Share

Oct 28, 2016

Left-handed compliment


எங்கள் கல்லூரிக்கு கவிஞர் கண்ணதாசன் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்தார். மாணவர் யூனியன் அழைப்பின் பேரில். பணம் கொடுக்க வேண்டிய மாணவர் செக்ரட்டரி ரொம்ப தந்திரமாக அவர் கிளம்பும்போது மறைந்து விட்டான். முட்டாள். He had buried his head in the sand. அவன் என்ன நினைத்தான் என்றால் இந்தத் தொகையை அவரிடம் கொடுக்காமல் தப்பித்து விட்டதாக.

கண்ணதாசன் தங்கியிருந்த ஹோட்டலுக்குப்போனவுடன் டிரைவரிடம் “பணம் வாங்கி விட்டாயா?” என்று கேட்டிருக்கிறார். டிரைவர் ‘இல்லையே.. யாரும் கொடுக்கவில்லையே!’
“ போய் உடனே வாங்கிக்கொண்டு வா!”
கல்லூரிக்கு வந்து கண்ணதாசனுடைய டிரைவர் ஆஃபிஸில் சீன் க்ரியேட் செய்து விட்டான். மாணவர் யூனியன் செக்ரட்டரியைத் தேடிப்பிடித்து பணத்தை வசூல் செய்து கண்ணதாசன் டிரைவரிடம் கொடுத்தனுப்பினார்கள்.
………………………………………………………………………………………………..


ஜூலியானாவை திருமணம் செய்வதற்கு ஐந்து வருடங்களுக்கு முன் ஜெமினி கணேசனை Chief guest ஆக சிவகாசியில் ஒரு க்ளப் அழைத்திருந்தார்கள். அவர் அங்கிருந்து என் பெரிய மாமனாரின் வீட்டிற்கு வருவதாக உத்தேசம். அவரை அழைத்துக்கொண்டு வர என் பெரிய மாமனாரும் நானும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து போயிருந்தோம்.

அந்த க்ளப் நிகழ்ச்சிகளெல்லாம் முடிந்தவுடன் ஜெமினி தங்கியிருந்த அறையிலிருந்து கிளம்பும் நேரம். க்ளப்பின் தலைவர், செக்ரட்டரி எவரையும் காணவில்லை. அவருக்கு ஒரு தொகை தர வேண்டும். அந்த தொகையும் அவருக்கு கிடைக்கவில்லை.
ஜெமினி பொறுமையிழந்து “என்னய்யா?... எங்கய்யா ஒங்க ப்ரசிடெண்ட். ஒங்க செக்ரட்டரி.”
க்ளப் மெம்பர் ஒருவர் “ சார்.. அவசர வேலையா திடீர்னு கிளம்பிட்டாங்க சார்…”
“ எங்கய்யா பணம்…? “ ஜெமினி கைவிரல்களை விரித்துக் கேட்டார்.
” சார்… மதுரையில உங்களுக்கு பாண்டியன் ஹோட்டல்ல ரூம் ஏற்பாடு செஞ்சிருக்கோம் சார்….” தலையை சொறிந்தார் க்ளப் மெம்பர்.
ஜெமினி “ எனக்கு கொடுக்க வேண்டிய பணம் எங்கய்யா?”
பதில் சரியாக வரவில்லை. மீண்டும் இன்னும் சில மெம்பர்கள் மலுப்பலாக ஏதேதோ சொன்னார்கள்.
ஜெமினி கோபமாகி விட்டார். “ மிஸ்டர்! I’m a multi-millionaire. That’s a different thing. நான் இங்க உங்களுக்காக வந்திருக்கேன். என்னை ஒரு மகாராஜா மாதிரி ட்ரீட் பண்ணனும்! You are insulting me.”
என் பெரிய மாமனார் அந்த க்ளப் மெம்பர்களிடம் பேசி பணத்தை வாங்கி ஜெமினியிடம் கொடுத்தார்.
It was very hard for Gemini to swallow this unpleasant occurrence and he hauled them over the coals. “ எங்கிட்ட இப்படி சில்லியா நடந்துக்கறாங்க. இதுவே சரத்குமாரிடம் இப்படி செஞ்சாங்கன்னா அடி வெளுத்துடுவான். ஆமா… சரத்குமார் அடிச்சிடுவான்.பந்தாடியிருப்பான்.”

……………………………………………………….



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.