Share

Dec 25, 2025

The chain of matrimony is so heavy

மோகன் ஷர்மா நடிகை லக்ஷ்மி உறவு கெட்டுப் போன விஷயம் பற்றி முன்னர் பேட்டியில் விரிவாக பேசியவை நெகிழ்த்தும்படியாக இருந்தது.

லக்ஷ்மி சிவச்சந்திரனை மணந்து கொண்ட போது மகள் ஐஸ்வர்யா அம்மாவை விட்டு பிரிந்த போது 
Step father மோகன் ஷர்மா பற்றி உயர்வாக " A gentle man of the first order" என்று சொல்லியிருந்தார்.

லக்ஷ்மி சிவச்சந்திரன் திருமணம் பற்றி success என்றே சொல்ல வேண்டும்.
அவர்கள் முப்பத்தைந்து வருடங்களாக இணைந்து  இருக்கிறார்கள். லக்ஷ்மிக்கு மூன்றாவது திருமணம் அமைந்து விட்டது. சிவச்சந்திரன் பேட்டி பார்க்க கிடைத்தது. Every Inch, he is a gentle person என்பது தெளிவாக தெரிகிறது.

மோகன் திரும்ப திரும்ப லக்ஷ்மியுடனான மண முறிவு பற்றியே பேசுகிறார்.
அதன் பிறகு இரண்டு முறை மோகன் திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அந்த திருமணங்கள் இரண்டும் கூட அடுத்தடுத்து failure தான் என்று கேள்வி.
அதைப்பற்றி ஒரு வரி கூட ஏன் சொல்லவில்லை.

பேட்டி எடுப்பவர்களுக்கு பிரபல நடிகை லக்ஷ்மியுடனான உறவு கெட்டுப் போனது தான் முக்கியம். 

லக்ஷ்மி consistent ஆக சிவச்சந்திரனுடன் வாழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு சுவையான விஷயம்.
லக்ஷ்மி நடிப்பில் காவிய நாயகி.
நகைச்சுவை ததும்ப நடிப்பதிலும் கொடி கட்டியவர்.


சிவச்சந்திரன் முதல் திருமணம் நடிகை அபர்ணாவுடன். சில்க் ஸ்மிதா  இந்த நடிகை வீட்டில் தான் வேலை பார்த்தார். 
அபர்ணாவை ஆண்டனி என்ற சிவச்சந்திரன் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் விவாக ரத்து செய்து விட்டார். 

The chain of matrimony is so heavy, it takes two to carry it. Some times  three, four, five...

Dec 18, 2025

சந்திர சேகர்

சந்திர சேகர் 
- R.P. ராஜநாயஹம் 


பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே பார்த்து விட்டு நாடக நடிகர் சந்திரசேகர் அவர் வீட்டை கண்டு பிடித்து பாராட்டி விட்டு அடுத்த படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
பாரதி ராஜா சரி என்று சொல்லியிருக்கிறார்.

கிழக்கே போகும் ரயிலில் சேகருக்கு வாய்ப்பு பாரதி ராஜா தரவில்லை.

அடுத்து சிகப்பு ரோஜாக்களிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏமாற்றம் தான்.

ஒரே இனம் தான். அப்படியிருந்தும் சேகருக்கு நல்லது நடக்கவில்லை.

சேகர் மனம் தளராமல் பாரதி ராஜாவிடம் அடுத்த புதிய வார்ப்புகளில் வாய்ப்பு கேட்டு கெஞ்சியிருக்கிறார். பாரதி ராஜா பதில் 
"சரிய்யா".

தெரிந்தவர்களிடம் எல்லாம் பாரதி ராஜா புதிய வார்ப்புகளில் உறுதியாக வாய்ப்பு தருகிறார் என்று நம்பிக்கையோடு சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார்.

அசிஸ்டெண்ட் டைரக்டர் மனோபாலா 
இவருடைய அண்ணன் பாண்டியனுடன் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் படித்தவர். இவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். " சேகர், ஒம்பேரு நடிகர்கள் லிஸ்ட்ல இல்லடா. " என்று உண்மையை உடைத்திருக்கிறார்.
மறு நாள் அவுட் டோர் ஷுட்டிங். பாரதி ராஜா யூனிட்டே கிளம்புகிறது.

