ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர
தேரோட்டம்
பதநி நொங்கு
பதநி நொங்கு வண்டியை தள்ளிக்கொண்டு வந்த பெரியவரிடம்
ராஜநாயஹம் " சார், பதநி நல்லா இருக்கா?"
பதநிக்காரர்: இருபத்தைந்து வருடத்திற்கு முன்பே பதநியில கலப்படம் செய்றத நிறுத்திட்டேன்.
(ஸ்ரீவி) திருவண்ணாமலை கோயில்ல புரட்டாசி சனிக்கிழம கலப்பட பதநிய விக்க நின்னேன். மூணு மணி நேரமா விக்கவேயில்ல. பசி மயக்கம்.
'கோவிந்தா, மன்னிச்சிடு. உன் மேல ஆணை. இனிமே கலப்பட பதநி விக்க மாட்டேன். என்ன நீ காப்பாத்து கோவிந்தா'ன்னு கண்ணீர் விட்டேன்.
பிரார்த்தனயா தேங்காய் ஒடச்சேன். தேங்கா சில்லுகள பொறுக்கி எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து வீட்டுக்காரி கிட்ட குடுத்து 'தேங்கா சட்னி அரச்சி இத நம்ம ரெண்டு பேரு மட்டும் சாப்பிடனும். வேற யாருக்கும் குடுக்காத.' ன்னேன்.
"அப்பறம் மறு நாள் கலப்படமே செய்யாத சுத்த பதநியோட திருவண்ணாமல போனேன். ஒடனே வித்துப்போச்சி. அன்னயிலருந்து எப்பவும் சுத்தமான பதநி தான் விக்றேன்"
நொங்கு பதநி சுந்தரமூர்த்தி.
பன ஓலையில் நொங்குப்பதநி
ரொம்ப ருசி.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.