Share

Mar 11, 2017

Walking shadow




ஒரு சினிமா நடிகன் சொன்னான் : ’என்னைப்பாத்தா சிவாஜி கணேசன் மாதிரியே இருக்கிறேன்னு எல்லாரும் சொல்றாங்க. சிவாஜி மகனான்னு கேட்டவங்க உண்டு. நேத்து வாஹினி ஸ்டுடியோவில கூட ஷூட்டிங்ல ஒரு நடிகை என் கிட்ட ”நீங்க அச்சு அசல் சிவாஜி சார் மாதிரியே இருக்கீங்களே”ன்னு மூக்குல விரல் வச்சிட்டாங்க!’

இன்னொரு சினிமா நடிகன் சொன்னான் : ’என்னையும் அப்படித்தான் எவ்வளவோ பேர் சொல்றாங்க.
சிவாஜி மகன் மாதிரியே நான் இருக்கிறேன்னு நேத்து கூட சஃபையர் தியேட்டர்ல ’மரோ சரித்திரா’ படம் பாக்க நான் போயிருந்தப்ப ஒருத்தர் ஆச்சரியப்பட்டாரு!’

நான் சொன்னேன் : ’என்னப்பாத்தா என்னோட அப்பா மாதிரியே இருக்கேன்னு எல்லோருமே சொல்றாங்க!’
Chip off the old block. I'm definitely a chip off the old block.
.....................................................

மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள்.சரி.
அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.

இதை கருத்தில் கொள்ள ஷேக்ஸ்பியரை தெரியாவிட்டாலும் இது ஷேக்ஸ்பியர் சொன்னது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும். அதன் பிறகு ’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ பற்றிய புல்லரிப்பு, செடியரிப்பு, மரம் அரிப்பு எல்லாம் வரட்டும்.
..................................

எதனை நினைத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை?
1.தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் தேறாத தேமுதிகவை பிரமித்து அதன் பின் வால் பிடித்து சேவகம் செய்ய நின்றதை!

2.இன்றும் தமிழகத்தில் செல்வாக்கில்லாத பி.ஜே.பியை தங்கள் கூட்டணி மூலம் கடந்த காலங்களில் பட்டி தொட்டியெங்கும் அ.தி.மு.க, தி.மு.க கொண்டு சேர்த்தை!

ஒன்னாம் நம்பர் காமெடியன்?
சசிகலாவை ஆதரிக்காவிட்டால் தமிழ் நாட்டில் பி.ஜே.பி வளர்ந்து விடும் என்று சொல்லும் கி.வீரமணி தான் Fool, Clown.

........................................




28 பிப்ரவரி தொடங்கி 6 மார்ச் வரை லலித் கலா அகாடமியில் அல்ஃபோன்ஸோ, P.கிருஷ்ணமூர்த்தி இருவரின் ஓவிய கண்காட்சி நடந்தது.
மகத்தான் இரு கலைஞர்கள்.
முதல் நாளும், கடைசி நாளும் ந.முத்துசாமி, மு. நடேஷ் இருவருடன் போய் இருந்தேன். மறக்க முடியாத நிகழ்வுகள். எம்.டி.முத்துகுமார சுவாமியை சந்திக்கிற வாய்ப்பு லலித் கலா அகாடமியில் கிடைத்தது.

                                              அல்ஃபோன்ஸோ ஓவியம்




                                               P.கிருஷ்ண மூர்த்தி ஓவியம்
                                             
.............................................................................................................................


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.