Share

Oct 14, 2020

மு. நடேஷ்

 தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பக்கமா     தாண்டி போக வேண்டியிருந்த போது 

ஒரு Associate memory 


மு. நடேஷ் சொன்ன விஷயம். 

கே. சி மணவேந்த்ர நாத் பற்றியது 

கிறிஸ்டியன் காலேஜ்ல ஒரு நாடகம். 

கே. சி நடிக்கும் போது நாய் ஒன்று நுழைந்து அவனை பார்க்கிறது. உடனே கலைஞன் கே. சி 

அந்த நாயிடம் பேசுகிறான். அதனிடம் டயலாக்.

 அது ஏதோ புரிந்து விட்டது போல கவனமாக கேட்டு விட்டு அந்த இடத்தை விட்டு போய் விடுகிறது.                  நாடகம் தொடர்ந்து நடக்கிறது 


நடேஷ் : சாதாரண விஜயங்கள்ள, வார்த்தைகள்ள மாட்டிக்கிட்டு இருக்கிறே. அதிலிருந்து வெளியே வந்தா தான் அனுபவம் கெடைக்கும்.


ஆசைய கையால பிடிக்க முடியுமா? 


Dynamic meditation. 


Inception படத்துல 

மனைவி போயிட்டா. ரொம்ப அறிவானவ. அவள மெமரிக்குள்ள போய் பாக்குறான். Dynamic meditation. 


போதை 

உயிரோட இருக்கிறதே ஒரு போதை. 


போதை 

ஒரு விஷயத்துக்குள்ள போய்

 அதுக்குள்ள இருக்கிறது தான் போதை. 


Body - mind ரெண்டும் சேர்ந்து தான் வேலை செய்யுது 


நடேஷ் பேசியதெல்லாம் இப்பவும் கேட்கிறது. 

சற்றும் அயர்ச்சி தராத, 

ஒவ்வொரு தடவையும் 

புதியதாக இருக்கும் நடேஷ் வார்த்தைகள். 


பயிற்சி மாணவர்களுக்கு நடேஷ் சொன்னது


பேச்ச சினிமாவும் சீரியலும் ஒழிச்சி கட்டியிருக்கு. 

கதையம்சம் விவரணையா கொண்டு வா. 

Sub Text ஆ படி. அப்ப வந்துடும் பேச்சு. Do it freely. 

சொல்லின் உள்ளர்த்தம் தொனியிலே ஏறனும். 


வெள்ளையும் கருப்பும் நெறமில்ல. இந்த ரெண்டு நெறத்தில எழுதிய வரிகளுக்கு உயிர் உண்டு. 


ஆலந்தூர் வருகிறது. 

அப்போது எனக்கு 

ந. முத்துசாமி நினைவு வருகிறது. 


அன்று ஆலந்தூரில இருந்த காலை 

தினமும்  குஞ்சலி மாமி ஆஃபிஸ் போன பின்

 இளைஞன் முத்துசாமி 

எழுதிக்கொண்டே தான் இருப்பார். 

'எமக்கு தொழில் எழுத்து, இமைப்பொழுதும் சோராதிருத்தல்'

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.