Share

Jul 21, 2025

தூவானம்

"இந்த கிருஷ்ணபரமாத்மா 
பல சிசுபாலர்களால் அவமானப்படுத்தப்பட்டார். 
ஒரு இலக்கியப் பாரம்பரியத்தையே துவக்கி வைத்து இந்த துரோணர் ஏகலைவர்களாலேயே கூட
 உதா சீனப்படுத்தப் படுகிறார்.
வீழ்ந்த பின்னும் மறைந்த பின்னும் சிகண்டிகளால் அம்புத் துளைப் படுகிறார் இந்த பீஷ்மர்."
(1989 நவம்பர் மாதம் 19ம் தேதி புதுவை பல்கலைக்கழகத்தில் 
R.P. ராஜநாயஹம் எழுதி வாசித்த கட்டுரையில் மேற்கண்ட வரிகள்.
"மேலும்" இலக்கிய இதழில் 1990 மே மாத இதழில் வெளி வந்தது.)

.

தூவானம் 
- R.P. ராஜநாயஹம் 

சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோர் ஜானகிராமன் மீது அசூயை கொண்டிருந்தால் அது கற்றோர் காய்ச்சல், வித்துவ செருக்கு காரணமாக 'தன் இருப்பு' குறித்த பதற்றம் சம்பந்தப்பட்ட மனோதத்துவ சிக்கல்.
தி.ஜா. வின் மகத்தான சாதனை இவர்களை தள்ளாட்டம் காணச்செய்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? 
அசோகமித்திரனுக்கும் சு.ராவுக்கும் இருந்த பொறாமை புகைச்சல் பற்றி அவர்கள் தனிப்பேச்சில் அடிக்கடி உணர்ந்ததுண்டு. இத்தனைக்கும் கவனமாக உஷாராக வார்த்தை பிரயோகம் செய்வார்கள். கிரா பற்றி சு.ராவுக்கும் சு.ரா பற்றி கி.ராவுக்கும்.
இந்திரா பார்த்தசாரதிக்கு இவர்கள் பற்றி இல்லை என்று யார் சொல்ல முடியும்?

எழுத்துலக பிரபலங்கள் மற்ற  கலைஞர்கள் போல அதீத தன் முனைப்பு கொண்டவர்கள்.
தன்னைப்பற்றியே தான் சிலர் கவனமாக, பலர் வெளிப்படையாக பேசுவர்.
தான் சாதனையாளன் என்றே மனம் முழுக்க வியாபகம்.

கடுமையாக தி.ஜாவை தாக்கிய பிரபஞ்சன் பின்னர் 'ஜானகிராமனை மிஞ்ச ஆளேயில்லை' என்றதும் 
மிக கடுமையாக தி.ஜாவை நாலாந்தர எழுத்தாளராக கருத்து கொண்டிருந்த சாரு நிவேதிதா உன்னதமானவராக கொண்டாடுவதும் பார்க்க முடிந்திருக்கிறது.

மழ விட்டாலும்....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.