Share

Oct 23, 2025

மனோரமா மகன் பூபதி

மனோரமா மகன் பூபதி 
- R.P. ராஜநாயஹம் 

சாவு சில காட்சிகளை பின்னோக்கி கிளர்த்துகிறது.

தி. நகர் பஸ் நிலையம் எதிரில் இருந்த மேன்சனில் தங்கியிருந்த சமயம் அது.

பூபதியின் காரில் அங்கிருந்து பனகல் பார்க் வழியாக இயக்குநர் ரா.சங்கரனை சந்திக்கப்போன போது ராஜநாயஹம் 
" இப்ப நீங்க நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே?"
காரை ஓட்டிக் கொண்டே பூபதி: 'Why not? Why not? While the offer flows in, why not?'

உதிரிப்பூக்கள் படத்தில் துவங்கி, மணல் கயிறு போல சில படங்கள்.

"Why not, why not? While the offer flows in, why not?"
விஷயத்தை பல வருடங்கள் கழித்து 1992ல் ராசுக்குட்டி ஷூட்டிங்கிற்காக மனோரமாவுடன் மகன் பூபதி வந்திருந்த போது மீண்டும் ஞாபகப்படுத்தினேன்.

அப்பா எஸ்.எம். ராமநாதன் முக சாயல் பூபதிக்கு.

அம்மாவை 'பாப்பா பாப்பா' என்று எப்போதும் அழைக்கும் பூபதி.

முதல் மனைவி எழுத்தாளர்மணியன் மனைவியின் சகோதரி என்று சொல்வார்கள். மனோரமா அந்த திருமணத்தில் பேசும்போது அழுதார். திருமணம் நீடிக்காத போது இரண்டாம் திருமணத்தின் போதும் மனோரமா தேம்பினார்.

ராசுக்குட்டி ஷூட்டிங் போதும் மனோரமா 
 " பூபதி இப்பவும் குழந்தை தான். அம்மா தான் அவனுக்கு எல்லாம். "

மாஸ்டர் தசரதன் பற்றி( தசரதன் இயக்கத்தில் சுவாமி ஐயப்பன் படத்திலும் நடித்தவர் தான்)
பூபதி" பதினஞ்சாயிரம் கடன் வாங்குனார். அப்புறம் என்னய பாக்காம பதுங்கிக்கிறாரு"

ரொம்ப செல்லமா வளந்த பிள்ளை.
பள்ளிப்படிப்பு 
ஊட்டி லவ்டேல்.

மனோரமாவுக்கு ராஜநாயஹம் இரங்கல் குங்குமத்தில் பத்து வருடங்களுக்கு முன் வெளி வந்தது.

Oct 21, 2025

முத்துசாமி நாடகங்கள் பற்றிய அபத்த உளறல்கள்

ந.முத்துசாமி நாடகங்களில் பேச்சை வார்த்தையாக மாற்றி எல்லாவற்றையும் நட் போல்ட் யெல்லாம் போட்டு அருமையாக வைத்திருக்கிறார் playக்குள்ளே. In all his plays.

எப்போதும்  தான் எழுதியதை முத்துசாமி உரக்கப் படித்துப் பார்ப்பார்.
குஞ்சலி மாமிக்கும் படித்துக் காட்டுவார்.

வார்த்தைகளுக்குள்ளே பேச்சாக அடக்கி மருந்து வைத்து பண்ணியிருக்கிறார். ஏனென்றால் எழுதப்பட்ட விதத்தில் பேச்சு, தொனி, அர்த்தம் வெளி வரவேண்டும்.

How you must write a "Theatre criticism" about Muthuswamy play ?

 நான்கைந்து ரிகர்சல் பார்க்க வேண்டும். அப்புறம் மேடையேற்றப்படும் நாடகத்தை மூன்று முறை பார்த்து விட்டு அப்புறம் தான் write up எழுத வேண்டும்.

ஒரே நாள் பார்த்து விட்டு விமர்சனம் எழுத நினைப்பது அபத்தம்.

பத்து வரி விமர்சனம் எழுதுவதற்கே இப்படி தான்.

முத்துசாமி இங்கிலாந்து நாடகத்தை எழுதினார். 
ரிகர்சல், நாடகம் பல முறை பார்க்க வாய்த்திருக்கிறது.

நாடகம் முத்துசாமி தமிழில் எழுதிய விசேட படைப்பு.
இதை அறியாமல் நாடகத்துறைக்கே சம்பந்தமில்லாத நபர் எழுதிய அபத்தம் 
"முத்துசாமி இங்கிலாந்து நாடகத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்தார்."
Hypocrisy.

முத்துசாமி இறந்தபோது 
லயோலா கல்லூரியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அஞ்ஞானத்தை நூறு பேர் பார்க்க வெளிப்படுத்திய கோமாளித்தனம் நடந்தது.

முத்துசாமியின் 'அப்பா பிள்ளை' அபூர்வ நாடகம்.
இதை படிக்காமல் 
முத்துசாமிக்கும் நடேஷூக்கும் நடந்த சண்டைகளை 
முத்துசாமி 
அப்பா பிள்ளை நாடகம் ஆக்கினார் என்று 
தெரிந்த மாதிரி அந்த நபர் பேசினார்.

