Share

Mar 8, 2019

நண்டு வளையில நானும் தான் இருக்கேன்


நிஜமாலுமே கமல் பாராளுமன்ற தேர்தலில் தனி ஆவர்த்தனம் தானா?
’நண்டு வளையில நானும் தான் இருக்கேன்னு மூக்க நொளச்சி’ அவர் தேமுதிகவுடன் கூட்டணிக்கு தயார் என்ற அர்த்தத்தில் சொன்ன வார்த்தைகள் தேர்தல் சலசலப்பில் கவனம் பெற்றதா?
சறுக்கல்.

’எல்லோரையும் போலத்தான் நானும்’னு தானே இதற்கு அர்த்தம். நம்பகத்தன்மையை இழக்கிறார். இவர் அரசியலை சுத்தம் செய்ய புறப்பட்டவர்!
கமல் நீட்டிய நேசக்கரத்தை தே.மு.தி.க. மதித்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. Rejection. It's a disgrace.
ரஜினி கிட்ட சப்போர்ட் கேட்பேன் என்கிறார். கட்சி சவலப்பிள்ளை போலத்தான். கமலுக்கே புரிந்து விட்டது. தாங்குவார் இல்லன்னு தவித்து தக்காளி விக்கிறார்.
சித்திரக்குள்ளன் சினேகன் கூடவே இருப்பது வேறு அபஸ்வரம் போல தோற்றம் தருகிறதே.

அரசியலுக்கு வந்து பிரசங்கம் ஆரம்பித்த போது மய்யமாக இவர் ஏதோ பேசியதற்கே முகத்தில் அடித்தார் வைகோ “ Mr.Kamal, mind your words.”
யார்,யாரையோ போய் பார்த்த கமல் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கம் ஒரு புறம் இருக்கத்தான் செய்யும்.
முன்னயே சாரு ஹாசன் ஆசீர்வாதம் கமல் கட்சி ஆரம்பிக்க நினைப்பது பற்றி இளக்காரமாக.
தமிழகத்த முன்னேற்ற முன்னெடுத்த பழைய முயற்சியெல்லாம் இங்கே எடுபட்டதில்லை.
ஆனா ஒன்னு. இந்த தேர்தல்ல நின்னு தோத்து ஓட்டுக்கணக்கு போட்டு, இவ்வளவு ஓட்டு வாங்கியிருக்கோம்னு காட்டி அடுத்த சட்ட சபை தேர்தலில் பெரிய கட்சிகளிடம் பா.ம.க. தே.மு.தி.க. ம.தி.மு.க, விடுதலைச்சிறுத்தைகள் போல சீட்டுக்கு சின்ன பேரம் பேச வசதியுண்டு.
மற்றொரு உதிரிக்கட்சி மக்கள் நீதி மய்யம்? இல்ல.இல்ல. மற்றுமொரு கார்ப்பரேட் நிறுவனம்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.