Share

Nov 12, 2012

Miracles never cease !


 ஊரோடி ரகு போனில் அவர்கள் குடும்பம் மெஸ் நடத்துவதை -அந்த தொழில் தந்த அனுபவம் ஆக சொன்ன விஷயம்: ’சாப்பாடு இருக்கும்..பசிக்கிற நேரம் சாப்பிடவே முடியாது’
மெஸ் நடத்துவது எப்பேர்ப்பட்ட சவால்.ஊருக்கு உணவு தரமுடியும். அன்னலட்சுமி அருள் உணவுக்கூடம் நடத்துபவர்களுக்கு வாய்க்காது.

Life of Pi நாவலில் வரும் படேல் என்னும் சிறுவனின் குடும்பம் பாண்டிச்சேரியில் ஒரு zoo நடத்துபவர்கள்.அந்த தொழில் அனுபவம்- ஒரு மிருகக்காட்சிசாலையில் மிக பயங்கரமான மிருகம் என்ன தெரியுமா?
Pi says " In our trade,the most dangerous animal in a zoo is MAN.” வேடிக்கை பார்க்க வருகிற மனிதர்கள் தான் அங்குள்ள மிருகங்களின் கொடூரமான எதிரிகள்.
ஒரு ஆண் யானை குடலில் ரத்தம் கசிந்து துடித்து இறந்தது.காரணம் என்னவென்றால் பார்வையாளன் தந்திரமாக ஒரு உடைந்த பீர் பாட்டிலை அதற்கு உண்ணக்கொடுத்துவிட்டான்.
ஒரு மனிதன் கத்தியோடு ஒரு மான் கூண்டுக்குள் பாய்ந்து விட்டான்.
அவனுக்கு ராமாயணம்,சீதை கடத்தப்படுவது,மான் எல்லாம் நினைவில் வந்திருக்கிறது.ராமாயணகதையை அதன் போக்கில் போக விடாமல் சீதையைக் காக்க இவன் 'குறுக்க' கிளம்பிட்டான்!அடப்பாவி...
’எங்கு கண்டாலும் ராமன்கள் தட்டுப்பட்டால் ராமாயணம் செல்லாக்காசு’ - கி.ராஜநாராயணன் சொன்னது!

இந்த Yaan Martel எழுதிய Life of Pi நாவலைப் பற்றி 2004ம்  ஆண்டு திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப்பில் நான் ஒரு மணி நேரம் பேசினேன்.

 இப்போது என்.சொக்கன் ட்விட்ட்ரில் இதைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார் இப்படி-’தீபாவளிக்கு விஜய் டிவியில் ’Life Of Pi’ படத்தைப் பற்றி கமலஹாசன் பேசுகிறாராம்.’


நாளை தீபாவளி.
இன்று சந்தோஷம் தந்த நிகழ்வு ஆஸ்ட்ரேலியாவிலிருந்து வந்துள்ள கானா பிரபாவை திருப்பூரில் சந்திக்க கிடைத்த வாய்ப்பு.என்னுடைய ப்ளாக் இன்று இப்படி ஜெகஜ்ஜோதியாய் இருப்பதற்கு காரணம் கானா பிரபா தான்.Nothing beats the feeling of getting a real nice gift!
தொரகுனா இட்டுவன்டி சேவா என்ற தியாகபிரும்மத்தின் பிலஹரி ராக கீர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது.பிலஹரி ராகம் பற்றி தெரியுமா? கவலையைத்தீர்க்கிற மூலிகை.
குட்டீஸ்களோடு வந்த பரிசல்காரன் போனில் வந்த தோட்டா ஜெகன் என்னுடனும் உற்சாகமாக பேசினார்.

இன்று இரவு பெங்களூரு B.கணேஷுடன் போனில் பேசினேன்.
குழந்தை மனம்...தெய்வத்துளி!

The funny thing about 'Miracles' is that they happen!


..............................

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_24.html


1 comment:

  1. நல்ல ப்ளாக்! மோகன் குமார் லிங்க் கொடுத்திருந்தார்..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.