......

முத்துசாமி இறப்பதற்கு முன் R.P. ராஜநாயஹம் 
ஆங்கிலத்தில் 
கூத்துப்பட்டறை தேவை கருதி எழுதிய 
அப்பா பிள்ளை Synopsis

May 22, 2018
Na.Muthuswamy’s Play “Appaavum Pillaiyum”
- R.P. Rajanayahem 

Na. Muthuswamy’s play “Appaavum Pillaiyum” won't make you snore. I promise. Though it’s an absurd play , it has the pleasure of text. 
A very interesting play to be staged.

“ Theatre of absurd has a sense of metaphysical anguish towards the absurdity of the human condition.People should learn to appreciate such productions.”
- Martin Esslin

Martin Esslin coined the term “Theatre of Absurd” in the year 1962 and Na.Muthuswamy has written his first absurd play (kaalam kaalamaaga) in the year 1968.
Muthuswamy is an avant – garde playwright in Tamil.

“Appavum Pillaiyum” means Father and Son. This play offers a tragicomic outlook on human existence. Muthuswamy has achieved
 a theoretical impossibility in this play in which three Ramaswamys are conversing among themselves.

Author Muthuswamy has lost his father at the age of seven. He frets a lot about his father’s death. If his father had lived for some more years, his childhood and youth life would have been brightened. This is the basic sorrow of the protagonist in Appavum pillaiyum.

It’s a struggling life. Ramaswamy has to achieve and win in his challenging life.
The story travels in this chennai and Punjai village. There is a quantum jump and sudden significant change.

Ramaswamy explains happenings in the road when he goes to meet his friend.

His detailed reminiscence of childhood and father is beautifully described by Author.
There are other dreamy characters like Amma, Periyappa, Rasavayyar, Pavadai, Ponnuswamy, Vairakkannu, journalist and an unseen friend.

Author of this play is a renowned , significant short story writer also. His revelation has promted him to change direction to work as a playwright. 

We can witness the elements of a classic short story also in Appavum Pillaiyum.
Author has successfully utilised the stream of consciousness throughout the play.

Every theatre person and book reader in Tamil world has a great admiration for Muthuswamy’s work. That is what it is. It has epic, heroic.. What he has achieved.
This play is a nightmare from which Author Muthuswamy is trying to awake.
………

Oct 17, 2025

வஹாப் காஷ்மீரி

வஹாப் காஷ்மீரி 
- R.P.ராஜநாயஹம் 


ரஜினிகாந்த் பிரபலமான போது 
கண்ணதாசன் 
 " ரஜினிகாந்த் பார்ப்பதற்கு 
சாயலில் நடிகர் வஹாப் காஷ்மீரி போல் இருக்கிறார்.இவருடைய மூக்கு வஹாப் காஷ்மீரி மூக்கு போலவே தான் தெரிகிறது"

கண்ணதாசன் தயாரித்த சிவகங்கை சீமை (1959). வெல்ஷ் துரை ஆக வஹாப் காஷ்மீரி நடித்தார்.

கட்டபொம்மன் படத்தில் வந்த வெள்ளைக்காரர்கள் பானர்மென் ஜாவர் சீத்தாராமன், ஜாக்சன் பார்த்திபன் 
 இவர்களை விட  வெல்ஷ் துரை
 வஹாப் காஷ்மீரி பிரமாதமாக ஒரிஜினல் வெள்ளைக்காரர் போல தோற்றம்.
'ஊமைதுரை' உச்சரிப்பு கூட வெள்ளைக்கார தோரணை.

கட்டபொம்மனில் 
பானர்மனும் ஜாக்ஸனும் தமிழில் வசனம் பேசினார்கள். 
சிவகெங்கை சீமையில்
வெல்ஷ் துரை அருமையான ஆங்கிலம் பேசுவது சுவாரசியம்.

How do you do, Mr. Marudu?
Marudu brothers are loyal to our company.
What a surprising situation.

Frankly Mr. Marudu, I have reliable information that you are sheltering Oomaidurai.

We hope to meet you with Oomaidurai within a week.

Actor Wahab Kashmiri's remarkable posture, gesture and movement.

கலைஞர் வசனமெழுதி தயாரித்த சிவாஜி சாவித்திரி 'குறவஞ்சி'(1960) மன்னனாகநடித்தார் வஹாப் காஷ்மீரி.
" மன்னா பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே  
விடுகிறார்கள் "

இந்த படத்தின் போஸ்டரிலேயே இடம் பெற்றிருந்தார்.

1952 ல் வந்த 'ராணி'.தமிழில் எஸ்.பாலச்சந்தர், பானுமதி நடித்தார்கள்.

இந்தியில் அனூப் குமார். அசோக் குமார், கிஷோர் குமார் இருவரின் உடன் பிறந்த சகோதரர் அனூப் குமார். 
பானுமதி இந்தியிலும் கதாநாயகி.
எல்.வி. பிரசாத் இயக்கிய ஜூபிடர் சோமு தயாரிப்பு 'ராணி'.
வஹாப் காஷ்மீரி இந்த இரு மொழி படத்தில் முக்கிய நடிகர். போஸ்டரில் கதாநாயகன், நாயகியோடு இவரும் இடம் பெற்றார்.

