுக்கு வருவது :
" சிறகுகள் சிறைப்படவில்லை .பறக்க முயன்றேன் . முடிய வில்லை .
கால்கள் கணனிக்குள் "
" வான பரியந்தம் உயர்ந்து நிற்கும் கோபுரத்தில் ஏறி நின்று
'இல்லை' என்று கைவிரிக்கும் சிலுவை "
ஒரு கவிதை 'ஓவியம் தீட்டும் தூரிகையால் ஒட்டடை எடுக்கக்கூடாதா ?' என வினவியது நிழலாடுகிறது .
அந்த நேரம் ராஜசுந்தரராஜனின் பல கவிதைகள் எனக்கு மனப்பாடம் . இப்போது சுந்தர ராமசாமி யின் ஒரு வார்த்தையில் சொல்வதானால் " நினைவின் ஞாபக அடுக்குகளில் காலத்தின் பனிக்கட்டி !"
என் வாழ்வில் நான் சந்திக்க முடியாமலே போன புனிதர் " ராஜ மார்த்தாண்டன் ". என்னுடைய துரதிர்ஷ்டங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று . ராஜ மார்த்தாண்டன் கொண்டாடிய கவிஞர் ராஜசுந்தரராஜன் என்பதும் இப்போது நினைவுக்கு வருகிறது .
மேற்கண்ட ராஜசுந்தரராஜனின் பின்னூட்டம் சொல்லும் விவரங்கள் கூட விஷேசமானவை தான் . அவருக்கு ராஜநாயஹம் ப்ளாக் வாசிக்க ' length of writing 'சௌகரியமாக உள்ளது . அலுவலகத்தில் கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறார் . சொந்த சோகத்திலும் எனக்கு ஆறுதல் சொல்கிறார் . என்னையும் அவருடன் ஒப்பு நோக்குகிறார் .பிரமிள் தான் இவர் பெயரையும் மாற்றியிருக்கிறார் .
பரண் மீது ஏறி " உயிர் மீட்சி " கவிதை தொகுப்பை தேடி துழாவி எடுக்கப்போகிறேன் .
....
சனிக்கிழமை 08.08.09
கண்டேன் "உயிர் மீட்சி " கவிதை தொகுப்பை ! பரணில் இருந்து கண்டெடுத்து விட்டேன் !!
நன்றி ஆறுமுகம் சார் ! உயிர் மீட்சி கவிதைகளை நீங்கள் அனுப்பவேண்டியதில்லை .தங்கள் நல்லெண்ணம் என்னை நெகிழ்த்தியது .
ராஜசுந்தரராஜனின் " உயிர் மீட்சி" யினில் மீண்டும் முக்குளித்தேன் . ஒவ்வொரு புத்தகமும் மீண்டும் புரட்டும்போது முன்பு புரட்டிய காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து தந்து விடுகிறது . இந்த உணர்வு இறுக்கம் கூட ரசிக்கத்தகுந்தது தான் .
சு.ரா முன்னுரையில் குறிப்பிடும் கவிதை
" வறட்சி "
வானுக்கு இல்லை இரக்கம் . பூமிக்கு
வெய்யில் என்று வருகிறது நெருப்பு
காற்றுக்கு விடை சொல்லி த்துக்கித்து இருக்கிறது வீதி .
அடி உறைகளும் ,கிணற்றுக்குள்
வாய் வறண்டு சுருண்டு விட்டன .
தாகித்து அணுகுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில் ?
கறங்கு வெள் அருவி
கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும் பாறை .
..
என் நினைவில் நிழலாடிய அந்த ஒட்டடை தூரிகை கவிதை
பயன்பாடு
ஓவியம் எழுதவோ தூரிகை -
ஒட்டடை அடித்தால் என்ன ?
வீணையின் நரம்பைத்
துணியுலர்த்தும் வேலைக்கு எடுத்தால் என்ன ?
எழுத்துக்கள் சொல்லாகி ப்பொருள் குறித்தல் விடுத்துப்
பார்வையை நிறுத்து க்காட்டும்
படிக்கற்கள் ஆகிறதை கண்டேன்
கண் மருத்துவமனையில் .
இந்த கவிதை "சிதம்பரம் நடராஜன் கால் உயர்த்துவது கொசு கடித்ததால் கூட இருக்கும் !" என்று சொன்ன க. நா .சு வை ஞாபகப்படுத்துகிறது . கவிதை அதிர்ச்சி !! எழுத்துக்கள் பொருள் குறிக்காமல் படிக்கற்களாகும் கண்மருத்துவமனை யதார்த்தம் !
