Share

Sep 28, 2025

Karur Sorrow

Karur Sorrow 
- R.P. ராஜநாயஹம் 

Steel heart against sentiments and emotions

சம கால நடப்புகள் பற்றிய 
கடும் அதிர்ச்சியோ, 
அதீத பரவசமோ எப்போதுமே கிடையாது. முடிந்தவரை எல்லோருமே விவாதிக்கும் விஷயங்களை 
தொட விரும்பியதில்லை.

நிலை குலைய வைக்கும் தாங்கவே முடியாத பெருந்துயரம் 
பெண்களின் கண்ணீர் 
குழந்தைகளின் கண்ணீர் 

கரூரில் பெண்களும் குழந்தைகளும் அதிகமாக பலியாகியிருக்கிறார்கள்.

"தேர் வருமெனத் தெருமுனை பார்த்தேன் 
வந்த தேர் என்னை மிதித்துச் சென்றது"
- கவிஞர் நீலமணி 

Could not afford further thunderous shock.

தாங்கிக்கொள்ளவே முடியாத பெருந்துயரம். அழுதாலும் தீரவில்லை.

People were packed and squashed like sardines in a worst crowd. This Vijay crowd was worser than the worst. The congestion trauma came with being stuck and unable to move.

கொடூர மரணங்கள் நிகழ ஆரம்பிக்கிற போதே தான் Pompous விஜயின் திமிர்த்தனமான ஆணவப் பேச்சு.
இப்போது கேட்டுப்பார்த்தால்  எந்த சராசரிக்கும் கீழான மனிதனுக்கும் கூட கடுங்கோபம் ஏற்படும். Awkward delivery.
யாரை கிண்டலும் நையாண்டியும் செய்து பாடினாரோ அந்த செந்தில் பாலாஜி (soft target) தான் 
முதல் ஆளாக மருத்துவ மனையில் resque வேலையில் உடுக்கையிழந்தவன் கை போல பாதிக்கப்பட்டவர்களின் இடுக்கண் களைய பரிதவிப்புடன் இயங்கினார். 
Field worker Senthil Balaji.

தூங்காமலே கரூர் வரும் முதல்வர்.

துணை முதல்வர்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வந்த ஆம்புலன்ஸ்களையே தாக்கிய த.வெ.க. தொண்டர்கள்.

சொன்னபடி பகலிலே வந்திருந்தால் மின்சாரத்தை துண்டிக்கும் சூழ்நிலை வந்திருக்காது.

Irresponsible TVK leaders. கட்சியின் தலையே சரியில்லை. 
தும்பிக்கய ஊனி நாலு கால தூக்கி நின்னு சங்கு சக்கரமா சுத்தும் போது
 இறுமாப்பில்  குரங்குகள் வாலை கிளைகளில் தொங்கப்போட்டு ஊஞ்சலாடாமல் இருக்குமா?

தலைவர் கலைஞர் தோல்வி முகம் கண்ட சமயத்திலேயே மதுரை தல்லாகுளத்தில் தேர்தல் கூட்டம் என்றால் இந்த பக்கம் கோரிப்பாளையம் தேவர் சிலை தாண்டி பாலத்திலும் அந்த பகுதியில் பாண்டியன் ஹோட்டல் வரையிலும் மக்கள் பரபரப்பாக நிற்பதை பார்க்கும்படியாகத்தான் அந்தக் காலம் இருந்திருக்கிறது. மரங்களில் கூட உட்கார்ந்து கலைஞர் பேச்சை கேட்டிருக்கிறார்கள்.

நடு நிசியில் எள் போட்டால் எள் எடுக்கமுடியாது என்கிற அளவுக்கு ஜனங்கள். பெண்கள் எப்போதும் போல மிகவும் அதிகம்.
கூட்டத்தில் தன் பேச்சை முடிக்கு முன் எம்.ஜி. ஆர் சொன்னார்: ”தயவு செய்து தாய்மார்கள் இங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்று விடுங்கள். நான் ஆண்களிடம் தனியாக கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது. தாய்மார்கள் செல்லலாம்.”
பெண்கள் கூட்டம் முற்றிலும் வெளியேறி சென்று விட்டதை அறிந்த பின் எம்.ஜி.ஆர் சொன்னார்.”இப்போது ஆண்கள் செல்லலாம்.”
( எம்ஜிஆர் பேச்சு என்ற ராஜநாயஹம் ஆர்ட்டிக்கிள்ளில் இருந்து இதை மட்டும் கிள்ளி ஆனந்த விகடன் இதழில் போட்டுக் கொண்டார்கள். Copy cat )

இப்படியா சினிமா வெறி பிடித்த பைத்தியங்கள். 
அராஜகமான த.வெ.க. தொண்டர்கள்.