ஜெயகாந்தன் 'யாருக்காக அழுதான்' (1966)
குடிகார சேட்.

இவருடைய காலம் ரொம்ப ஓடி விட்ட பின் பெரியகுளத்தில் தென்கரை பஜாரில் 
குதிரை வண்டியில் உட்கார்ந்து வந்த வஹாப் காஷ்மீரியை 
பார்க்க வாய்த்தது. குதிரை வண்டியில் இருந்து இறங்கி (கையில் crutch)
M.N.P. store சர்புதீனிடம் 
 " என்னடா சர்ப்பு"
சர்புதீன் முகத்தை திருப்பாமல் கண்ணால் அரை பார்வை பார்த்து 
" வாய்யா வகாப்பு".

பெரியகுளத்தை ஒட்டிய பகுதியில் சொந்தமாக சின்ன நர்ஸரி பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருந்த வஹாப் காஷ்மீரி
English accentல் தமிழில் 
" டேய் ஒங்காளு எரநூறாவது படம் 'திரிசூலம்' பாத்திட்டியா" சர்புதீனிடம் கேட்டார்.

Old wine drops - 2

Old wine drops - 2

நானும் ஒரு பெண் இந்தியில் தர்மேந்திரா, மீனாகுமாரி நடித்தார்கள்.
Mein Bhi Ladki hoon.

 நானும் ஒரு பெண்ணில் ஏற்கனவே நடித்திருந்த ரெங்காராவ், ஏ.வி.எம். ராஜன் புஷ்பலதா தமிழில் நடித்திருந்த அதே பாத்திரங்களில் இந்தியிலும் நடித்தார்கள்.

அனுபவி ராஜா அனுபவி இந்தியில் ராமநாதன் இயக்கத்தில் வெளி வந்திருக்கிறது.
"முத்துக்குளிக்க வாரீகளா" வரி அப்படியே இந்தியில் ஆஷா போன்ஸ்லே பாடினார்.
ஐயோடா அம்மோடா.
மெஹ்மூத்தும் ரமாப்ரபாவும்  நடித்திருந்தார்கள்.

மனோரமா இந்தியில் நடித்த படம்'குன்வாரா பாப்'.

ஜெய்சங்கரோடு 'அன்புள்ள மான் விழியே' பாடலில் நடிக்கும் போது ஜமுனாவுக்கு கழுத்தில் பலமாக அடி பட்டிருக்கிறது. இதை சொன்னால் இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சு கோபப்படுவாரே என்று பயந்து போய் வலி வேதனையோடு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார். Chronic pain. தலை ஆடும். ஜமுனாவுக்கு முதுமையில் தலை நடுங்கும். அதற்கு கழுத்தில் அடி பட்டது தான் காரணம்.
குழந்தையும் தெய்வமும் தெலுங்கில் ஹரநாத் ராஜா ஜோடி.

தமிழ் தெலுங்கு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்த குட்டி பத்மினி இந்தியிலும் அதே இரட்டை வேடத்தில் நடித்திருக்க வேண்டும். இயக்குநர் பஞ்சு ஷூட்டிங் போது தடுக்கி விழுந்து விட்டார். பயங்கர கோபத்தில் குட்டி பத்மினியை நீக்கி நீட்டு சிங் நடித்தார்.

கே. பாலச்சந்தர் பூவா தலையா
 " அட சரி தான் போடி வாயாடி" பாட்டு நடிக்கும் போது தவறுதலாக 
ஜெய்சங்கர் கை 
வெண்ணிற ஆடை நிர்மலா
 கண்ணில் பட்டு அந்த கண்ணில் கோளாறு நிரந்தரமாக ஏற்பட்டு விட்டது.

கே. ஏ. தங்கவேலு தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். வேறு மொழிகளில் நடித்ததேயில்லை.
பச்சை தமிழ் நடிகர்.

 ஏதோ பழைய படத்தில் 
 " நல்ல பெண்மணி, நல்ல பெண்மணி' 
டி. ஏ. மதுரம் பாட்டிற்கு 
சிறுமியாக ஜெயலலிதா நடனம்

Oct 15, 2025

Old wine drops 1

Old wine drops 
 
- R.P. ராஜநாயஹம் 

(தேவராஜ்) மோகன் முத்துராமன் மனைவியின் சகோதரர்.
கார்த்திக்கிற்கு தாய்மாமா.

இயக்குநர் மாதவனிடம் வேலைக்கு சேர்வதற்கு முன்னாலே மோகன் நாடகங்களில் ஸ்திரிபார்ட் ரோல்களில் நடித்தவர்.

பாண்டி பஜார் ஒட்டி ராஜகுமாரி தியேட்டர் பகுதியில் குடியிருந்தவர் சினிமா மீடியேட்டர் பெருமாள் நாயுடு. 
அவர் சொல்வார்.  "பொண்ணுல்ல வருதுன்னு,  அதுமேலே இடிச்சிடக்கூடாதேன்னு ஒதுங்குனா அது பொண்ணு இல்ல. நாடகத்தில கதாநாயகியா நடிக்கிற மோகன்" என்று,
தான்  பதறி ஒதுங்கியதை நடித்தே காண்பிப்பார். " அவ்வளவு அழகா பொண்ணு போலவே ஸ்திரிபார்ட் வேடத்தில் நளினமாக (தேவராஜ்) மோகன் இருப்பாராம்.