கீழ்க்கண்ட இரு கவிதைகள்(வீடு ,துண்டிப்பு ) அந்த காலத்தில் நான் கவி மனதை தரிசித்த அனுபவத்தை தந்தது என்பதை சொல்ல வேண்டும் . பாரதியின் பரந்த மனசு உண்மைக்கவிஞனிடம் இயல்பாய் நேர்த்தியாய் வெளிப்படும் . கவிஞன் ஓரு பொன்மனச்செம்மல் .தமிழ் கவி பாரதி சுந்தர தெலுங்கினில் பாட்டிசைக்க விரும்பினான் . தன்னுடைய வறுமை நிலையிலும் சிங்க மராட்டியர் தம் கவிதைகளுக்கு சேர நாட்டு தந்தங்களை பரிசளிக்க வேண்டி ஏங்கினான் ! பரந்த தாராள மனதுடன் " காக்கை குருவி எங்கள் ஜாதி " என்று குதூகலித்தான் !
ராஜ சுந்தர ராஜன் காக்கையையும் அடைக்கலாங்குருவியையும் தன்னுடைய குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார் .
வீடு
வீடொன்று வேண்டும்
வெயிலையோ மழையையோ
பகைப்பதற்கு அல்ல .
காக்கையும் கூடு கட்டும் முட்டையிட
..
துண்டிப்பு
மழை இல்ல தண்ணி இல்ல
ஓரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்ல
அடக்கலாங்குருவிக்கு
கூடு கட்ட என் வீடு சரிபடல
நான் ஒன்டியாத்தான் இருக்கேன் இன்னும் .
இந்த கவிதைகளை எழுதிய தங்க மனம் தன்னுடைய 'கட்டாய வேலை ஒய்வு 'சூழலிலும் ராஜநாயஹம் ப்ளாக் எழுதமுடியாமல் போன சூழலை எண்ணி வருந்தியது இயல்பான விஷயம் தானே !
Dear Rajanayahem,
Your length of writing was very convenient to me, for I was using only office computer. Incidentally, I had been given compulsary retirement by 15th April. Yet, I am sad to know about your problem. Let us hope you get your opening very soon. Like you, I too maintain my pen name as it is modified by Pramil.
Take care.
Rajasundararajan
Monday, 06 April, 2009
...
வியாழக்கிழமை 06.08.09
'ஒரு இடைவேளை ' என்ற என் பதிவுக்கு வந்த மேற்கண்ட பின்னூட்டம் நான் எதிர் பாராத ஆச்சரியம் .
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் பின் பகுதியில்' உயிர் மீட்சி ' என்ற அழகான தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு . சுந்தர ராமசாமியின் அற்புதமான முன்னுரையுடன் . கவிஞர் ராஜசுந்தரராஜன் கவிதைகள் .
சட்டென்று நினைவுக்கு வருவது :
" சிறகுகள் சிறைப்படவில்லை .பறக்க முயன்றேன் . முடிய வில்லை .
கால்கள் கணனிக்குள் "
" வான பரியந்தம் உயர்ந்து நிற்கும் கோபுரத்தில் ஏறி நின்று
'இல்லை' என்று கைவிரிக்கும் சிலுவை "
ஒரு கவிதை 'ஓவியம் தீட்டும் தூரிகையால் ஒட்டடை எடுக்கக்கூடாதா ?' என வினவியது நிழலாடுகிறது .
அந்த நேரம் ராஜசுந்தரராஜனின் பல கவிதைகள் எனக்கு மனப்பாடம் . இப்போது சுந்தர ராமசாமி யின் ஒரு வார்த்தையில் சொல்வதானால் " நினைவின் ஞாபக அடுக்குகளில் காலத்தின் பனிக்கட்டி !"
என் வாழ்வில் நான் சந்திக்க முடியாமலே போன புனிதர் " ராஜ மார்த்தாண்டன் ". என்னுடைய துரதிர்ஷ்டங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று . ராஜ மார்த்தாண்டன் கொண்டாடிய கவிஞர் ராஜசுந்தரராஜன் என்பதும் இப்போது நினைவுக்கு வருகிறது .
மேற்கண்ட ராஜசுந்தரராஜனின் பின்னூட்டம் சொல்லும் விவரங்கள் கூட விஷேசமானவை தான் . அவருக்கு ராஜநாயஹம் ப்ளாக் வாசிக்க ' length of writing 'சௌகரியமாக உள்ளது . அலுவலகத்தில் கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறார் . சொந்த சோகத்திலும் எனக்கு ஆறுதல் சொல்கிறார் . என்னையும் அவருடன் ஒப்பு நோக்குகிறார் .பிரமிள் தான் இவர் பெயரையும் மாற்றியிருக்கிறார் .
