Share

Apr 15, 2020

காருக்குறிச்சி அருணாசலத்தின் கோவில்பட்டி பங்களாவில்

 புகைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், காருக்குறிச்சி அருணாசலம், சிவாஜி கணேசன்
மூவரும் இருக்கிறார்கள்.
கொஞ்சம் சலங்கை 1962.
இப்படி இது போல அவர்கள் மூவரும் சௌஜன்யமாக பேசிக்கொண்டிருப்பது
அதற்கும் முந்தைய காலம்
என்று தெரிய வந்துள்ளது.
ஏ. பி. என் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி நடித்த வடிவுக்கு வளைகாப்பு கூட 1962 தான்.
அடுத்த வருடம் சிவாஜியை குலமகள் ராதையில் சிவாஜியை ஏ. பி. என் இயக்கினார்.
1964 ல் சிவாஜியின் நூறாவது ரன் நவராத்திரி
ஏ. பி. என் கை வண்ணம் தான்.
அந்த வருடம் தான் காருக்குறிச்சியின்
அகால மரணம்.
இந்த புகைப்படம்.

Every picture tells a story.
காருக்குறிச்சி அருணாசலத்தின்
கோவில்பட்டி பங்களாவில்
இந்த உரையாடல்.
ஏ. பி. நாகராஜன் வரும் போதெல்லாம் காருக்குறிச்சியின் மனைவி
ராமலட்சுமி அம்மாளிடம்
வத்தக்குழம்பு கேட்பாராம்.
நாகராஜனும், கணேசனும், அருணாசலமும்
கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்' நாவலை படமாக்குவது பற்றி விவாதித்து இருக்கலாம்.
The possibility of the future.
விகடனில் தொடராக வந்த போது
வாசகர்கள் ஒன்றிப் போன தொடர்கதை.
கடைசியில் கதை நாயகனுக்கும், நாயகிக்கும் திருமண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு விகடன் இதழோடு தரப்பட்டது.
விகடனுக்கு ஏகப்பட்ட கல்யாண வாழ்த்து தந்திகள் குவிந்தன என்று சொல்வார்கள்.
1968 ம் ஆண்டு தான் தில்லானா மோகனாம்பாள் வெளி வந்தது.
நிச்சயம் ஏ. பி. நாகராஜனும், சிவாஜி கணேசனும்
அந்த சமயத்தில் நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாச்சலத்தை நினைவில்
பெரு மூச்சு விட்டிருப்பார்கள்.
Life is what happens when you make other plans.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.