Share

Oct 19, 2020

ந. முத்துசாமியும் தி. ஜா. மரப்பசுவும்

 தி. ஜா மரப்பசு நாவலுக்கு 

சினிமாவுக்காக 

ந. முத்துசாமி முழுமையாக ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். 

மரப்பசு நாவலை படமாக்க ஸ்ரீதர் ராஜன் 

செய்த முயற்சிக்காக 

முத்துசாமி இதை செய்திருக்கிறார். 

எண்ணம் ஈடேறவில்லை. 


"மரப்பசு ஸ்கிரிப்ட் எங்கே சார்? "


முத்துசாமிக்கு சொல்ல முடியவில்லை. 

" இங்கே தான் வீட்டில எங்கேயோ இருக்கணும். "


அவருடைய பிறந்த ஊர் புஞ்சைக்கு 

மனம் தாவி விடும். 

" புஞ்சயில தீட்டான பெண்கள் அதிகாலை                                   குளத்துக்குப் போய் குளிச்சிட்டு வந்து 

கொஞ்சம் பச்சரிசியுடன்

 ரெண்டு உப்பு சேத்து சாப்பிடுவாங்க"


" நேட்டால் ஆர். கே நாயுடு தென்னாப்பிரிக்காவில் இருந்தார். புஞ்சக்காரர். அங்க இருக்கும் போது இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை                  கிண்டல் செய்திருக்கிறார். பிரச்சினையாகிடுச்சு. அதனால தென்னாப்பிரிக்காவில் இருந்து கிளம்பி இங்க புஞ்சைக்கு வந்துட்டார். நேட்டால் நாயுடு எங்கப்பாவோட நல்ல சிநேகிதர். நான் சின்னப்பையனா இருக்கச்ச 

அந்த நேட்டால் நாயுடு வீட்ல சாப்பிட்டிருக்கேன். 

எனக்கு ஏழு வயசு இருக்கச்ச 

எங்கப்பா செத்துப்போயிட்டார் "


முத்துசாமி மனம் புண்படும்படி

 பிறர் நடந்து கொள்ளும் போது 

வேதனையோடு சொல்வார்

 " அற்ப சுபாவங்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை "


" விழாக்கள், அதி்ல் நடக்கும் சடங்குகள் மரபு சார்ந்த விஷயங்கள். சடங்குகள் அவசியம். ஒருவருடைய இழப்புக்கு சடங்குகள் தான் முற்றுப்புள்ளி வைக்கின்றன" என்பார்.


... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.