பீம்சிங்கிடம் அசிஸ்டெண்ட்களாக இருந்து சாது மிரண்டால், மதராஸ் டூ பாண்டிச்சேரி, புதிய மனிதன் போன்ற படங்களை இயக்கியர்கள் திருமலை - மகாலிங்கம்.
இந்த மகாலிங்கம் நாடகங்களில் ஸ்திரிபார்ட் ஆக வேடம் போட்ட நடிகர்.

பீம்சிங் மனைவி கிருஷ்ணன் (பஞ்சு) சகோதரி.ஆமாம் கிருஷ்ணனின் உடன் பிறந்த சகோதரி.

திருமலையின் சகோதரர் பட்டு 'கண்மலர்' படத்தை இயக்கியவர். 'காயத்ரி' படத்தையும் இயக்கியவர்

தேவிகாவின் கணவர் தேவதாஸ் பீம்சிங்கிடம் அசிஸ்டெண்ட். 
திருமலை - மகாலிங்கம் சாது மிரண்டாலில் கூட தேவதாஸ் அசிஸ்டெண்ட் டைரக்டர்.

Oct 14, 2025

வேடிக்க 53 பக்கத்தில் பருவ நிலா



ஆற்றை ஒட்டி வீடு.
வசதியான தனி காம்பவுண்ட் வீடு. தூசி தான் பெரும் பிரச்னை. எங்கிருந்து தான் அவ்வளவு தூசி வருமோ? சில மாதங்கள் அங்கிருக்க வேண்டியிருந்தது.

இப்போது நினைத்துப் பார்க்கும் போது என்று இல்லை அப்புறம் பல வீடுகளில் பல ஊர்களில் குடியிருந்த போதும் அம்மா எப்போதும் அந்த வீட்டை 'தூசி வீடு' என்றே குறிப்பிடுவது வழக்கம்.

வீட்டின் எதிராக தெருவைப்பார்த்த ஐந்து சின்ன சின்ன வீடுகள். கூரை வீடுகள் அல்ல.
வீடுகள் என்றால் ஒற்றை அறை மட்டுமே கொண்ட தீப்பெட்டி போல வறியவர்களுக்கான வீடுகள். காலைக்கடன் முடிக்க ஆற்றுப்பக்கம் ஒதுங்குவார்கள்.

ஒட்டியே பத்து பதினைந்து தென்னை மரங்கள்.

முதல் வீட்டில் சாண்டில்யன் கதாநாயகி போல உயரமான பெண் இருந்தாள். அவள் சாண்டில்யன் போல இருந்தாள் என்பதே சாண்டில்யன் படித்திருந்த சப்பக்காலன் சொல்லித்தான் தெரிய வந்தது. சாண்டில்யன் தொடர்கதையில் முக்கிய பெண் கதாபாத்திரம் இவள் போல் தான் இருப்பாளாம்.கருப்பில்லாத மாநிறம். இவள் புருஷன் முகம் ஞாபகமில்லை. அதிகாலையில் கூலி வேலைக்கு போய் விட்டு இருட்டிய பின் வருவான் போல.

அதை ஒட்டிய அடுத்த வீட்டில் சினிமா கதாநாயகி போலவே படு ஸ்டைலாக நல்ல சிவப்பாக இருந்தாள். நிலா. 
தனி நிலவு தான்.

மூன்றாவது வீட்டில் இருந்த குடும்பத்தில் மோகனா - ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மோகனா மட்டும் இப்போது நினைவில். மோகனா துறு துறு குழந்தை. 
மாலை இருட்ட ஆரம்பிக்கும் போது ஐந்து சின்ன சின்ன வீட்டு பெண்களும் குழந்தைகளும் மோகனா பாட்டுக்கு ரசிகர்கள்.

"இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா 
புதுச் சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா...
இளமை தரும் இனிய பலா..
பார்க்கட்டும் இன்ப உலா..."

முழு பாடலையும் ரசித்து அந்த சிறுமி சுதியோடு பாடும் அழகு விசேடம்.

தினமும் மாலையில் மோகனா சொர்க்கத்தின் திறப்பு விழா முதலில் பாடி இன்னும் சில சினிமா பாட்டு பாடுவாள்.

நிலாவைப் பார்க்க வாராவாரம் எங்கிருந்தோ காரில் வரும் நபர் பற்றி எதுவும் தெரியாது. அந்த ஆள் வந்தவுடன் நிலாவின் ஒற்றை அறை வீட்டின் கதவு மூடிக்கொள்ளும். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க அந்த நபர் தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். நிலாவே சொன்ன தகவல் என தான் தகவலே.

இரண்டு கான்ஸ்டபிள்கள் வந்து நிலாவை உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்ப சொன்னார்கள். அவமரியாதையுடன் அவர்கள் விகாரமாக பார்த்து அழைத்த போது அவமானம் தாங்கவே முடியாமல் நிலா அழுதாள்.

அதன் பிறகு அந்த வீட்டில் அவள் இல்லை.

சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டராக ஆகி அதிகாலை சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் ஏறும் போது 
 டான்ஸ் அசிஸ்டெண்ட் ஆக பார்த்த போது
நிலா நிறம் மங்கி பொலிவிழந்து தேய்ந்து..

 "நீங்க மதுரையில இருந்தீங்கல்ல?" 

முகம் இறுகி கண்கள் தவிக்க மறுத்து 
தலையாட்டினாள்.
விரிவாக ஆற்றை ஒட்டிய ஏரியா, 
தெரு பெயர் எல்லாம் சொன்னபோதும் 
அதே மறுத்த மௌன தலையாட்டல். 

ரயில் ஏற வந்த ஹேர் டிரஸ்ஸர் சுசிலா 
 " நிலா, இந்த படத்தில நீங்களும் ஒர்க் பண்றீங்களா?"

Oct 13, 2025

வேடிக்க - 52 கண்டதெல்லாம் கடிய விலையானால்

வேடிக்க - 52

Cost an arm and a leg

1.நாய் 

கேடபாம் ஒகாமி ( நாயோட ஜாதி பேர்) விலை ஐம்பது கோடி 

2.எருமை 

விதாயக் விலை எட்டு கோடி 

 அன்மோல் விலை முப்பது கோடி 

Pay top dollar 

கண்டதெல்லாம் கடிய விலையானால் 
இந்திராணி பட்டு இருந்த விலையாகும்

கடுவாப்புலிக்கி காலக்கோட்டான் எதிரி


ஹரிராம் சேட் கடுவாப்புலியை சிவாஜி கணேசனுடன் சேர்ந்து வேட்டையாடினாராம்.

ம்..வாழ்ந்துருக்காங்க. 

"கடுவாப்புலிக்கு காலைக்கோட்டான் எதிரி"ன்னு சொலவட.

காலைக்கோட்டான்  பறவை.

கடுவாப்புலி இரையில வாய் வக்குறப்ப காலக்கோட்டான் குரல் கேட்டுச்சின்னா கொடூரமான கடுவாப்புலி பதறி இரைய விட்டுட்டு பயந்து ஓடியே போயிடுமாம். விசித்திரம்.

சுள்ளான் டேவிட் சண்டியரு கோலியாத்த சாச்சிப்பட்டான்.

அறுவது வருஷத்துக்கு முன்ன மதுரையில 
பத்து வயசு சுள்ளான் 
 சண்டியரு சக்கரத்தேவர 
பொசுக்குன்னு  
கத்திய 'சக்'னு அல்லையில சொருகிட்டான். 

காலக்கோட்டான் சமாச்சாரம் வேற. கடுவாப்புலி இதோட குரலுக்கு பயப்பிடும்னு கூடத் தெரியாது. 
கடுவாப்புலிக்கிட்ட மாட்டிக்கிட்ட மானையோ, முயலையோ காப்பாத்துற நோக்கமெல்லாம் கெடயாது. அது இயல்பா சாதாரணமாகத்தான் குரல் கொடுக்குது. கடுவாப்புலி பெரிய ஆபத்துன்னு மெரண்டு போய், செரமப்பட்டு வெரட்டிப்பிடிச்ச மான விட்டுட்டு ஓடுது. காலக்கோட்டான கடுவாப்புலி பாக்கறதும் இல்ல. பாத்ததில்ல. ஆனா அதோட குரல கேக்க 
பயமாருக்கு.

The better part of valor is discretion. 
 - Shakespeare 
எரயே வேணாம். இப்போதக்கி தப்பிச்சாகனும்.

கடுவாப்புலிங்கறது புலியா? 
கழுதப்புலியா?

காலைக்கோட்டான் ஆந்தையா? ஆந்தை மாதிரி இன்னொரு பறவையா?

Comments

Chandhra Mouli S :

காலைக் கோட்டான் ஒரு வகை ஆந்தையாம். மனித நடமாட்டம் இல்லாத அடர்வனத்தில் வசிக்குமாம். அதன் குரல் பதிவு இல்லை

Guna Seelan K :

கடுவாப்புலி என்பது சிறுத்தைபுலி. அதுதான் சத்தம் கேட்டால் பயப்படும். கோட்டான் என்பது ஆந்தையின் இன்னொரு வகை. காலைக்கோட்டான் என்பது தனிப்பறவை அல்ல. அது கூகைதான் கோட்டான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஆந்தை என்பது சிறிதாய் இருக்கும். கோட்டான் கொஞ்சம் பெரிதாக இருக்கும். 

Tamilselvan Siva : மலையாளத்துல புலிய கடுவான்னு சொல்லுவாங்க…

கோட்டான் கூகை =barn owl .

