Share

Aug 18, 2009

ஆ.மாதவன் நாவல் "கிருஷ்ணப் பருந்து"

' மனசு மேலே போக போக ,உடம்பு என் பங்கு எங்கே ?என் பங்கு எங்கே ? என்று கேட்குமாம் . பருந்து எவ்வளவு உயரே உயரே பறந்தாலும் அதன் பார்வை கீழே கிடக்கும் செத்த எலி மேலே தான் இருக்குமாம் ' இதை தி.ஜானகிராமன் 'யது நாத்தின் குருபக்தி ' என்ற நேர்த்தியான சிறுகதையில் சொல்வார்.கதையில் வருகிற ராஜகுரு ஒரு தோட்டிபெண்ணோடு படுத்துகிடப்பார் . அது பற்றி தான் ஜானகிராமன் இப்படி சொல்கிறார் . நல்லவேளை ! தி ஜா இந்த கதையை ஐம்பது வருடம் முன் எழுதி விட்டார் .இப்போது என்றால் செத்த எலி , தோட்டிபெண் இரண்டையும் இணைத்து அலசி ஆராய்ந்து திஜாவை ஒரு தலித் விரோதி யாக சித்தரித்திருப்பார்கள் . சுந்தர ராமசாமி 'பிள்ளை கெடுத்தாள் விளை' கதை எழுதிவிட்டு அனுபவித்த வியாகுலம் கொஞ்சமா ?

1989 ல் தி .ஜானகி ராமனுக்கு ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டேன்.ஒவ்வொரு தபாலிலும் ஒரு ரூபாய் ஸ்டாம்பு ஒட்டி அந்த காலத்தில் ஒரு ஆயிரம் பேருக்கு அனுப்பினேன் . அப்போது ஆ .மாதவன் எனக்கு அவர்
1983
ல் வெளியிட்ட தி ஜா நினைவு மலர் ஒன்றை அனுப்பி கடிதம் எழுதியிருந்தார் . அவருக்கும் திஜாவிற்கும் இடையிலான அழகிய நட்பை பற்றி எழுதி அந்த நட்பு தான் இந்த தி ஜா நினைவு மலராக வெளிவந்தது என குறிப்பிட்டு இந்த நினைவு மலர் உங்களை மகிழ்ச்சியடைய செய்யும்
R.P. ராஜநாயஹம் ! என்றும் உற்சாகமாக குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது .
இருபத்தாறு வருடத்திற்கு முன் 1982ல் நான் படித்த கிருஷ்ணப் பருந்து நாவலும் தான் பசுமையாக நினைவில் இருக்கிறது !


கிருஷ்ணப் பருந்து நாவலில்
Protagonistசாமியப்பா நல்ல வாசகர் . நிறைய படிப்பவர் .
Widower .பரோபகாரி . பழைய பாடல் ரசிகர் . சாமியப்பா ரசிக்கும் பாடல் ஒன்று என்
Favourite!
" பிரேமையில் யாவும் மறந்தேனே !ஜீவனமுனதன்பே ! என் அன்பே "
'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன் ஜி என் பாலசுப்ரமணியமும் இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல் !
எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே !
ஜி என் பி : ஜீவனமுனதன்பே !
எம் எஸ் : என் அன்பே !
ஆஹா !ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல். சகுந்தலை படத்தில் எத்தனை முறை இந்த இரண்டு சங்கீத மேதைகள் துஷ்யந்தன் -சகுந்தலையாக பாடுவதை பார்த்தாலும் ஆனந்தம் கூடிக்கொண்டு தான் போகும் .

நாவலில் ஒரு சின்ன கதை ஆ .மாதவன் சொல்கிறார் .
கவி உள்ளூரின் பக்தி தீபிகையின் கதை !
- சனந்தனன் பண்டித சிரேஷ்டன் . தபஸ்வி . இவன் 'நரசிம்ம அவதாரத்தை ' காணவேண்டும் என்று தீரா ஆசை கொண்டு கானகத்தில் கடும் தவம் செய்கிறான் . மிக கடுமையான தவம் . புற்று வளர்ந்து விடுகிறது .
சாத்தன் என்ற வேடன் இதை பார்த்து விட்டு சனந்தனன் மீது இரக்கம் கொண்டு கேட்கிறான் ' சுவாமி ! தங்களுக்கு ஏதேனும் மிருகம் தேவையானால் நான் கொண்டு வந்து தருவேனே .'
சனந்தனன் கூறுகிறான் ' நான் வேண்டுவது ஒரு மிருகத்தை தான் . நரசிம்மம் !'

வேடன் சாத்தன் உடனே தேடலை ஆரம்பித்து விடுகிறான் .
ஊண் இன்றி உறக்கம் இன்றி நரசிம்ம நாமாவளியுடன் காடு ,மலை ,குகை ,வெட்டவெளி ஒன்று விடாமல் தேடி அலைகிறான் ." ஏய் நரசிம்மமே ! என் மணி சிங்கமே !" கூவிகொண்டே தேடுகிறான் . ஏகாக்கிர தியானம் . சாத்தன் உடைய 'தேடல் தீ ' பாற்கடல் குளிர்ச்சியை சூழ்ந்து எரிக்க ஆரம்பித்தபோது பரந்தாமன் எழுந்து ' என்னடா இது சோதனை ! பாற்கடலுக்கு வந்த சோதனை !' என சலித்து கானகம் வந்து நரசிம்மமாகி சாத்தன் முன் காட்சி தருகிறான் .வேடன் உடனே ஒரு புற்கொடியாலே நரசிம்மத்தின் கழுத்தில் கட்டி சனந்தனன் தவம் செய்யும் இடத்திற்கு இழுத்து கொண்டு வருகிறான் . சனந்தனனுக்கு நரசிம்மம் மேல் கோபம் வந்து விடுகிறது .சடவு . வருத்தம் .
" என்னய்யா . என்னுடைய அந்தஸ்தென்ன , யோக்கியதை என்ன . இப்படி ஒரு வேடன் தானா உம்மை எனக்கு introduce பண்ணிவைக்கணும் ."

நரசிம்மம் சொல்கிறார் " சனந்தனா ! உன் தவம் ' பனி' யாகத்தான் உதிர்ந்ததேயன்றி என்னை இழுத்து வரும் வெள்ளமாக பொங்கவில்லை .வேடன் சாத்தன் என்னை ஆத்மார்த்தமாக தேடினான் . அதனால் நான் கட்டுப்பட்டேன் ."

Snobbery க்கு சரியான சவுக்கடி !

சாமியப்பா கடைசி அத்தியாயத்தில் வேலப்பன் நாயருடைய பெஞ்சாதி ராணி மீது கொள்ளும் மையல் பருந்தின் தேடல் போன்றது . ஆனால் நரசிம்ம அவதாரம் போன்று ரொம்ப Instant !ராணி தன்னுடைய கணவன் வேலப்பன் விடுதலையாக சாமியப்பாவின் உதவியை வேண்டி தன்னையே அவருக்கு தர உடன்படும்போது சாமியப்பா உடனே , உடனே திருந்தி விடுகிற மாதிரி தெரிகிறது .

...

1 comment:

  1. "நரசிம்மம் சொல்கிறார் " சனந்தனா ! உன் தவம் ' பனி' யாகத்தான் உதிர்ந்ததேயன்றி என்னை இழுத்து வரும் வெள்ளமாக பொங்கவில்லை .வேடன் சாத்தன் என்னை ஆத்மார்த்தமாக தேடினான் . அதனால் நான் கட்டுப்பட்டேன் ." அருமை அருமை.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.