Weirdness embraced
சம்பந்தமே இல்லாத உறவுகள்
ராஜநாயஹம் மாமனாரின்
தாய் மாமாவின் மூன்றாவது மகனின் மனைவி
நாஞ்சில் சம்பத்தின் உடன் பிறந்த சகோதரி.
நாஞ்சில் சம்பத்தோடு ராஜநாயஹத்திற்கு அறிமுகம் கிடையாது. சந்தித்ததேயில்லை.
ராஜநாயஹம் யார் என்று அவருக்கு தெரியாது.
ஐந்து வருடங்களுக்கு முன் 'சினிமா எனும் பூதம்' படித்து விட்டு
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது 'சண்முக சுந்தரம் உங்களுக்கு சொந்தமா?' என்று கேட்டார்.
'இப்போது அவருடன் உறவு எப்படி?'
உறவை பரிபாலனம் செய்வது சிரமம் என்பது அவருக்கு நன்கு தெரிந்தேயிருக்கிறது.
இப்போது உறவு (சிலாக்கியமாக) இல்லை
என்பதை உடனே ஒற்றை வரியாக சொல்லத்தான் வேண்டியிருந்தது.
சண்முக சுந்தரம் முன்னாள் தி.மு.க. எம்.பி. முன்னாள் அட்வகேட் ஜெனரல்.
கூத்துப்பட்டறை ராஜநாயஹம் முத்திரை இருப்பதால் விஜய் சேதுபதி பற்றி கேட்பார்கள். விஜய் சேதுபதியை நேரில் பார்த்ததேயில்லை. அறிமுகம் கிடையாது.
கூத்துப்பட்டறைக்கு விஜய் சேதுபதி மூன்று முறை வந்த போதும் சந்தித்ததில்லை.
கடந்த பத்து வருடங்களில் பல முறை அவர் பற்றி பலரிடம் பதில் பேச வேண்டியிருக்கிறது. நேரில் பார்த்ததேயில்லை என்பதை சொல்லும்படி தான் இருக்கிறது.
ஒட்டாத விஷயங்கள் ஒட்டியேயிருக்கிறது.
Letting true self shine.