Interestingly when you search further

கடுவாய் (Hyena; hyaena hyaena):
பாலூட்டிகளிலே பற்களின் அழுத்தம் 800 கிலோகிராம் செலுத்தும் தன்மை உள்ளவை ஹைனா என்னும் கடுவாய் விலங்குகள் தாம். 1100 psi (pounds per square inch) pressure are exerted to break the bones of dead animals' carcasses. எனவே, கழுதைப்புலிகளுக்குப் பழம்பெயர் கடுவாய் என்பதாகும்.  இவை பட்டியில் இருக்கும் ஆடு மாடுகளை வேட்டையாட வரும் போது கோட்டான் (barn owl) கத்தும் எனக்கொள்ளலாம்…

Vijai Pandian  : 

கடுக்கா புலி ... சிறுத்தை புலி ஆந்தை பெரிய உருவத்தில் இருப்பது... கோட்டான்..
அதாவது மனிதர்கள் மற்றும் பெரிய உருவம் கொண்ட உயிரினம் வந்தால் மேல் பகுதியில் இருந்து தனக்காக சத்தமிடும் அந்த சத்தம் சிறு புலிக்கு ஆபத்து என உணர்ந்து ஓடும் ...


Oct 11, 2025

God's own country

மலையாளம் தாய்மொழியாகக் கொண்ட இரண்டு பெரியவர்கள். இருவருக்கும் 
 75 வயதிருக்கும்.

ஒருவர் சென்னை பச்சையப்பாஸ்ஸில் தான் படித்தவர். 

மற்றவர் மம்முட்டி ரசிகர். 
அன்று சென்னையில் மம்முட்டி வீட்டிலும் மகன் துல்ஹர் சல்மான் வீட்டிலும் வருமான வரி சோதனை. 
ரயிலில் ராஜநாயஹம் Otto T. Shirtல்.

மந்தைவெளி டவுசர் கடை, எல்டாம்ஸ் ரோட் Samco பற்றியெல்லாம் பேசினார்கள்.

ஒருவருடைய பாட்டி அப்பாவுக்கு சொத்து கொடுக்காமல் பேரனான இவருக்கு சொத்தை கொடுக்க விரும்பி கேரளாவில் சொந்த ஊருக்கு வந்து விடச்சொல்லி வரச்சொல்லி, இளமையில் இவரும் போயிருக்கிறார்.
ஆறு மாதத்தில் இவர் தன் பாட்டியிடம் 
 " உன் சொத்தே எனக்கு வேண்டவே வேண்டாம். நான் இங்கே இருக்கவே மாட்டேன்" என்று மலையாள மொழியில் சொல்லி விட்டு மெட்ராஸ் வந்து விட்டாராம்.
ஏன்?
அந்த ஜனங்கள் பிடிக்கவில்லை. 
நல்லவர்கள் இல்லை.
God's own country but
 Devil's own people.

அதோடு கேரளாவில் ரொம்ப stray dogs.

கேரளாவில் இப்போதும் பிடித்தவை
1.பச்சை பசேல் பசுமை அழகு.
2. அந்த தண்ணீர் Sweet water.

மம்முட்டி ரசிகரான மற்றவர் சொல்கிறார்.
God's own country gone to dogs.

ஆவடியில் இறங்கினார்கள்.

மோகன்லால் அந்திம காலத்தில் கேரளாவில் இருந்து வெளியேற விரும்புவது,
கமல்ஹாசன் கடைசி காலத்தில் கேரளாவுக்கு போக விரும்புவது..

Taste differs.
One man's food is another man's poison 

Oct 9, 2025

188, 189 Episodes Cinema Enum Bootham

188, 189 Episodes
R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

கவிஞர் வைர முத்து

கவிஞர் முத்துலிங்கம் 

12.10. 2025 ஞாயிற்றுக்கிழமை 

19. 10. 2025 ஞாயிற்றுக்கிழமை 

முரசு டிவியில் 
ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு

Oct 7, 2025

பாண்டிச்சேரி எழுத்துலகம்

பாண்டிச்சேரி எழுத்துலகம்


R.P. ராஜநாயஹம் "தித்தித்தது" நூலில் 
காலக்கண்ணாடி காட்டும் கடிதம் 

பழைய கடிதங்களை புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்த போது
 1989 ல் சரவணன் மாணிக்கவாசகத்திற்கு எழுதிய கடிதம் பார்க்க கிடைத்தது. 

அந்த கடிதத்தில் சாரு நிவேதிதா, அவர் எழுதிய முதல் நாவல்,
 விடுதலை சிறுத்தை ரவிக்குமார்(விழுப்புரம்M.P), 
பிரேம்-ரமேஷ், கவிஞர் மாலதி மைத்ரி பற்றியெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன்.
கடிதத்தை இந்தப் பதிவில் தருகிறேன்.
நீங்க எழுதின கடிதம் உங்க கிட்டயே எப்படி சார் இருக்கு..போஸ்ட் பண்ணவே இல்லையா என்று கேட்கலாம். நான் எழுதும் முக்கிய கடிதங்களை நான் அப்போதெல்லாம் ஜெராக்ஸ் செய்து வைத்துக்கொள்வதுண்டு.
அப்படி க.நா.சு இறப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் அவருக்கு எழுதிய கடிதம் கூட என்னிடம் இருக்கிறது.

பாண்டிச்சேரி,

12-12-1989

அன்பு மிக்க சரவணன் மாணிக்கவாசகம்,

ராஜநாயஹம் எழுதும் கடிதம். வணக்கம். நலம் நலமே விளைக.

‘அறிவு ஜீவிகள் அந்தந்த நேரத்தில் நாகரீகமாக,அதிகச்செலாவணி உள்ளதாக உள்ள சிலச்சார்புகளை அபிநயித்துக்கொண்டு,சில ’தியரிகளை’ உச்சாடனம் செய்து கொண்டு  உஞ்சவிருத்தி செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள்’
- ஆதவன்.

