Share

Oct 13, 2023

பிரபலமாகாத எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட்


மாமா இசையில்
எம்.ஜி.ஆர் சரோஜா தேவி டூயட் பாடல்களில் கூட ரசமில்லாத, ஈர்ப்பில்லாத பிரபலமாகாத பாடல் இருக்கிறதே..


"இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம்?

கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் 
அது கோடை என்றாலும் குளிர்காலம்.

முழுமதி முகத்தை கைகளில் மறைத்தால் 
வையகம் முழுதும் இருளாகும் "

கண்ணாம்பா நாகபூஷணம் தம்பதியர் எடுத்த படம் 'தாலி பாக்கியம்'

வாலி காத்திருந்த கண்களே பாட்டிலும் கூட
எழுதியிருக்கிறார்.
'கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன' 

இப்படியே இன்னும் எத்தனை பாடல்களில் இதையே எழுதியிருக்கிறாரோ?

https://youtu.be/uZgSpKOTIAA?si=2F5ADTNDc6_XPwTi

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.