Share

Jun 16, 2019

அப்பப்பா


இன்னக்கி Father’s day. அப்பா பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமோ?
ந.பிச்சமூர்த்தி அப்பா பெயரும் நடேசன் தான்.
ந.முத்துசாமி அப்பா பெயரும் நடேசன் தான்.
ந. பிச்சமூர்த்திக்கு ஏழு வயது இருக்கும்போது தான் அவருடைய அப்பா செத்துப்போய் விட்டார்.
ந.முத்துசாமி தன் ஏழு வயதில் தான் தகப்பனை இழந்தார்.

”இந்த அப்பாவால வந்த வினை, இன்னக்கிச் செத்தாப்பலே இருக்கு. எனக்கு ஏழு வயசில செத்தார்.  ( ஏக்கத்துடன்) இன்னும் கொஞ்ச வயசு வந்த பின்னாலே மட்டும் செத்து இருந்தார்னா?” ந.முத்துசாமியின் ’அப்பாவும் பிள்ளையும்’
நாடக வசனம். 

…..
’வெண்ணிலா குடை பிடிக்க
வெள்ளி மீன் தலை அசைக்க
விழிவாசல் வழி வந்து இதயம் பேசுது’
கதை பேசும் தேனிசையாய் சினிமா பாடல் இணையத்தில் கேட்டு ஒரு நிமிடத்தில்
ஒரு டி.வி சேனலில் செய்தி ஒன்று கவனிக்க நேரிட்டது
‘வயிற்று வலிக்கான மாத்திரைக்குள் சேஃப்டி பின் போன்ற சின்ன கம்பி. மாத்திரையை உடைத்து பாதியாக சாப்பிட நினைத்த போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.’
When fate arrives, the patient becomes an idiot.
Pharmaceutical drug snatches away the health.
(என் அப்பா பற்றிய இரண்டு பதிவுகளின் லிங்க் கீழே)

புகைப்படத்தில் நானும் என் அப்பாவும் என் மூத்த மகனும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.