Oh wonder !
How many goodly creatures are there here!
How beauteous Mankind is!
O brave new world!
That has such people in it!"

-Shakespeare in ‘ Tempest’

இப்போது டி.வி. இருக்கிறது. எத்தனை சேனல்கள். Live telecast.
பெண்கள் குழந்தைகளுடன் வர வேண்டாம் என்று சொல்லக்கூடிய முதிர்ச்சியில்லை. Pompous leader.

சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்த போது கூட்ட நெரிசல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அவர் ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

தி.மு.க. விற்கு எதிராக வலைத்தளத்தில் எப்போதும் நாராசமாக கொக்கரிக்கிற எதிரிகள்.
நையாண்டியும் ஏகடியம் ஏளனம் செய்கிற இண்ட்டர்நெட் திண்ணையர்.

"அறிவாலயம் அல்சேஷன் ராஜநாயஹம்" என்று பெருமைப்படுத்தப்படும் அளவுக்கு பெரிதாக தி.மு.க. விற்கு சேவைகள் செய்ததில்லை. எதிர் கட்சிகளுக்கு பதில் விளக்கம் கொடுத்ததில்லை.

தினம் முதல்வர், துணை முதலமைச்சர் F.B. பக்கங்களில் எதிர் கட்சிகளின் அருவருக்கத்தக்க,  மோசமான அநாகரீக தாக்குதல்.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி 
(காலையில பேப்பர் பாத்தப்ப தான் தெரிஞ்சது) கேப்பையில் இப்போது நெய் வடிகிறது.

அன்பில் மகேஷ் குமுறி அழுவது நடிப்பாம்.

கரூர் இளமைக்கால நினைவுகளில் பசுமையாக நின்ற ஊர். 
அப்பா சுங்க இலாகா அதிகாரியாக திருச்சி, நாகை, கரூர், மதுரையில் பணியாற்றியதால் சொந்த ஊர் போல.





Sep 26, 2025

Grand parents day

26th September, 2025
3 pm
Grand parents day in
Pookkutti school 

Pookkutti Thatha sang "When I was just a child, 
I asked my mama what will I be?"

'National Model School', 
Peelamedu, Coimbatore

Sep 24, 2025

186, 187 Episodes - Cinema Enum Bootham

186, 187 Episodes 

R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

முரசு டிவியில் 

ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு 

28.09.2025

05.10. 2025

திரைப்பட பாடலாசிரியர்கள் 

1. தஞ்சை ராமையாதாஸ் 

2. M.K. ஆத்மநாதன்

......

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 3ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Priyanka RJ

23. 09. 2025

Kovai super fast Express 

Kovai to Chennai 

Priyanka 
   RJ

நவில் - சொல்

23. 09. 2025

Kovai super fast Express 

இரண்டரை வயது குழந்தை பெயர் 
நவில் இனியன் 

நவில் 
அழகான வித்தியாசமான பெயர்.

Adorable child 

நவில்தல் - சொல்வது

அப்பா சேலம் டாக்டர் டாக்டர் சுபாஷ் 

படங்கள் எடுத்தவர்
 குழந்தையின் தாய் 
டென்டிஸ்ட் துர்கா

Sep 22, 2025

கொம்புத்தேன்? ஆசை எட்டாக்கனி? ஏக்கம்


கொம்புத்தேன் 
- R.P.ராஜநாயஹம் 

க.நா.சு விடம் 
'மண்ணாசை' நாவல் எழுதிய சங்கர் ராம் சொன்னாராம்.
" எனக்கு இப்ப சாகித்ய அகாடமி விருது கிடைத்தால் நல்லாயிருக்கும்" 

க.நா.சு : ஏன், என்ன விஷயம்?

சங்கர் ராம் : பணம் தேவைப்படுகிறது. அதனால் தான்.

