Share

Nov 26, 2012

சங்கீத ரசனையும் வசதியும்

நெய்வேலி சந்தான கோபாலன் கச்சேரியொன்று  பத்து வருடம் முன்.திருச்சியில். என் நண்பர் கோவிந்தராஜிடம்(அப்போது Divisional Engineer BSNL)  என்னைக்காட்டி சந்தான கோபாலன் சொன்னார்.”இவர் என்னமா கச்சேரியை ரசித்தார் தெரியுமா!இந்த மாதிரி சதஸ் இருந்தால் தான் கீர்த்தனைகளும் நன்றாக பாட முடியும்”
என் பெயர் என்ன என்று கேட்டார். நான் “ராஜநாயஹம்” என்றேன். என் பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள நான்கைந்து முறை ’ராஜநாயஹம்’ என்று கண்மூடி சொல்லிப்பார்த்தவர் சட்டென்று’ வசதி இருக்கிறதா? (சாப்பாடு,உணவு,உறைவிடம்) பொருளாதாரம் எப்படி? அதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.அது இருந்தால் தான் சங்கீத ரசனையெல்லாம்’ என்றார்.அவர் சொன்னது அசரிரி.அடுத்த வருடமே நான் பஞ்சம் பிழைக்க திருப்பூர் வரும்படியானது.


 'விரலில் போனால் குரல் போகும்' என்று சங்கீத உலகில் சொல்வார்கள்.
If you concentrate on beats,melody will be lost.

 ராகங்களில் முதல் ராகம் மோகனம்.
நன்னு பாலிம்ப்ப நடசி வச்சிதிவோ நா ப்ராண நாத
என்னைக்  காப்பாற்ற வேண்டி நடந்தே வந்தாயா!

தமிழ்த்தாய் வாழ்த்து ‘நீராடும் கடலுடுத்த’ மோகனம்.

 ’மாசிலா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே’

’பழகத்தெரிய வேணும்’

 ’துள்ளாத மனமும் துள்ளும்’

‘மலர்கள் நனைந்தன பனியாலே’

’நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது’

’அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’

’வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’

இந்தப்பாடல்கள் எல்லாமே மோகனராகம் தான்.



சாருகேசி ராகம்
சாருகேசி என்றால் அழகிய கூந்தல் என்று அர்த்தம்.
இந்த ராகத்தில் தியாகபிரும்மத்தின்  ஆடமோடி கலடே என்ற கீர்த்தனை. சாருகேசி ராகத்தில் தியாகப்ரும்மம் இந்த ஒரே ஒரு கீர்த்தனை தான் இயற்றியிருக்கிறார்.
Tell me why this bad mood now
dear Rama, Please speak
I held your feet with devotion
and called you my friend
and my shelter, so speak.
 இந்த ராகம் திரையில் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒன்று.
எம்.கே.டி பாடிய ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ!’ சாருகேசி தான்.
சௌந்தர்ராஜன் பாடிய ‘வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே’சாருகேசி.
மதுரை வீரனில் எம்.எல்.வசந்தகுமாரி பாடி பத்மினி ஆடிய ‘ஆடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ’
குங்குமம் படத்தில் சிவாஜி -சாரதாவுக்கு ஒரு பாட்டு. தூங்காத கண்ணொன்று ஒன்று’ 
 ஸ்ரீதரின் ‘தேனிலவு’ படத்தில்ஏ.எம்.ராஜா இசையில் ஜிக்கி பாடிய ’ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக்கண்டேன்.அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தைக் கண்டேன்’ இதே சாருகேசி.

காத்திருப்பான் கமலக்கண்ணன்’ என்று ஒரு பாடல் இதே ராகம். 

ரஜினியின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்திராவில் இந்த ராகத்தில் ஒரு மெட்டில் ஒரு பாட்டு. ‘ஆடல் கலையே தேவன் தந்தது’

சின்ன மாப்ளே படத்தில் சுகன்யா -பிரபு பாட்டு ‘காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி’ சாருகேசி ராகம்!


சஹானா

சஹானா பாடினாலும் கேட்டாலும் மனம் சாந்தமடையும்.என் அனுபவத்தில் பிலஹரி போல சஹானா கூட கவலையைத்தீர்க்கும்.கவலையில் இருக்கும் போது கதனகுதூகலம் ராகம் (ரகுவம்ச சுதா கீர்த்தனை)கேட்டால் எரிச்சலாயிருக்கும்.
சஹானா என்பதற்கு ’பெருமை காத்தல்’ என்று அர்த்தம்.
சஹானா கோபத்தை தணிக்கும் வல்லமை கொண்டது.சண்டை சச்சரவுகளையும் நீக்கும் என்று ’ராக சிகித்சா’வில் சொல்லப்பட்டுள்ளது.

