Share

Mar 20, 2013

கம்பரும் ஒட்டக்கூத்தரும்



”கம்பரை ஒட்டக்கூத்தர் என்ன பாடு படுத்தியிருக்கிறார் தெரியுமா?” என்று கி.ராஜநாராயணன் பேசும்போது என்னிடம் கேட்டார். 
நான் ஆர்வமாக “ சொல்லுங்க அய்யா ” என்றேன்.


கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்படும்போது கம்பர் எழுதிய ’துமி’என்ற வார்த்தையை ஒட்டக்கூத்தர் ஆட்சேபித்திருக்கிறார். துமி என்று தமிழில் வார்த்தையே கிடையாது என்பது ஒட்டக்கூத்தர் வாதம்.

மன்னர் திரும்பி கம்பரைப் பார்த்திருக்கிறார். “ மன்னா! மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள சொல் தான் துமி.” என்று கம்பர் பதில் சொல்லியிருக்கிறார். ஒட்டக்கூத்தர் தமிழில் துமி கிடையவே கிடையாது என்று சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு ஆடியிருக்கிறார். கம்பரின் காவிய அரங்கேற்றம் நிறுத்தப்பட்டு விட்டது.


மறு நாள் அரசர் நகருலா செல்கிறார். கூடவே கம்பரும் ஒட்டக்கூத்தரும். ஒரு வீட்டில் இருந்து ஒரு வினோத சத்தம். “ இது என்ன சத்தம்” என்று ராஜா கேட்கிறார். கம்பர் உடனே “ மத்தினால் தயிர் கடையும் சத்தம் மன்னா” என்று சொல்லியிருக்கிறார். 
ராஜா இதையெல்லாம் எங்கே கண்டிருக்கிறார். கேட்டிருக்கிறார். “ இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கிறதே! கொஞ்சம் நேரம் நின்று கேட்போமே” என்று சொல்லியிருக்கிறார்.

வீட்டின் உள்ளே குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. ராஜாவுக்கு உள்ள ஆர்வம் குழந்தைகளுக்கும்! அப்போது ஒரு பெண் பேசுவது கேட்கிறது: பிள்ளைகளா! கொஞ்சம் தள்ளி நில்லுங்க. துமி தெறிக்கும்!
ராஜா : இதோ துமி என்று வார்த்தை இருக்கிறதே!
தயிர்த்துளி குழந்தைகள் உடம்பு மீது தெறித்து விடும் என்று எச்சரிக்கிறாள் என்பதை கம்பர் விளக்குகிறார்.

ராஜாவுக்கு நேற்று கம்பர் ராமாயணத்தில் வாசித்தது சரி தான் என்று புரிந்து விடுகிறது.


தோயும் வெண் தயிர் மத்தொலி துள்ளவும் ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் என்று சொன்னதும் கம்பன் தான்!

மறு நாள் கம்பராமாயணம் மீண்டும் அரங்கேற்றம்.
கம்பர் நெகிழ்ந்து ராமாயணத்தை ஆரம்பிக்கும் முன் கண்ணில் நீர் மல்க தயிர் கடைந்த பெண்ணை நினைந்து “ சாட்சாத் கலைவாணியே வந்து என் சாகித்யத்திற்கு சாட்சி சொன்னாள்” என்று prologue பாடினாராம்!

கி.ரா. இந்த இடத்தில் நிறுத்தி என்னிடம்” ’தூமை’ என்று பெண்கள் மாதவிலக்கு பற்றி சொல்வதும் இதுவேதான். துளி,துளியாக யோனியிலிருந்து ரத்தம் வெளியேறுவதும் ’துமி’ தான்.” என்று விளக்கம் செய்தார்.

ரசிகமணி டி.கே.சி கம்பராமாயணத்தின் கடைசிபகுதி ஒட்டக்கூத்தர் எழுதி செருகியதென்று ஆராய்ந்து சொன்னார் என்பதையும் கி.ரா. சொன்னார்.

அரசர் அந்தப்புறம் செல்லும்போது ஒட்டக்கூத்தரை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். அரசருக்கு ராணியைப் புகழ்ந்து ‘அவளே! இவளே! உள்ளத்தில் இருப்பவளே! என்னவளே!பொன்னவளே! உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகுதடி!’ என்றெல்லாம் கவி பாடத்தெரியாதே. அதனால் புலவர் ஒட்டக்கூத்தரை பள்ளியறை முன் பாட அழைத்துப் போயிருக்கிறார்.

பள்ளியறை கதவு முன் நின்றவுடன் ஒட்டக்கூத்தர் “ நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமைய ப் பத்தி ராணிக்கு இப்பத் தெரியும் பாருங்க!” என்று ராஜாவிடம் சொல்லிவிட்டு உற்சாகமாக “ ராணி! உங்க கண்ணாலன் ராஜா வந்திருக்கிறார். கதவைத் திறங்க!” என்று ஆரோகணமாகப் பாட ஆரம்பித்திருக்கிறார்.உச்சஸ்தாயி! 