(சங்கர் ராம் ஆயுளில் சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை)




Geethapriyan  ஆசை :
R.p. Rajanayahem சார் உங்களுக்கு மீறி இங்கே இலக்கியவாதி, எழுத்தாளர், தத்துவஞானி , அல்லது  கவிஞர் இல்லை,
தவிர தலைக்கனமின்றி முன்னோடிகளை கொண்டாடும் பண்பை உங்களிடம் அனைவரும் படிக்க வேண்டும்,  அபுனைவுக்கும் சாகித்ய விருதுகள் தரப்பட்டுள்ளன,   சாகித்ய விருது உங்களுக்கு தரப்படுவது சரியானது,சாலப் பொருத்தமானது .

உலக இயல் இசை நாடகங்கள் குறித்து ஒரிஜினலாக மனிதில் இருந்து இங்கே எழுதுவது நீங்கள் மட்டுமே, உங்கள் எழுத்துகள்  க்ளாஸிக் ஆக மாறுகிறது, நூறாண்டு தாண்டியும் வாசிக்கப்படும் அபுனைவுகள் உங்களுடையது, உங்களுக்கு கிடைக்காத விருதுகள் விருதுகளே அல்ல என்பேன், இதை எழுத எனக்கு எந்த தயக்கமும் இல்லை, முழுத்தகுதியும் கொண்ட தமிழ் இலக்கியவாதியின் மீதான சாபம் உண்டு, அது வாழும் காலத்தில் கொண்டாடப்படாதது, அது உங்களுக்கும் நடக்கிறது, இந்நிலை நிச்சயம் மாறும்.

உண்மை சார் , உங்கள் எழுத்து வல்லமையின் தகிப்பால் உங்கள் மீது விமர்சனம் வைக்க கூட முடிவதில்லை, நீங்கள் இழந்தவற்றிக்கு சாகித்ய விருது தான் ஆற்றுதலாக அமையும், அந்த அறிவிப்பு வரும் நாள் தான் எனக்கு திருநாள்.


Rebel Ravi : 
"இவ்வளவு எளிமையாக, இவ்வளவு தெளிவாகத் தமிழில் எழுத ஒரு சிலராலேயே இயலும்: அதில் ஒருவர் தாங்கள். வெறும் வன்மத்தாலேயே உங்களுக்கு உரிய மரியாதை இந்நாட்டில் உங்களுக்கு இது வரை கிட்டவில்லை."


Sep 21, 2025

அனலி களத்தில் R.P.ராஜநாயஹம்

கோவை 


"அனலி" நிறுவனர் அரிகர சுதன்.
பேராசிரியர். களப்பணியாளர்.

18 ஆண்டுகளாக செயல்படும் "அனலி" களத்தில் R.P.ராஜநாயஹம்

வேடிக்க - 50 வீட்டிற்குள் பாம்பு



கோவை 
21.09.2025
11 am

வீட்டிற்குள் பாம்பு வந்து விட்டது. நல்ல பாம்பு குட்டி.
A Cobra in your house may  soon clears it of rats and mice.
அடச்சே..எங்க வீட்டில் எலியேயில்லையே.
 It's a dangerous game with a snake on every level. 

கிச்சனுக்கும் பூஜையறைக்கும் இடையிலுள்ள வாஷ் பேசினுக்கு கீழ் உள்ள பகுதியில். வாஷ் பேசின் தாண்டி ஹால். வீட்டம்மா கிச்சனில் இருந்து ஹாலுக்கு வரும் போது பார்க்க நேர்ந்தது. இது மாதிரி அதிர்ச்சி இல்லத்தரசி பார்வையில் தான் எப்போதும் தெரிய வரும்.

ராஜநாயஹம் கடைக்கு போய் விட்டு வீட்டிற்கு நுழைந்தால் அம்மாவும் மகனும் அந்த இடத்தில் இருந்து கண்ணை அகற்றாமல் பார்த்துக் கொண்டே பதற்றத்தோடு நிற்கிறார்கள்.

Fire serviceக்கு தகவல் கொடுத்தாயிற்று.

டைல்ஸை உடைத்து தான் ஃபயர் சர்விஸிலிருந்து வந்தவர்கள்
 பாம்பு குட்டியை பிடிக்க வேண்டியிருந்தது.

