Share

Jan 6, 2017

ஸ்தல புராணம்


உ.வே.சுவாமிநாதய்யரின் குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பது தெரிந்ததே. ஸ்தலபுராணம் பற்றிய விஷயம் தான் பலருக்கும் தெரியாததே.

ஸ்தல புராணம் இல்லாத பல பழம்பெரும் கோயில்கள் இருந்திருக்கிறது. அந்தக்கோவில்கள் உள்ள ஊர்களிலிருந்து முக்யஸ்தர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை வந்து சந்தித்து விண்ணப்பம் செய்வார்கள் -’எங்க ஊர் கோவிலுக்கு ஸ்தல புராணம் இல்லை. நீங்கள் தான் எழுதித் தரவேண்டும்’
இப்படி எவ்வளவோ பல கோவில்களுக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தன் பாண்டித்ய திறமையால் தன் சொந்தக் கற்பனையில் ஸ்தல புராணம் எழுதிக்கொடுத்திருக்கிறார்!
திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆஸ்தான வித்வானாக மீனாட்சி சுந்தரம்பிள்ளை இருந்தார்.

உ.வே.சுவாமிநாதய்யரின் “ என் சரித்திரம்” நூலில் திருவாவடுதுறை ஆதீனம் பற்றி தகவல்கள் சொல்லியிருக்கிறார்.

மதுரை ஆதீனத்தை விட திருவாவடுதுறை ஆதீனமும், தர்மபுர ஆதீனமும் பெரியவை.

கோயில் கட்டளைகளை நிர்வகிப்பவர் கட்டளை தம்பிரான்.
ஒரு ஆதீனத்தில் பல கட்டளை தம்பிரான்கள் இருப்பார்கள்.
ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு கட்டளை தம்பிரான் இருப்பார்.
இந்த கட்டளை தம்பிரான்களில் ஒருவர் தான் அடுத்த ஆதீனகர்த்தாவாக வர வாய்ப்பு உள்ளவர்.
கட்டளை தம்பிரான் கை மேலே காவித்துணி. ஆதீன மஹா சன்னிதானம் அதில் கை வைத்துக்கொண்டு வருவார்.
இது தான் ’கைலாகு’!
மாயூர நாத சுவாமி கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆளுகை. அதிலேயே குமார கட்டளையாகிய முருகன் சன்னதி தர்ம புர ஆதீனத்திற்கு பாத்தியப்பட்டது.
கோயில் விசேஷ பண்டிகை நாட்களில் இரு ஆதீன சார்பிலும் போட்டி போட்டுக்கொண்டு நாதசுரக்கச்சேரி நடக்கும்.
ஆதீனத்திற்கு பள்ளிக்கூடங்கள் உண்டு. அந்த பள்ளிக்கூடங்களில் வேலை பார்க்கும் ஆசிரியைகளுடன் மஹா சன்னிதானம் ’சரீர இச்சை’யை பூர்த்தி செய்து கொள்வதெல்லாம் உண்டு தான். அந்தக்காலத்தில் ஒரு ஆசிரியையின் முலையை கடித்த பண்டார சன்னதி உண்டும்.உண்டும்.

கட்டளை தம்பிரானாக இருக்கிற பிரகிருதி, உச்ச பதவியை கைப்பற்றும் முயற்சியில், கொட்டைப்பாக்கை பண்டார சன்னதியின் தொண்டைக்குழியில் வைத்து அழுத்தி ஆதினகர்த்தாவை கொன்று விடுவதும் நடந்திருக்கிறது.
......................................

http://rprajanayahem.blogspot.in/2016/11/22_22.html

……………….

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.