பிரேதா என்பது முக்கியமாக பிரேமானந்தன் கிரணம் இரண்டாம் இதழில் ரமேஷ் பிரேதன் என்ற பெயரிலும் உள்ள பகுதி அவருடைய நண்பர் ரமேஷ்.
சாரு நிவேதிதா கிரணத்தை பிரேதாவுக்காகவே நான்கு இதழ்கள் நடத்தியிருக்கிறார்.
நான் முன்னர் பழனியிலிருக்கும்போது உனக்கு அனுப்பிய கவிதைப் பகுதிகள் ரமேஷ் பிரேதனுடையவை.
இருவர் எழுத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. இது குறித்து இந்த இருவருக்குமே பெருமிதம் தான்.

பிரேதாவுக்கும் ரமேஷுக்கும் 25 வயது தான். பால்ய காலத்திலிருந்தே நண்பர்கள். எல்லா அறிவு ஜீவிகளுக்கும் உள்ள சகல கல்யாண குணங்களும் இவர்களிடமும் கண்டேன்.’இந்த உலகத்தில எதுவுமே சரியில்ல.தமிழிலக்கியம் குப்பை. அதில என்ன இருக்கு. பேசாம குமுதம் படிக்கலாம்’ என்றே பிரேமும் ரமேஷும் அபிப்ராயப் படுகிறார்கள்.

எனக்கு வியாபார எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்து விட்டது.
 ‘இந்த உலகத்திலுள்ள சூட்சுமமான வேதனைகளையெல்லாம் அனுபவித்தவன் பாரதி. இந்த உலகத்தில எதுவுமே சரியில்ல என்று நினைக்கிறவனெல்லாம் பாரதியை நினச்சா அழத்தான் முடியும்’ 
இதைச்சொல்லி, இங்க எதுவுமே சரியில்லங்கற கவலை பாரதியிடமே துவங்கி விட்டதே என்றேன்.

தீவிரமான தேடலுக்கு முன்னுதாரணமாக காலத்துக்கு முந்தியே பிறந்து காலத்துக்கு முந்தியே செத்துப் போவான் சிரஞ்சீவிக்கலைஞன் ஜி.நாகராஜன்’ என்று விக்ரமாதித்யன் விம்மியதை சுட்டினேன்.  
ஜி.நாகராஜன் கவனிக்கப்படவேண்டிய கலைஞன் என்று பிரேமின் தலையாட்டல்..

எனக்கு திலீப்குமாரின் ‘ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்’ கதை நினைவுக்கு வந்து விட்டது. 
 ‘ வாழ்க்கைக்கு முற்றிலும் புதிதான ஒரு ஒழுங்கை வழங்கி விட நாம் எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறோம்.
அதற்காக கோபப்படுகிறோம்,போராடுகிறோம்...
நமக்கு பாதையை விட இலக்கே முக்கியமாக இருக்கிறது. பாதையின் பயங்கரமான நீளத்தை நாம் அறிய மாட்டோம். நம்மில் முட்டாள்கள் பாதையில் மடிந்து இல்லாத இலக்குக்கு இரையாகிப் போவார்கள். புத்திசாலிகள் பாதையின் ஒரு அசிங்கமான மூலையில் நின்று அதையே இலக்கு என்று ஆர்ப்பரித்து ஏமாற்றுவார்கள்.
மீண்டும் புதிதான கோபங்கள்,புதிதான போராட்டங்கள்.’

இருவரும் அமைதியாக எந்த Expressionம் முகத்தில் காட்டாமல் உற்றுப்பார்த்தார்கள்.

 பிரமிள் திசை நான்கு பத்திரிக்கையில் பிரேதா கவிதைகளை கடுமையாக தாக்கி எழுதியிருந்தார். இது குறித்து பிரேம்
 ‘ நான் இதையெல்லாம் பொருட்டாக எண்ணவில்லை.லத்தீன் அமெரிக்காவிலே பட்டினியால செத்துக்கிட்டிருக்காங்க.அதைப் பத்தி கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறேன் நான். மதுரையில் என் நண்பன் வீட்டில் போலீஸ் புகுந்து அடிச்சிருக்காங்க.அது தான் இப்ப என் பிரச்னை.
 பிரமிள்  Moralist. நான் ஒ Immoralist.'

நேரு ஸ்ட்ரீட்டில் ஒரு நாள் என் மனைவிக்கு சேலை எடுக்க Ram Silks என்ற கடைக்குப் போனபோது அங்கே வேலை செய்து கொண்டிருந்த மாலதியை சந்தித்தேன். ப்ரேம் ரமேஷின் தோழி மாலதி.

சிண்டிகேட் பேங்க் வேலையில் இருக்கும் ரவிக்குமார் இவர்களின் நல்ல நண்பர். அவர் மீது மிகுந்த அபிமானம்.

எப்போதும் சிரித்த முகத்துடன் ரவிக்குமார்.கையில்  Michel Foucault 's The History of Sexuality.

ரவிக்குமார், ப்ரேம்,ரமேஷ், மாலதி- இவர்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ள ஒருவர் உண்டென்றால் அவர் சாரு நிவேதிதா.