ராணி பயங்கரக்கோபமாகி உடனே,உடனே ரெட்டைத்தாழ்ப்பாள் போட்டாளாம்!

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!

அன்னைக்கு ராஜாவுக்கு டொக்கு போடுற சான்ஸ் மிஸ்ஸாயிருச்சி!


அரசர் ஒருவேளை கம்பருடன் போயிருந்தால் மகாராணி சந்தோஷமாக கதவைத்திறந்து “ உள்ளே வாங்க!” என்று சொல்லியிருப்பாள். கம்பரை உபசரித்து அனுப்பி விட்டு சயனப் படுக்கைக்கு ராஜாவுடன் சென்றிருப்பாள்.

கம்பர் பெருமை பற்றி, ஒட்டக்கூத்தர் போலித்தனம் பற்றி ராணி தெரிந்து வைத்திருந்தது பெரிய விஷயம்.

  ஔவைபாட்டி நடந்த களைப்பு தீர ஒரு கோவில் வெளிச்சுவற்றில் முதுகைச் சாய்த்து உட்கார்ந்து ரிலாக்ஸ்டாக கால்கள் இரண்டையும் நீட்டியிருக்கிறாள்.
 ’உஷ்’ என்று வாய் குவித்துக் கண்மூடித் திறந்திருக்கிறாள். 
அரசர் வருவது தெரிந்திருக்கிறது. 
உடனே ஒரு காலை மடக்கியிருக்கிறாள். 
அடுத்து கம்பர் வருவதைப்பார்த்திருக்கிறாள். 
உடனே மிகுந்த மரியாதையுடன் இன்னொரு காலையும் மடக்கிக்கொண்டாளாம். 
பின்னால் பார்த்தால் ஒட்டக்கூத்தர் பந்தாவாக வந்திருக்கிறார். ஔவைப்பாட்டி உடனே இரண்டு காலையும் நீட்டிவிட்டாளாம்! ‘ ஒனக்கு எதுக்குடா மரியாதை!’


.........



 தூமை என்பதை முன் வைத்து  கண்ட சம்பவம் ஒன்று.


தெருவில் ஒரு சண்டை. ஒரு கிழவி ஒரு கட்டத்தில் ஒரு இளைஞனைப் பார்த்து உரக்க “ என் தூமையைக் குடிக்கி “ என்று கூவினாள். உடனே அவன் அவளிடம் ’உனக்கு இந்த வயசிலுமா வடியுது?’ என்று கேட்டு விட்டு உடனே, கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்து ’ விலகு, விலகு, ஒதுங்கு’ என்று அந்தக்கிழவியை நோக்கி முன்னேறி வந்து அவள் முன் மண்டியிட்டு, குழாயில் தண்ணீர் குடிக்க கை குவிப்பது போல குவித்து, 
” ஊத்தாத்தா..ஊத்து…ஊத்தாத்தா..” என்றான்! 


...............................................
 


http://rprajanayahem.blogspot.in/2009/10/amadeus.html

http://rprajanayahem.blogspot.in/2009/04/blog-post_24.html 

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_6727.html

Mar 17, 2013

இத்தாலி



இத்தாலியை நினைக்கும்போது முஸோலினியைத்தான் யாருக்கும் 
பிடிக்காது.
இத்தாலியை நினைக்கும்போது ஓவியன் மைக்கல் ஆஞ்சலோ
திரை இயக்குனர்கள் ரோஸ்ஸலினி, ஃபெல்லினி, பஸோலினி என்று சுவாரசியங்கள், 


ஹாலிவுட் நடிகர்கள் ராபர்ட் டி நீரோ, லியோனார்டோ டி காப்ரியோ.

அந்தக்காலத்தில் மதுரை ரீகல் தியேட்டரில், பரமேஸ்வரி தியேட்டரில்  படம் பார்க்கும் தரை டிக்கட் ரசிகர்களுக்கு சோபியா லாரனைப் பிடிக்கும். ஆனால் சுத்தமாக ஜீனா லோலா பிரிகிடாவைப் பிடிக்காது. 
ரொம்ப பந்தா,ஸ்டைல்,மேக் அப் பண்ணுகிற,பார்க்க அசிங்கமான, அவலட்சண முகம் கொண்ட  below average பெண்களைக் குறிக்க ‘ ஜீனா லோலா பிரிகிடா’ என்று விவரிப்பார்கள்.டப்பா தாட்டி டா! ஜீனா லோலா பிரிகிடா!

 
  The Name of the Rose  நாவல் எழுதிய உம்பர்ட்டோ ஈக்கோ,  


   
Italian food! – The food stinks, Except in Italy!
பீட்ஸா, ஐஸ்கிரீம்
Italy – Musical country!  