தியாகப்ரும்மத்தின் ’கிரிபை’ ’வந்தனமு ரகுநந்தனா’ ஆகிய கீர்த்தனைகள் சஹானா ராகத்தில்.
’கிரிபை’ எம்.டி ராமநாதன் பாடியுள்ளதைக் கேட்கவேண்டும்.
’வந்தனமு ரகுநந்தனா’ உன்னி கிருஷ்ணன் பாட அவர் கச்சேரியில் எப்போதும் சீட்டு எழுதிக் கொடுக்கவேண்டும்.

சினிமாவில் சஹானா என்றால் உடனே நினைவுக்கு வருவது “ பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன் அந்த மலைத்தேன் இவளென மலைத்தேன்” என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்.
அவ்வை சண்முகியில் ‘ருக்கு ருக்கு ருக்கு’ சஹானா.


கருடத்வனி ராகம் திருமணத்தில் தாலி கட்டும் சமயம் பாடினால் பொன்னுமாப்பிள்ளைக்கு சீரான சுகங்கள் தருமாம். தியாகராஜ கீர்த்தனை’பரதத்ர மேருக’

  பைரவி ராகம் மரணப்படுக்கையில் இருப்பவருக்கு சுகசாந்தி தரும்.

உபசாரமு ஜேஸே வாருன்னா ரனி மரவகுரா
 உன்னை உபசரிப்பதற்கு சுற்றிலும் சிலர்(சீதை,அனுமன் மற்றும் சகோதரர்கள்) இருக்கிறார்கள் என்பதனால் என்னை மறந்து விடாதய்யா 

சங்கராபரணம் மனநோய்க்கு சிறந்த சுகமருந்து.

’ஸ்வர ராக சுதா ரஸ யுத’
சங்கராபரண ராகத்தில் 
’வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்’
பலே பாண்டியா படத்தில் கதாநாயகன் தற்கொலைக்கு முயற்சிக்கிற மன நோயாளி. இந்த ராகத்தில் தெரிந்தே தான் இசையமைப்பாளர் இந்தப்பாடலை அமைத்தாரா!

’வாடிக்கை மறந்ததும் ஏனோ’ கல்யாண பரிசு

’அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா’

’மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி’

’ஒரு மணியடித்தால் கண்ணே உன் ஞாபகம் டெலிபோன் குயிலே வேண்டும் தரிசனம்’

சங்கராபரண ராக மெட்டில் அமைந்த பாடல்கள் தான்.


ஆனந்த பைரவி ராகம் ரத்தக்கொதிப்புக்கு சுகம் தரும் இயல்பு கொண்டது.

தியாகய்யரின் ஆனந்த பைரவி கீர்த்தனை 
” நீகே தெலியக போ தே 
நே நேமி ஸேயுது ரா”

’உனக்கே தெரியாதென்றால் நான் என்ன தான் செய்ய முடியும்
என் நெஞ்சத்துயரம் உனக்கே தெரியவில்லை என்றால் நான் என்ன தான் செய்ய’

சினிமாவில் ஆனந்த பைரவி
‘போய் வா மகளே போய் வா’

’தென்மேற்கு பருவக்காற்று சேரிப்பக்கம் வீசும் ஒரு சாரல்’

‘கொஞ்ச நாள் பொறு தலைவா’





 

 

4 comments:

  1. very nice post.

    how to understand the elementary steps of raga's and the nuances?

    small example with ragupathi raghava rajaram song. thanks.

    ReplyDelete
  2. My blog post on Mohanam:-


    http://simulationpadaippugal.blogspot.in/2006/09/04.html

    ReplyDelete
  3. My blog post on Charukesi

    http://simulationpadaippugal.blogspot.in/2010/11/06.html

    ReplyDelete
  4. ஆமாம்,ராகத்த வெறுமன ரசிச்சா போதாதா,எதுக்கு அத என்ன ராகம்னு கண்டுபிடிக்கணும்?
    சங்கீத சீசன்ல,பாடகர் பாடிக்கொண்டிருக்க, இரண்டு காதுகளையும் இறுக்க பொத்தியபடி, அது என்ன ராகம்னு சிலர் கண்டுபிடிக்க முயலும், கண்கொள்ளா காட்சியைப்பார்த்து, எனக்கு இந்த சந்தேகம் வரும்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.