A serpent's deceitful nature : 

"Look like the innocent flower, But be the serpent under it".
- Shakespeare in Macbeth 

Shakespeare doesn't specifically mention "Cobra"

ரூபாய் இரண்டாயிரம் இதற்காக கொடுக்க வேண்டியிருந்தது.
பாம்பைக் பிடித்துக்கொண்டு போன பின் தான் மகனிடம் பணம் பெற்ற விஷயம் தெரிய வந்தது.

Sep 20, 2025

'ஸ்டியரிங்க திருப்பி விட்ருக்கான்'

'அண்டப்புளுகன் ஸ்டியரிங்க திருப்பி விட்ருக்கான்'

பத்து பேர் இருக்கிற இடத்தில் எப்போதும் ராஜநாயஹம் நகைச்சுவை வெடிகள் சரம் பட்டாசு போல கொண்டாட்டம், குதூகலமாக இருக்கும். சிரித்து முடியவில்லை என்று வயிற்றைப்பிடித்துக்கொள்வார்கள். I’m always seriously humourous.

இது இன்று நேற்று அல்ல. பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்து என்னுடைய நகைச்சுவை விருந்து நடந்தே வந்திருக்கிறது. In the trueman there is a joker concealed – who wants to amuse and delight others.

சில வருடங்களுக்கு முன் என்னைப் பற்றி இணையத்திலேயே சினிமா நடிகர் ஒருவர் சொன்னார்.
“ ராஜநாயஹம் தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக வந்திருக்க வேண்டியவர். இயக்குனராக முயன்று தோற்றார்.”

இந்த நடிகர் கல்லூரி கால நண்பர். சினிமாவில் கதாநாயகனாகக் கூட நடித்தவர்.
மேலே சொன்னது பற்றி நான் மறுக்க ஒன்றுமில்லை. என்னைப் பற்றி அபிப்ராயம் சொல்ல யாருக்கும் உரிமை இருக்கலாம். என் தகுதி, தோல்விகளை அவரவர் பார்வையில் விமர்சிக்கலாம்.

’இனிய நண்பர் ராஜநாயஹம்’ என்பதாக என்னை விளித்திருந்தார். சந்திக்க வேண்டும் என்ற தன் ஆர்வம், ஆவலையும் வெளிப்படுத்தியிருந்தார். சந்தோஷம். But I have to steel my heart against sentiments of kindness and pity.

 மிக அழகான விலையுயர்ந்த ஃபாரின் கோட் இவருக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறேன். சட்டை கூட கொடுத்திருக்கிறேன். அதனால் நான் அந்த நடிகருக்கு  இனிய நண்பன் தான் என்று சொல்லப்படுவதை எப்படி மறுக்க முடியும்?

இதை அடுத்து அவர் சொன்ன ஒரு விஷயம் தான் வடி கட்டின பொய்.
“ ஆங்கில இலக்கியம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ராஜநாயஹத்தை நாங்கள் தான் ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், சுந்தர ராமசாமியையும் படிக்க வைத்தோம்.” என்று பெரிய குண்டை தூக்கிப்போட்டிருந்தார்.

ஆங்கில இலக்கியம் படித்தவன் ராஜநாயஹம் என்பது உண்மை தான். இதற்கு மாற்றுக்கருத்து கிடையாது.

ஆனால் அதை அடுத்து அந்த நடிகர் சொன்ன வார்த்தைகள் தான் கடைந்தெடுத்த புளுகு.
ராஜநாயஹத்திற்கு இலக்கிய உலகில் ஏதோ அடையாளம் இருக்கிறது. அதற்கான க்ரெடிட்டை இவர் தனக்கு எடுத்துக்கொண்டு விட்டார்.
இலக்கியத்திற்கு ஸ்நானப்ராப்தி கூட இல்லாத  நபர்.
’நாங்கள்’ என்பது ஏதோ பெரிய இலக்கிய வட்டமோ?

“…. ராஜநாயஹத்தை நாங்கள் தான் ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், சுந்தர ராமசாமியையும் படிக்க வைத்தோம்.”

Why should one dress me in deceptive, false statement?
ராஜநாயஹம் செத்த பிறகு தானே இப்படி பொய் சொல்லலாம்.

