Share

Nov 9, 2014

மாவீரன் நெடுமாறன்

 
காமராஜருக்கு பக்கபலமாக இருந்து ஸ்தாபன காங்கிரஸை வளர்க்க பாடுபட்டவர்
பழ. நெடுமாறன்.
பெருந்தலைவர் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்திக்கு விசுவாசமாய் நின்றவர்.
         
ஜனதா கட்சி ஆட்சியில் முன்பு இந்திராகாந்தியை திமுக காரர்கள் மதுரையில் தாக்கிய போது அவர் மீது அடி படாமல் அவ்வளவு அடிகளையும், தானே வாங்கி காப்பாற்றிய போது பழ. நெடுமாறனுக்கு மண்டை உடைந்தது.
"கண்ணகியை அடித்து விட்டீர்கள்,மதுரையே பற்றி எரியபோகிறது! " என்று ஆவேசப்பட்டவர்.
காங்கிரஸ் அட்ஹாக் கமிட்டியில் இந்திரா காந்தி "My son who saved my life!" என்று பெருமிதத்துடன் நெகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தினார்.
நெடுமாறனை தன் மூத்த மகனாகவே இந்திரா கருதினார்.
அந்த இந்திரா காங்கிரஸையும் விட்டு வெளியேறி தனியாக கட்சி நடத்தினார்.

இந்திராகாந்தியின் மகனை கொன்றவர்களை நெடுமாறன் இன்று ஆதரிப்பது ஒரு வரலாற்று முரண்.
அண்ணாத்துரை,ஈ.வி.கே.சம்பத், காமராஜர், இந்திராகாந்தி என்று பல தலைமையை கண்ட  ஒரு அரசியல்வாதி  இலங்கை விடுதலைப்புலிகள்
 தலைவன் பிரபாகரனின் ஊதுகுழல் ஆன விசித்திரம்!

..

1980ல் மதுரை மேற்கு தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது மதுரையின் மற்றொரு தொகுதியில் எம்.ஜி.ஆர் சப்போர்ட்டில் இவர் ஜெயித்தார்.


நெடுமாறனுக்கு திக்கு வாய் ஒரு பலகீனம். அதை கவனமாக மேடையில் பேசும்போது மறைக்க முயல்வார். பேச்சும் சுவாரசியமாக, கூட்டத்தை கவர்ந்திழுக்கும்படியெல்லாம் இருக்காது.
"அன்றைய தினம் மகாகவி பாரதி அவர்கள் பாடல்கள் எழுதியபோது இவையெல்லாம் க...அ..விதைகளா என்று கேட்டார்கள். ஆனால் இன்று ......... "


தீப்பொறி ஆறுமுகத்திற்கு நெடுமாறன் என்றாலே இந்த திக்கு வாய் விஷயம் தான்!
 http://tamilnewstime.files.wordpress.com/2012/07/large_2119491.jpg
" இந்த கொன்னவாயன் நெடுமாறன் சட்ட சபையில பேசுறாய்யா.. ' கே..எ..ஏரளாவுக்கு எ..எ..எரும மாட்டைக்கடத்துறாங்கெ..'.. அட எரும மாட்டுப்பயலெ.. எனக்கு ஒரு ஆசை! இந்த கொன்னவாயன் நெடுமாறனுக்கும் மென்டல் பய ரஜினிகாந்துக்கும் பேச்சுப்போட்டி வக்கனும்! எவன் ஜெயிக்கிறான்னு பாக்கனும்!"



தமிழகத்தின் முதல் "மாவீரன்" நெடுமாறன் தான் தெரியுமா?
மாவீரன் தாமரைக்கனி..... மாவீரன் மு.க. அழகிரி....... இன்று இன்னும் அந்த பட்டம் ஒரு நூறு பேர் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்....



கண்ணதாசன் இந்த மதுரை நெடுமாறன் பற்றி மிக பிரமாதமாக தன் சுயசரிதை வன வாசத்தில் எழுதியிருக்கிறார்.
       

திமுகவை விட்டு ஐம்பது வருடங்களுக்கு முன் சம்பத்தோடு வெளியேறி, 'திராவிட இயக்கத்தின் இரும்புமனிதர்' மதுரை முத்துவுக்கு எதிராக தைரியமாக அரசியல் செய்தவர் தான் நெடுமாறன்.
அப்போது தான் மதுரை மக்களுக்கு இவர் மாவீரன் ஆனார்!
மதுரை முத்துவின் கடைசி காலத்தில் 'இலங்கைப் பிரச்னை' அவரை நெடுமாறனுடன் இணைந்து ஒரே மேடையில் அமர வைத்தது.

இலங்கைப் பிரச்னையே முழுமையாக இவரை ஆக்கிரமித்து விட்டது.

பிரபலமான விவேகானந்தர் காலண்டர்   நெடுமாறனுடைய குடும்ப சொத்து!

...............................................................

1 comment:

  1. காலம் மாறும்போது மனிதர்கள் மாறுவது இயற்கையின் நியதியாகிவிட்டது. அதை மீறி நிற்போர் சிலரே.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.