தென்றல், முதல் காதல், இத்தாலி இந்த மூன்றும் ஒன்றாக சேர்ந்தால் விரக்தியான மனிதன் கூட குதூகலமாகிவிடுவான் என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் தத்துவம் பேசினார்.

ஆனால் இந்தியர்களுக்கு போஃபர்ஸ் துவங்கி ஆடம்பர ஹெலிகாப்டர் பிரச்னை போன்றவைகளால் இத்தாலி என்பது குறித்து ஒரு ஒவ்வாமையுணர்வு.

இந்திய அரசியல் அரங்கில் சில கட்சிகளுக்கு இத்தாலி மீதுள்ள வெறுப்புக்கு சோனியா காந்தி ஒரு காரணம்.

ராஜீவ் காந்தி பிரதமராயிருக்கும்போது கம்யூனிஸ்ட் எம்.பி. சதுரனன் மிஸ்ரா சொன்னது :  It is so hard to approach the Prime Minister, in the front there are battalions, at the rear there are Italians.

இத்தாலிய கப்பல் கேரளக்கடற்கரை மீனவர்களை சுட்டுக்கொன்றது. அந்த இத்தாலிய கைதிகள் இருவருக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட பரோலில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் திரும்பி மீண்டும் சிறை புகுந்தார்கள். நேர்மை, கண்ணியம் என்று நினைக்கவேண்டியிருந்தது.
மீண்டும் இத்தாலி பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டி இத்தாலிய கைதிகள் இன்னொரு முறை தாய் நாடு சென்றார்கள். இந்திய சிறை திரும்பவில்லை. இத்தாலிய அரசே உடந்தை. இந்தியாவில் இத்தாலியத் தூதர் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்று நியாயஸ்தலம் தடை விதித்து விட்டது.

கேஸ் வாபஸ் வாங்குவதற்கு பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு கோடி ரூபாய் வரை தருவதாக இத்தாலி சொன்னதை ஏற்றிருக்கவேண்டும் என்று தினமணி தலையங்கம்.


ஃபாரின் டிப்ளமஸி பற்றி நன்கறிந்த நட்வர்சிங் ( முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ) சொல்வது : Italian Ambassador can’t be prevented from leaving.

 There’s sanctity about the rules of old diplomacy. Infact modern diplomacy started in Italy.
’இத்தாலி செய்திருப்பது நம்பிக்கைத் துரோகம் தான். இது இரண்டாம் உலகப்போரின்போது  பேர்ல் ஹார்பரில் குண்டு போடப்பட்ட சம்பவத்திற்கு சமம் என்கிறார் நட்வர்சிங். அந்த சமயத்தில் கூட ரஷ்யா மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியபோது ரஷ்யாவிலிருந்த ஜெர்மனி தூதர் கைது செய்யப்படவில்லை. அடாவடியான ஜெர்மனியிலும் கூட அப்போது எதிரி நாட்டுத்தூதர்கள்  வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்படவில்லை. எனவே இத்தாலிய தூதர் மன்ஸினி இந்தியாவை விட்டு வெளியேறத் தடை செய்வதெல்லாம் சாத்தியமானதில்லை என்றும் சொல்கிறார். 


ஹெலி காப்டர் ஊழல் பிரச்னை, கேரள மீனவர் பிரச்னை, இத்தாலிய கைதிகள் போன்ற இடியாப்பச்சிக்கல்கள் இருக்கும் நேரத்தில் சென்ற டிசம்பரிலிருந்து இத்தாலியில் இந்தியத்தூதருக்கான இடம் காலியாக இருப்பது Irony! இத்தாலியின் இந்தியத்தூதராக செல்ல வேண்டிய B.K.குப்தா ‘ நான் மார்ச் ரெண்டாவது வாரம் போகிறேனே..’என்று சொல்லிக்கொண்டிருந்தார் என்று ஒரு தகவல். அதே நேரம் நட்வர் சிங் சொல்வது வேறு மாதிரியிருக்கிறது. “ Right now, we don’t have an ambassador in Italy. We told him not to go.”
நட்வர்சிங் இந்த இடியாப்பசிக்கல்களை எதிர்கொள்ளத் தேவையானதாக சொல்வது – The temperature needs to cool first, especially in Parliament and in the MEDIA.


இத்தாலியின் நெஞ்சில் சொருகப்பட்டுள்ள வாளாகிய வாட்டிகனில் புதிய போப்.
Every country gets the circus it deserves. Spain gets the bull fights. Italy the church. America Hollywood. – Erica Jong


 ஆனால் கடந்த சில காலமாக போப்கள் இத்தாலிக்கு வெளியில் இருந்து போலந்து, ஜெர்மனியிலிருந்தும், இன்று அர்ஜெண்டைனாவிலிருந்து வருகிறார்கள்.

.......................................................

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_16.html