எனக்கு தெரியும். அந்த நடிகருக்கும் தெரியும். இவரோ அல்லது இவரைச் சேர்ந்த யாருமோ எனக்கு நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தவே இல்லை என்கிற உண்மை.
இந்த க்ரெடிட்டை யாருக்காவது கொடுக்க வேண்டுமென்றால் சவ்வாஸ் பரூக் alias பெரிய சேட்டுக்குத் தான் கொடுக்க முடியும். ஆங்கில இலக்கியம் நான் முதலாமாண்டு படிக்கும்போது பெரிய சேட்டு மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவர். ஜெயகாந்தனை இவர் தான் எனக்கு வாசிக்கக் கொடுத்தவர்.
சுந்தர ராமசாமியை கல்லூரி காலத்தில்  எப்படி முதல் முதலாக வாசித்தேன் என்பதை ’பிரசாதம் செய்த மாயம்’ என்ற என் கட்டுரையில் தெளிவாக நான் எழுதியிருக்கிறேன்.
அந்த நடிகரோ அப்போது எகனாமிக்ஸ் தமிழ் மீடியம்.
இவரிடம் காலத்தால் கொஞ்சமும் transformation ஏற்படவேயில்லை என்பதே இந்தப்பொய் மூலம் தெரிய வருகிறது. பக்குவமடையவேயில்லை. Stagnant person. Hypocrisy இருப்பதால் தான் இப்படியெல்லாம் தம்பட்டமான புளுகு வந்தது.

அந்த நடிகனின் இந்த அண்டப்புளுகு பற்றி 
நடிகர் ராஜேஷ் தெறிக்க விட்ட சுவாரஸ்யமான, ரசிக்கத்தக்க கமெண்ட் :
"ஸ்டியரிங்க திருப்பி விட்ருக்கான்!"

Foucault's Pendulam - Umberto Eco

January25, 2009 post 

R.P. ராஜநாயஹம் 'தித்தித்தது" புதிய நூலில் இடம் பெற்றிருக்கிறது 

Foucault's Pendulum
- R.P. ராஜநாயஹம் 

டா வின்சி கோட் நாவல் பற்றி தான் எல்லோரும் அறிவர். டான் பிரவுன் நாவல் மிகவும் பிரபலம். டாம் ஹேங்க்ஸ் நடித்து படமாய் வந்து பலரும் எதிர்த்து, எல்லோரும் பார்த்து ரசிக்கப்பட்ட படமானது.

ஆனால் அதை படித்தவர்கள், படம் பார்த்தவர்கள் அறியாத நாவல் “Foucault’s pendulum “.
உம்பெர்டோ ஈகோ எழுதிய நாவல் “Foucault’s pendulum “.

 டாவின்சி கோட் எழுதிய டான் பிரவுன் பற்றி 

ஈகோ சொல்வார் :

“Don Brown is one of my creatures.”

ஃபூக்கோவின் பெண்டுலம் பற்றி சொல்ல ஈகோ வின் மேற்கண்ட  வரியே போதும்.

குசும்பன் நாவலின் தலைப்பைப் பார்த்து விட்டு என்னிடம் 

'' மிச்சல் ஃபூக்கோவின் 'ஆடுகிற சாமான்' பற்றி உம்பர்ட்டோ எழுதியிருக்கிறாரா? '' என்று வெள்ளந்தியாகக் கேட்டுத் தொலைத்தான்.

 மிச்சல் ஃபூக்கோவிற்கும் இந்த நாவலுக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை.

The title refers to an actual pendulum designed by the French physicist Léon Foucault to demonstrate the rotation of the earth, and has symbolic significance within the novel.

Changes in motion—speeding up, slowing down, changing direction—are due to the effects of forces. Any object maintains a constant speed and direction of motion unless an unbalanced outside force acts on it. 

The principle of universal gravitation explains the architecture of the universe and much that happens on the earth. The principle will become familiar from many different examples (star formation, tides, comet orbits, etc.)

ஃபூக்கோவின் பெண்டுலம் வாசிக்க சுலபமானது அல்லாமல் கடினமானது. 
டா வின்சி கோட் மாதிரி விறு விறு என்று வாசித்து தள்ளமுடியாது தான். ஈகோவின் 'பூக்கோவின் பெண்டுலம் ' நாவலை வாசிக்க  திறன் தேவை. ஆனால் அந்த விஷேச வாசிப்புக்கான சன்மானம் மிகவும் மகத்தானது.

