குறிப்பிட்ட தெரு வழியாக
குருவி மண்டையன் சகாக்கள் ( மொட்டயன், சட்டி மண்டையன்,
ஒத்த காதன், தொல்ல, ஆட்டு மூக்கன், மண்ட மூக்கன்) சமேதராக செல்ல நேரும் போதெல்லாம், முனையில் உள்ள வீட்டை நிமிர்ந்து பார்த்து சத்தமாக கூப்பாடு போடுவான் "ஆலபாட பவனம்".
எப்போதும் இப்படி ஆலபாட பவனம் தான்.
ஆலபாட பவனம்னு கத்துவதற்காகவே சைக்கிளில் அந்த தெரு வழியாக போவதுண்டு.
சலித்துப்போய் வீட்டு ஓனர் வெளியே வந்து
" இந்தாப்பா எங்க வீடு ஆல்பர்ட் பவனம்ப்பா'
குருவி மண்டையன்" இல்லயே. ஆலபாட பவனம்னு தான எழுதியிருக்கு. ஆ..ல..பா..ட பவனம் "
அந்த வீட்டுக்காரர் " புள்ளி கழண்டு விழுந்துடுச்சி..."
தொடர்ந்து தெருவே கேட்கும்படி அவரும் கூப்பாடு கூவினார்
"ஆல்பர்ட் பவனம் ஆல்பர்ட் பவனம்
ஆல்பர்ட் பவனம்"
.....
சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி ரிக்கார்டிங் ஒர்க். கோவையில் இருந்து முதல் நாள் வந்து தங்கி காலை சாப்பிட போன ஹோட்டல் பார்த்ததும் பழைய ஞாபகம்.
ஹாட்டல் ஆ ந்தா
HOTEL NAND
.....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.