Share

May 3, 2020

எழுத்தாளர் கர்ணன்



"மரணத்தை நேருக்கு நேரா
விரும்பி சந்தித்த மனிதன் ஜி. நாகராஜன் "
இப்படி சொன்னார் கர்ணன்.
நாகராஜனின் சகா இந்த எழுத்தாளர்.
மதுரை 'கண்ட' எழுத்தாளர் என்று எழுதினால்
அது அபத்தமாக தெரியும். காணாமல் போன எழுத்தாளர். மதுரை கண்டு கொள்ளாமல் போன எழுத்தாளர்.
84 வயதான கர்ணன் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார்.
தையல் கலையில் கூட அந்த காலத்தில் கோடீஸ்வரனான டெய்லர்கள் உண்டு.
டெய்லர் கர்ணனுக்கு அப்படியும் லபிக்கவில்லை.
மேல மாசி வீதி தானப்ப முதலி தெரு, வடுக காவல் கூட தெரு பகுதியில் டெய்லர் கடை வைத்திருந்த கர்ணனின் முதல் சிறுகதை தொகுப்பு 'கனவுப் பறவை'
சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' பிரசுரமாக
1964ல் வெளி வந்தது.
ந. பிச்சமூர்த்தி தான் கர்ணனின் கனவுப்பறவைக்கு ஒரு முன்னுரை எழுதினார்.
எழுத்து இலக்கிய பத்திரிக்கையிலேயே தான் இவர் எழுதிய 'சுமை' கதை வெளி வந்திருக்கிறது.
ப்ரசன்னம் என்ற கதை விசேஷமானது.
48 நூல்கள் கர்ணன் எழுதியுள்ளார்.
இவருடைய 'உள்ளம்' நாவலை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். 
கவிதா பதிப்பகம் சிலவற்றை வெளியிட்டிருக்கிறது.
மணிவாசகர் நூலகம் கர்ணனின் 'அகம் பொதிந்தவர்கள்' வெளியிட்டிருக்கிறது.
இதே பதிப்பகம் வெளியிட்ட மற்றொரு நூல்
‘வெளிச்சத்தின் பிம்பங்கள்’
நர்மதா பதிப்பாக 'கி. வா. ஜ முதல் வண்ணதாசன் வரை' கர்ணனின் புத்தகம்.
......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.