Share

Nov 24, 2023

காலமென்னும் நதியினிலே புஷ்பவல்லி



1940களில் நட்சத்திர நடிகை பேரழகி புஷ்பவல்லி 

பின்னர் 1950களின் ஆரம்பத்தில் 
ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவி.

சாவித்திரியை ஜெமினி கணேசன் வீட்டுக்கு கூட்டிவந்த போது விளையாட்டாக புஷ்பவல்லி 
" சாவித்திரியையும் கட்டிக்கங்க " என்று சொன்னபோது வானத்திலிருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் "ததாஸ்து " என்று சொல்லிவிட்டார்கள். 
விஷயம் சீரியஸ் ஆகி சாவித்திரி ஜெமினியுடன் இணைந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர் புஷ்வல்லி தான். 
வாகினி ஸ்டுடியோவில் சாவித்திரி மீது காரை ஏற்ற முயற்சிக்கிற அளவில் கடுமையான கோபம். 

சாவித்திரி பிணைப்பு அதிகமானவுடன் புஷ்பவல்லி குடும்பத்தை விட்டு ஜெமினி ஒதுங்கினார். 
ஒதுங்குதல் என்பதை விட புஷ்வல்லிக்கும் ஜெமினிக்கும் கடும்பகை அப்போது ஏற்பட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

ஜெமினி கணேசனை விட்டு பிரிந்த பின் புஷ்பவல்லிக்கு ஒரு மியூசிக் டைரக்டருடன் வாழும்படியான நிர்ப்பந்த சூழல் ஏற்பட்டிருக்கிறது. அந்த மியூசிக் டைரக்டருக்கும் புஷ்பவல்லிக்கும் தனலட்சுமி, ஷேசு என்று இரண்டு புத்ரங்கள்.
அந்த தெலுங்கு மியூசிக் டைரக்டர் பெயர் பிரகாஷ் ராவ் என்று கேள்வி.
காலக் கண்ணாடி காட்டிய காட்சி -
1964ல் கே.எஸ். ஜி 'கை கொடுத்த தெய்வம்'  படத்தில் 
சிவாஜிக்கு அம்மாவாக புஷ்பவல்லி.
Junior artiste.

ஜெமினியின் மூன்றாவது மனைவி சாவித்திரி கதாநாயகி.
சாவித்திரிக்கு பின்னால் அமர்ந்திருப்பவர் புஷ்பவல்லி.

கை கொடுத்த தெய்வம் சிவாஜிக்கு பெற்றோராக R. பாலசுப்பிரமணியமும் புஷ்பவல்லியும்.
(எழுத்தாளர் அனுராதா ரமணனின் தாத்தா R.பாலசுப்ரமணியம்)
 காட்சியில் புஷ்பவல்லிக்கு க்ளோஸ் அப் ஷாட் கிடையாது.

1970களில் பிரபல இந்தி நடிகையாக கொடி கட்டிய ரேகாவின் தாய் 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.