சாரு நிவேதிதா இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ‘எக்ஸிஸ்டென்சியலிசமும், ஃபேன்ஸி பனியனும்’ என்ற Meta fiction novel விரைவில் வெளிவர இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆபுதின் எழுதிய நாவல்கள் கையெழுத்துப் பிரதியிலேயே இருக்கின்றன. பிரேதா :ரமேஷ் பிரேதன் எழுதிக்கொண்டிருப்பதும் கதையை  உடைக்கும் வகையைச் சார்ந்தது தான்.

இந்த நேரத்தில் ’திரைகளுக்கப்பால்’ என்ற இந்திரா பார்த்தசாரதியின் நாவலைப் படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இன்றைய இலக்கியவாதிகளின் current topics - லத்தீன் அமெரிக்க கலாச்சார மூவ்மெண்ட்ஸ்- நடுத்தர வர்க்க அபாயங்கள்- ஹென்றி மில்லர் என்றெல்லாம் இ.பா 1972லேயே எழுதியிருக்கிறார். 

அவரோடு அவருடைய ஏ.சி.அறையில் நேற்று காலையில் பேசிக் கொண்டிருக்கும்போது ‘ஃப்ரான்சில் இப்போது Meta Fiction அலுத்துப்போய் மீண்டும் Straight ஆக கதை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்’ என்று சொன்னார்.

நேற்று மாலை Chamber of Commerce ல் பாரதி முதலான கவிதை என்பதாக கருத்தரங்கு. 
சிறப்பு  விருந்தினராக கி.ராஜநாராயணன் கலந்து கொண்டு நடத்தினார்.

கி.ரா., இ.பா. போன்ற இலக்கியவாதிகளுடனான என் அனுபவங்கள் எழுத எழுத விரியும். (அருவியின் அருகில் நிற்பதாக உணர்கிறேன்.)

அன்புடன்

R.P.ராஜநாயஹம்

......

R.P. ராஜநாயஹம் "தித்தித்தது" புதிய நூலில் இடம் பெற்றிருக்கிறது.



https://www.facebook.com/share/p/16hGpecnN5/

https://www.facebook.com/share/1YTTd2rg1G/

https://www.facebook.com/share/p/17LvUbhzY4/

http://charuonline.com/blog/?p=8296&fbclid=IwdGRjcANN3CxjbGNrA0zUAwEdH4pyvMg83lb34XYb1oBaos7mejM1d_IsqH3JuRD_BaKpPhRMxaQXTvbG

Oct 1, 2025

வேடிக்க - 51

வேடிக்க - 51

Donald Trump Half Century 

அம்பது தடவ சொல்லிட்டாராம்.
இதல்லாம் யாரு வேல? மெனக்கெட்டு எத்தன தடவன்னு எண்ணிப்பாத்துக்கிட்டே, எண்ணி எண்ணி பாத்துக்கிட்டே இருக்கிறதோ?

அமைதிக்கான நோபல் பரிசு கடும் முயற்சி.
தும்பிக்கய ஊனி நாலு காலயும் மேல தூக்கி சங்கு சக்கரமா சுத்துறாரு.

"நான் தான  இந்தியா பாகிஸ்தான் போர நிறுத்துனேன். என்ன நாஞ்சொறது.."

இதுல மந்திரவாதி யாரு? 
ரத்தங்கக்கறது யாரு?

ராமதாஸ் அன்புமணி ரெண்டு பேருல 
யாரு மந்திரவாதி? யாரு ரத்தங்கக்கறது?

பாக்ற சினிமா படங்கள்ளயே இப்பல்லாம் வில்லன் யாரு ஹீரோ யாருன்னு புரிய மாட்டேங்குது.

மரத்ல வால தொங்கப் போட்டு ஆட்றவன் தான் ஹீரோன்னு நெனச்சா 
இன்னொருத்தன் தும்பிக்கய ஊனி நாலு காலயும் மேல தூக்கி நிக்றான். 
ஒடனே மரத்ல வால தொங்கப் போட்டு ஆடுனவன் குதிச்சி எறங்கி தும்பிக்கய தரையில ஊனி நாலு காலயும் மேல தூக்கி நின்னு " இங்க பாரு, இக்கட சூடு" ன்னு சங்கு சக்கரமா சுத்த ஆரம்பிச்ட்றான்.
ஹீரோ யாரு? வில்லன் யாரு? 
குழம்புது.
மந்த்ரவாதி யாரு ரத்தங்கக்கப்போறவன் யாரு?

'யானைக்கி தோட்டா நெத்தியில'ன்னு புரியிறமாரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு கதயே கிடயாதா?

எலுமிச்சப் பழம் இருக்கு. புளியம்பழம் இருக்கு. 'அதுக்கு இது நீளந்தான், புளிப்புல அவுங்க அப்பன் தான்'னு தெளிவா இருக்குதே. 

'வெள்ளரிப்பழத்துக்கு பூண்' போடற மாதிரி  கத உட்றத  பாக்கும்படி 
சுத்திலும் 
நெறய நெறய வேடிக்க. தலயில மரம் மொளக்கிது.

Confusion has it's Masterpiece.
- Shakespeare 
Macbeth