Share

Oct 4, 2020

புள்ளமங்கை பூத கணங்கள்

 தியோடர் பாஸ்கரன் 'அவசியம் நீங்கள் கும்பகோணம் அருகே யுள்ள புள்ளமங்கை பூதகணங்கள் பார்க்க வேண்டும்' என்று 

ந. முத்துசாமியிடம் சொல்லியிருக்கிறார். 

அகன்ற விழிகளுடன், விஷமப் புன்னகை பூக்கும்           குள்ள பூதங்கள். 


ந. முத்துசாமி (சிட்டி) சிவபாத சுந்தரத்தின் மருமகன் ராஜீவுடன் போய் அந்த புள்ளமங்கை பூதகணங்களை பார்த்திருக்கிறார். 


இதை என்னிடம் சொல்லி விட்டு 

அவர் சொன்ன அடுத்த வார்த்தை 

'கூத்துப்பட்டறை செலவில்'


இது தான் முத்துசாமி முத்திரை. 

இதை சொல்லத்தேவையில்லை.

 ஆனால் முத்துசாமி இப்படியெல்லாம் 

ஏதேனும் சொல்வார்.

"நம்ம ஒரு தடவை அங்க போய் 

பாத்துட்டு வருவோம்" 

மீசையை விரலால் தடவிக்கொண்டே ஆர்வமாக             என்னைப் பார்த்து சொன்னார். 

அப்படி வாய்க்கவில்லை. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.