Share

Apr 14, 2020

சிவாஜியும் காருக்குறிச்சியும்

'சிங்கார வேலனே, தேவா'
பாடல் ஜானகியும், காருக்குறிச்சியும் பாடி பதிவு செய்யப்பட்டிருந்தது. பாடலின் தரம் ஜானகியின் குரலோடு காருக்குறிச்சியின் ராட்சச வாத்தியத்தின் காற்றால் உன்னத உச்சத்தை எட்டி விட்டது.
(இன்றும் அந்த ஆபேரி ராக பாடல் கேட்கும்போதும் கண்ணீரை கட்டுப்படுத்த முடிந்ததில்லை.)

தமிழ் திரையுலகமே இந்த பாடல் பற்றி பேச்சு. ஜெமினி கணேசனின் அந்த கொஞ்சும் சலங்கை பாடலை நான் அமெரிக்காவுக்கு போவதற்கு முன்னர் கேட்டே ஆக வேண்டும் என்று சிவாஜி விரும்பியிருக்கிறார்.
When Caesar says do it, it is performed.
பாடலை கேட்டு விட்டு தான் விமானத்தில் ஏறினாராம்.
'வச்சிக்றேன். இதுக்கு என் பாணியில் பதில் சொல்றேன்'என்று தானே நினைத்திருப்பார்.
பிரபலமான மார்லன் ப்ரான்டோ - சிவாஜி கணேசன் புகைப்படம் அந்த அமெரிக்க விஜயத்தின் போது எடுக்கப்பட்டது தான்.
பின்னால் அந்த அசுர வாத்தியத்தை இந்த தமிழ் திரையுலகின் அசுர குழந்தை தில்லானா மோகனாம்பாளில் எத்தகைய உச்சத்திற்கு தன் நடிப்பால் உயர்த்தி சாதனை புரிந்தார்.

காருக்குறிச்சி அப்போது மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவரல்லவோ தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசித்து உன்னத நிலைக்கு கொண்டு சென்றிருப்பார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை எப்போது பார்க்க நேர்ந்தாலும் இந்த எண்ணத்தை தவிர்க்க முடிந்ததில்லை. 
சேதுராமன் - பொன்னுசாமி சகோதரர்களும் நிறைவாகவே செய்திருந்தார்கள்.
இந்த புகைப்படங்களில் சிவாஜி, காருக்குறிச்சி அந்நியோன்யத்தை பாருங்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.