Shock, pain, grief.

அந்த மாலை நல்ல மழை. சந்திர சேகர் சைக்கிளை எடுத்துக்கொண்டு பாரதி ராஜா ஆஃபிஸ் போகிறார்.
மழையில் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே வந்த சேகரை பார்த்த பாரதி ராஜா 
" யோவ் என்னய்யா " 

" சார், எனக்கு நடிக்க சான்ஸ் கிடச்சிருக்கு"

" Congratulations, என்ன படம்"

சேகர் பதில் "டைரக்டர் பாரதிராஜா எடுக்கிற புதிய வார்ப்புகள்"

" என்னய்யா சொல்ற? "

கடுமையாக உடைந்த நிலையில் இருந்த சேகர் 
சொன்ன பதில் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?

"புதிய வார்ப்புகள்ள ஒரே ஃப்ரேம்லயாவது நான் கட்டாயம் வருவேன்"

பாரதி ராஜா" சரி வாய்யா "

அவுட் டோரில் பல நாட்கள் ஷூட்டிங் நடந்து கடந்த பின் பாரதி ராஜா 
  ஃபீல்ட்ல சேகரை இயக்கியிருக்கிறார்.

" மாமோவ் இந்த ஊர நான் பாத்திருக்றேன்"

ரதியை பெண் பார்க்க வந்து 
எல வாங்க குடுத்த காசோட ஓடிப்போற மாப்ள ரோல்.

இந்த சின்ன ரோலோடு முடிந்து விடவில்லை.

Cinema is the most beautiful fraud.

கூத்து சீன். 'நீ நடி'

சேகர் கூத்து பாட்டில தோரணை 
" பாத்தா தெரியலயா பணக்கார வர்க்கமுன்னு" 

" இங்க உள்ள பொம்பளகளா ஆம்பளகள 
கண்டா ஆஞ்சிபுடுவாளுக போல தெரியுது"

ஷாட் ப்ரேக்கில் பாரதி ராஜா " அசல் கொட்டுக்காரன் மாதிரியே பண்றியேடா "

இரண்டு பாத்திரங்களும்  புதிய வார்ப்புகளில் ரசிக்கும் படியாக.

சந்திர சேகருக்கு அடுத்த நிறம் மாறாத பூக்களில் எலக்ட்ரீஷியன் கதாபாத்திரம்.
கல்லுக்குள் ஈரம் 
"ஈட்டி பைத்தியம்"

பாக்யராஜ் முதலில் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்களில் கவுண்ட மணி டெய்லர் கடையில் தலை காட்ட வாய்ப்பு.

ஈட்டி பைத்தியமா நடிச்ச பிறகு தான் 
 ஒரு தலை ராகம் ரிலீஸுக்கு பிறகு சேகரை தற்செயலாக பார்த்து சந்தித்து அறிமுகம்.
தி.நகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் 
மீரா சாஹிப் சேம்பர் வாசியாக இருந்த போது 
அங்கு ஸ்ரீநதி மூவிஸ் ஆஃபிஸ். அதற்கு மேலே முதல் மாடியில் தான் ராஜநாயஹம் அறை.
மிக குறுகிய கால பழக்கம். 
" என்ன சேகர் நேத்து கீழ ஆஃபிஸ் வந்திருக்க போல."

" ஆமா, கேபி. கேபிய பாக்றதுன்னா ஒரு நாள் ஒதுக்கனும்."

அந்த அளவுக்கு உரையாடியிருக்கிறோம்.

மதியம் லஞ்ச் மூன்று முறை கீழே இருந்த நான் வெஜ் ஓட்டலில் சேகருக்கும் மட்டன் பிரியாணி, ஒரு டீ.
அப்பல்லாம் தினமும் மதிய உணவு பிரியாணியும் டீயும் தான். கூட யார் இருந்தாலும் அதே பிரியாணி, டீ தான் சாப்பிட வேண்டியிருக்கும்.

