Share

Jul 30, 2008

CARNAL THOUGHTS-1

திருப்பூரில் ஒரு மூன்று நாள் பரத நாட்டிய திருவிழா இங்கு ஊரிலயே பெரிய கல்யாணமண்டபத்தில் நடக்க இருக்கிறது .
 

நண்பர் D.மயில்சாமி நல்ல சங்கீத ரசிகர் . கர்நாடக சங்கீத கச்சேரிக்கெல்லாம் ரொம்ப ஆர்வமாக வந்து உற்சாகமாக ரசிப்பவர் .

அவரிடம் கேட்டேன் " பரதநாட்டியம் பார்க்க வருவீங்க தானே ?" அவர் முகம் லேசாக களையிழந்தது. "இல்லீங்க..."மென்று முழுங்கினார் .

"ஏன் ? என்ன விஷயம் ?"
"நான் பொதுவா பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பாக்கரதே கிடையாது . உங்க கிட்ட சொல்றது தப்பில்லே . எனக்கு ஆடுற ஆட்டத்தின் மேல கவனம் போக மாட்டேங்குது . அந்த பொண்ணுங்க உடம்பை பார்த்து , ஒவ்வொரு அங்கமா பார்த்து வேற மாதிரி mood தப்பு தப்பா கெட்ட எண்ணமெல்லாம் தான் வரும் . அதனாலே தான் ..."
 

CARNAL THOUGHTS!
என்ன சொல்ல ? இவர் அதை குற்ற உணர்வோடு சொல்கிறார் ?
இப்படிக்கூட இதில் பிரச்சினை இருக்கிறது என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது . சரி அந்தகாலத்தில் தேவ தாசிகள் தானே பரதநாட்டியம் ஆடினார்கள் .
'காமாந்தகாரன். பவித்திரமான கலையை இப்படி கொச்சைபடுத்திவிட்டானே ' என்றெல்லாம் கோபிக்க இங்கு கலாச்சார போலீஸ்வேலை பார்க்க நெறைய பேர் கிளம்பி விடுவார்கள். தெரிந்தது தானே.
ஆனால் இதன் உளவியல் பின்னணி பற்றி யோசிக்க யார் இருக்கிறார்கள் . மனிதனுக்கு CARNAL THOUGHTS எப்போது வேண்டுமானாலும் சூழல் மீறி வரத்தான் செய்யும் . உடம்பு ! உடற்பசி ! உடம்பு மீது பசி

" காமத்துக்குசெத்த நாயுன்னும் இல்லே" பழைய பழமொழி. இரண்டாவது வரி
INCEST . "பெத்த மகளுன்னும் இல்லே "




2 comments:

  1. சார், மனித சுதந்திரத்தின் கட்டுப்பாடற்ற நிலை மிகப் கொடுமையானதாக / மகிழ்ச்சியானதாக இருக்கலாம் என்று யாரோ எழுதி இருக்கிறார்கள்.

    தமிழ்ச் சூழல் - சமூகக் கட்டுப்பாடுகளை விதித்து வந்ததால் இதைப் போன்ற தனி மனித எண்ணங்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டிருந்தன.

    ”நச்சென்று நாலு வரி” = “ராஜநாயஹம் சார்“

    ReplyDelete
  2. Sir, Regarding CARNAL THOUGHTS - Can u Write more of them. I read that you stayed in trichy for some times. can we have your experience in those area / incidents.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.