Share

Jul 7, 2022

தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் பற்றி இயக்குநர் மகேந்திரன்

"என்னுடைய படங்களில், 
எனது அணுகுமுறை இயல்பாக, யதார்த்தமாக நான் கற்றுக்கொண்டதே தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் இருவரையும் படித்துத் தான்.
 இவர்களின் எழுத்தில் இட்டுக்கட்டும்  சமாச்சாரமே இருக்காது. 
அவர்கள் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள், 
உற்றுக்கவனித்த
 சுற்றுச் 
சூழ்நிலைகள், 
அவர்களில் - அவைகளில்... 
அந்த எழுத்தாளர்கள் கண்ட விதவிதமான உணர்வுகள் - அவற்றை அவர்கள் நாவல்கள், சிறுகதைகள் மூலம் சொல்லும்போது எனக்கு நாவல் படிக்கும் உணர்வு ஏற்படாது. படம் பார்ப்பது போலவே இருக்கும்.

 நாமெல்லாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும்,
 சுற்றி நடக்கும் சம்பவங்களையும் கொஞ்சம் விழித்துப் பார்த்து, ரசிக்கும் வித்தையை தி.ஜானகிராமன் நாவல்களைப் படித்தால் புரியும்."

- இயக்குநர் மகேந்திரன்

'வண்ணத்திரை'
சினிமா பத்திரிகையில்
1991 பிப்ரவரி முதல் வார இதழில்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.