சந்திர சேகர் " கேபிக்கு இப்படி வினோதமா  பழக்கம். 
மதியம் பிரியாணி, டீ"

சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஓட்டலில் சாப்பிட வந்தவர் யாராவது சேகரைப் பார்த்து " சார், நீங்க நிறம் மாறாத பூக்கள்ள ரெண்டு சீன் நடிச்சிருக்கீங்கள்ள?"

"கேபி, ஒரு தலைராகத்தில கடைசியா சீரியஸா பேசியிருக்கேன். எப்படி ரசிப்பாங்களோ தெரியல. ரிலீஸப்ப நான் நூலறுந்த பட்டம் அவுட்டோர் ஷூட்டிங்ல இருப்பேன். படம் பார்த்து சொல்லு"

குமுதம் 'ஒரு தலை ராகம்' விமர்சனத்தில் :
" 'கல்லுக்குள் ஈரம் ஈட்டி பைத்தியம்' கலக்கி விட்டது"

Dec 16, 2025

ஈரோடு மஹாராஜா மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் அதிபர்

சென்னையில் இருந்து 
கோயம்புத்தூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன்

சினிமா எனும் பூதம் ஷூட் முடித்து திரும்பிய போது  ரயிலில் எதிரே
82 வயது K. பரமசிவம் ஈரோடு மஹாராஜா மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் முதலாளி.
 அவர் மனைவி. 

இதுவல்ல செய்தி.

உயிர்மை, காலச்சுவடு பத்திரிகைகள் படிக்கிறார். அவர் மனைவியும் படிக்கிறார் 
இதனால் அவருடன் பேசிய போது தெரிய வந்தது அவர் தியேட்டர் முதலாளி. 
பிரபு தரிசனம்.

Dec 12, 2025

Cinema Enum Bootham 196, 197 Episodes

196, 197 Episodes 

R.P. ராஜநாயஹம் 
"சினிமா எனும் பூதம்"

முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு 

14.12. 2025 

21.12. 2025

1. உன்னி கிருஷ்ணன் 

2. உன்னி மேனன்

Every Hero becomes a bore at last

R.P. Rajanayahem 2008 post 

November 16, 2008

மக்கள் செல்வாக்கு மிக்க நடிகர்கள்
- R.P. ராஜநாயஹம் 

எம்ஜியார் ஏழைகளை நேசித்ததில்  வேஷம் இருந்தது.

வி பி சிந்தன் கத்தி குத்துப் பட்டு மருத்துவமனையில் இருந்த போது பார்க்க போன
எம்ஜியார் ' நீ எல்லாம் என்ன கம்யூனிஸ்ட் . உன்னை குத்தியிருக்காங்கே . இந்நேரம் நூறு குடிசை எரிந்திருக்க வேண்டாமா ' என்று கேட்டாராம்.

சினிமாவில் ' மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா ?' என்று உருக்கமாக பாடியவர்.

இதை சேலத்தில் நான் பேசிய போது தோழர்கள் கேட்டார்கள் : ' அதற்கு சிந்தன் என்ன பதில் சொன்னார் '

சிந்தன் என்ன பதில் சொல்லியிருக்க முடியும். எம்ஜியார் முன் கல்யாண சுந்தரம், பால தண்டாயுத பாணி போன்ற மேல் மூடிகள் அப்போது கை கட்டி நின்றார்கள்.
பால தண்டாயுதபாணி அப்போது ஒரு பொது கூட்டத்தில் எம்ஜியாரை குறிப்பிடும்போது ' புரட்சி தலைவர் ' என்று சொன்னார். 
மேடையில் இருந்த ஜெயகாந்தன் வேதனையுடன் பேசினார் .' பாலா, நீயா பேசுவது! யாரை புரட்சி தலைவர் என்கிறாய். நீ மார்க்சை புரட்சி தலைவர் என்று சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன். போயும் போயும் இந்த எம்ஜியாரை புரட்சி தலைவர் என்கிறாயே ."

ரஜினி காந்த் தன் வேலைகாரர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார் என கேள்விபட்டிருக்கிறேன் .
"வேலைக்காரன் " படத்தின் நாயகன். 