பரண் மீது ஏறி " உயிர் மீட்சி " கவிதை தொகுப்பை தேடி துழாவி எடுக்கப்போகிறேன் .
....
சனிக்கிழமை 08.08.09
கண்டேன் "உயிர் மீட்சி " கவிதை தொகுப்பை ! பரணில் இருந்து கண்டெடுத்து விட்டேன் !!
நன்றி ஆறுமுகம் சார் ! உயிர் மீட்சி கவிதைகளை நீங்கள் அனுப்பவேண்டியதில்லை .தங்கள் நல்லெண்ணம் என்னை நெகிழ்த்தியது .
ராஜசுந்தரராஜனின் " உயிர் மீட்சி" யினில் மீண்டும் முக்குளித்தேன் . ஒவ்வொரு புத்தகமும் மீண்டும் புரட்டும்போது முன்பு புரட்டிய காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து தந்து விடுகிறது . இந்த உணர்வு இறுக்கம் கூட ரசிக்கத்தகுந்தது தான் .
சு.ரா முன்னுரையில் குறிப்பிடும் கவிதை
" வறட்சி "
வானுக்கு இல்லை இரக்கம் . பூமிக்கு
வெய்யில் என்று வருகிறது நெருப்பு
காற்றுக்கு விடை சொல்லி த்துக்கித்து இருக்கிறது வீதி .
அடி உறைகளும் ,கிணற்றுக்குள்
வாய் வறண்டு சுருண்டு விட்டன .
தாகித்து அணுகுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில் ?
கறங்கு வெள் அருவி
கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும் பாறை .
..
என் நினைவில் நிழலாடிய அந்த ஒட்டடை தூரிகை கவிதை
பயன்பாடு
ஓவியம் எழுதவோ தூரிகை -
ஒட்டடை அடித்தால் என்ன ?
வீணையின் நரம்பைத்
துணியுலர்த்தும் வேலைக்கு எடுத்தால் என்ன ?
எழுத்துக்கள் சொல்லாகி ப்பொருள் குறித்தல் விடுத்துப்
பார்வையை நிறுத்து க்காட்டும்
படிக்கற்கள் ஆகிறதை கண்டேன்
கண் மருத்துவமனையில் .
இந்த கவிதை "சிதம்பரம் நடராஜன் கால் உயர்த்துவது கொசு கடித்ததால் கூட இருக்கும் !" என்று சொன்ன க. நா .சு வை ஞாபகப்படுத்துகிறது . கவிதை அதிர்ச்சி !! எழுத்துக்கள் பொருள் குறிக்காமல் படிக்கற்களாகும் கண்மருத்துவமனை யதார்த்தம் !
கீழ்க்கண்ட இரு கவிதைகள்(வீடு ,துண்டிப்பு ) அந்த காலத்தில் நான் கவி மனதை தரிசித்த அனுபவத்தை தந்தது என்பதை சொல்ல வேண்டும் . பாரதியின் பரந்த மனசு உண்மைக்கவிஞனிடம் இயல்பாய் நேர்த்தியாய் வெளிப்படும் . கவிஞன் ஓரு பொன்மனச்செம்மல் .தமிழ் கவி பாரதி சுந்தர தெலுங்கினில் பாட்டிசைக்க விரும்பினான் . தன்னுடைய வறுமை நிலையிலும் சிங்க மராட்டியர் தம் கவிதைகளுக்கு சேர நாட்டு தந்தங்களை பரிசளிக்க வேண்டி ஏங்கினான் ! பரந்த தாராள மனதுடன் " காக்கை குருவி எங்கள் ஜாதி " என்று குதூகலித்தான் !
ராஜ சுந்தர ராஜன் காக்கையையும் அடைக்கலாங்குருவியையும் தன்னுடைய குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார் .
வீடு
வீடொன்று வேண்டும்
வெயிலையோ மழையையோ
பகைப்பதற்கு அல்ல .
காக்கையும் கூடு கட்டும் முட்டையிட
..
துண்டிப்பு
மழை இல்ல தண்ணி இல்ல
ஓரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்ல
அடக்கலாங்குருவிக்கு
கூடு கட்ட என் வீடு சரிபடல
நான் ஒன்டியாத்தான் இருக்கேன் இன்னும் .
இந்த கவிதைகளை எழுதிய தங்க மனம் தன்னுடைய 'கட்டாய வேலை ஒய்வு 'சூழலிலும் ராஜநாயஹம் ப்ளாக் எழுதமுடியாமல் போன சூழலை எண்ணி வருந்தியது இயல்பான விஷயம் தானே !


Sir.. Happy to see Mr. Rajasundararajan on your Blog.
Pls visit ::http://vedikai.blogspot.com/2009/03/blog-post_23.html