Share

Oct 9, 2020

சங்கீத கலாநிதி புல்லாங்குழல் ரமணி

 இன்று சங்கீத கலாநிதி புல்லாங்குழல் ரமணியின் நினைவு நாள். 

மாலியின் சீடர். 


தியாக பிரும்மத்தின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் எவ்வளவோ ஜாம்பவான்கள், இசைப்பேரரசிகள்,                   இளம் பாடகர்கள் பாடி எத்தனை ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன். 

ரமணியின் புல்லாங்குழலில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை கேட்பது விசேஷ தனி அனுபவம். 


2001ம் ஆண்டு தியாக பிரும்ம ஆராதனை திருச்சி மகாத்மா காந்தி வித்யாலயாவில் ஆலத்தூர் சுப்பையரின் மகன் ஆலத்தூர் தியாகராஜன் நடத்திய போது ரமணியின் கச்சேரி அன்று மாலை நடந்தது. 


இந்த புகைப்படம் 

காலையில் நடந்த பல 

இளம் பாடகர்கள் ஆளுக்கொரு கீர்த்தனை பாடினர் 

ஒரு பெண் ரஞ்சனி ராக துர்மார்கசரா பாடிய போது எடுக்கப்பட்டது என்பது துல்லியமாக நினைவில். 


ரமணி கேட்டு ரசித்து இளம் கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். உண்மையில்  தாங்கள் பாடுவதை ரமணி கேட்கிறார் என்பதே அவர்களை பரவசப்படுத்தியது. 


ரமணியின் அருகில் நான் சராக் தீன் டீ-சர்ட்டில். எனக்கு இடப்புறம் ஆலத்தூர் தியாகராஜனின் சகோதரர் வெங்கட்ராமன்.


மாலையில் ரமணியின் புல்லாங்குழல் இசைத்த 

பூர்ணசந்திரிகா ராக 'தெலிசி ராமா' 

இப்போது கூட காதில் பூவாய் வருடுகிறது.

.. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.