அத்வானி, துக்ளக் சோ சகிதம் ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி தாங்கி கொண்டிருக்கிறார்கள் .

இப்போது ஒரு செய்தி படித்தேன்.
இளைய தளபதி விஜய் வீட்டில் இருந்து கிளம்பும்போது அவர் வீட்டு வேலைக்காரர்கள் முகத்தில் முழிக்க மாட்டாராம்.
அவர்கள் அப்போது ஒளிந்து கொள்ள வேண்டுமாம். சகுனத்தடை!
இன்றைக்கு ரஜினியை விட விஜய்க்கு செல்வாக்கு அதிகம் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

விஜய் ரசிகர்கள் திருப்பூரில் உண்ணாவிரதமோ , போராட்டமோ ..பந்தல் போட்டு உட்க்கார்ந்திருக்கிறார்கள்.
'போக்கிரி' அரசியல் முஸ்தீபு.

 தினமலரில் சரத் குமாரின் பேச்சு 
கட்டம் கட்டி போட்டிருந்தார்கள்.
"குடும்ப அரசியல் எனக்கு பிடிக்காது .ஆனால் தொண்டர்கள் ரொம்ப வற்புறுத்துவதால் ராதிகாவுக்கு கட்சி பதவி கொடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன் ."

Every Hero becomes a bore at last!

Dec 6, 2025

Conflictional resolution TrumPeace

பிடிவாதம் 
விட்டனா பார் 
TrumPeace 

 ஒன்னு நெனச்சு கெடக்காட்டி..
நோபல் 'நோ'ன்னா விட்ருவனா?
 ட்ரம்ப்பா கொக்கான்னேன். ஓஹோன்னானாம்.
விட்டேனா பார்.

Conflictional resolution.

"One Of The Greatest Honours Of My Life": Trump On FIFA Peace Prize Award

Fifa's Political neutrality is above suspicion.

Dec 2, 2025

Letting true self shine

Weirdness embraced 

சம்பந்தமே இல்லாத உறவுகள் 

ராஜநாயஹம் மாமனாரின் 
தாய் மாமாவின் மூன்றாவது மகனின் மனைவி 
நாஞ்சில் சம்பத்தின் உடன் பிறந்த சகோதரி.

நாஞ்சில் சம்பத்தோடு ராஜநாயஹத்திற்கு அறிமுகம் கிடையாது. சந்தித்ததேயில்லை.
ராஜநாயஹம் யார் என்று அவருக்கு தெரியாது.

ஐந்து வருடங்களுக்கு முன் 'சினிமா எனும் பூதம்' படித்து விட்டு 
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது 'சண்முக சுந்தரம் உங்களுக்கு சொந்தமா?' என்று கேட்டார்.
'இப்போது அவருடன் உறவு எப்படி?'
உறவை பரிபாலனம் செய்வது சிரமம் என்பது அவருக்கு நன்கு தெரிந்தேயிருக்கிறது.

இப்போது உறவு (சிலாக்கியமாக) இல்லை 
என்பதை உடனே ஒற்றை வரியாக சொல்லத்தான் வேண்டியிருந்தது. 

சண்முக சுந்தரம் முன்னாள் தி.மு.க. எம்.பி. முன்னாள் அட்வகேட் ஜெனரல்.

கூத்துப்பட்டறை ராஜநாயஹம் முத்திரை இருப்பதால் விஜய் சேதுபதி பற்றி கேட்பார்கள். விஜய் சேதுபதியை நேரில் பார்த்ததேயில்லை. அறிமுகம் கிடையாது.
கூத்துப்பட்டறைக்கு விஜய் சேதுபதி மூன்று முறை வந்த போதும் சந்தித்ததில்லை. 
கடந்த பத்து வருடங்களில் பல முறை அவர் பற்றி பலரிடம் பதில் பேச வேண்டியிருக்கிறது. நேரில் பார்த்ததேயில்லை என்பதை சொல்லும்படி தான் இருக்கிறது.

ஒட்டாத விஷயங்கள் ஒட்டியேயிருக்கிறது.

Letting true self shine.