Foucault’s Pendulam – the thinking person’s Da Vinci Code!

ஈகோ எழுதிய பிரபலமான மற்றொரு நாவல் பிரதியின்பம் என்பதற்கு உதாரணமான The Name of the Rose. மர்ம நாவல்கள் அத்தனையையும் மிஞ்சிய திகில் நாவலான இதை வாசிப்பதே 'சுகம்'. ஆனா 'பூக்கோவின் பெண்டுலம் 'வாசிப்பது  'தவம்.'

Christ never laughed
"Hell is heaven seen from the other side" - இந்த வார்த்தைகள் உம்பர்ட்டோ ஈக்கோ 'Name of the Rose' நாவலில் எழுதியது.
'Christ never laughed' என்ற விஷயம் குறித்து அந்த நாவலில் வரும் வில்லியம் என்ற பாதிரி சொல்வது “Laughter is proper to man,it is a sign of his rationality."
Men are animals but rational, and the property of man is the capacity for laughing.

The Name of the Rose திரைப்படமாக 'ஷான் கானரி' நடித்து 1986ல் வந்தது. ஷான் கானெரி நடித்த ஜேம்ஸ் பாண்டு படங்களை விட மிக தரமான த்ரில்லர்.
அமடியூஸ் படத்தில் கலக்கிய மர்ரே ஆப்ரகாம் நல்ல ரோலில் நடித்திருந்தார்.

உம்பர்ட்டோ ஈகோவால் The Name of the Rose நாவலும் எழுதி Foucault’s Pendulam நாவலையும் எழுத முடிந்திருக்கிறது. 

......

மீள்பதிவு 


Sep 11, 2025

வேடிக்க - 49

வேடிக்க 49

ரயிலில் 
துப்பாக்கியோடு வந்த ப்ரியதர்ஷினி

Priyadharshini is a National player 

10 metres Air rifle peepsight

அபினவ் பிந்த்ரா,
மனு பார்க்கர்,
இளவேனில் வாலறிவன் வழியில் 

ப்ரியதர்ஷினியும்

மெட்ராஸ் க்ரிஸ்டியன் காலேஜில் 
Plant biotech முடித்து விட்டு இப்போது முழுக்க ambition in  "AIMING" rifle.

'Rifle Coaching training course' முடித்திருக்கிறார் .

Sep 6, 2025

கவிஞர் பூவை செங்குட்டுவன்

2016 ம் ஆண்டு பூவை செங்குட்டுவனுடன் செல்பேசியில் பேசியதுண்டு.
அப்போது குமுதத்தில் 
வெளி வந்த"சாவித்திரி" 
( சினிமா எனும் பூதம் பாகம் 1ல் இடம்பெற்றிருக்கிறது) பற்றி சிலாகித்து சொன்னார்.
பூவை செங்குட்டுவனுக்காக 
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 
பிரசாத் கலர் லேப்பில்விழா எடுத்த போது 
திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்யராஜ் அவர்கள் அழைப்பின் பேரில் கலந்து கொண்ட போது 
கவிஞர் பூவை செங்குட்டுவனை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

Apr 25, 2020
கவிஞர் பூவை செங்குட்டுவன்

நான்கு வருடங்களுக்கு முன்பு குமுதத்தில்
 பூவை செங்குட்டுவன் பேட்டி பார்த்து விட்டு அந்த பேட்டியெடுத்த அருண் சுவாமிநாதன் மூலம் கவிஞரிடம் பேசினேன்.

அந்த நேரம் குமுதம் ஸ்பெஷலில் நான் எழுதியிருந்த 'நடிகை சாவித்திரி'யை அவரும் படித்திருந்தார்.
"ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க " என்றார்.
(அருண் சுவாமிநாதன் மூலம் தான்
எனக்கு கிடைத்த வாய்ப்பும்)

பூவை செங்குட்டுவன் பேட்டி
மனதை பாதிக்கும்படி இருந்தது.

அவருக்கு அடிமைப்பெண் பட த்திற்காக
  எம். ஜி.ஆர் மூலம் வந்த அபூர்வமான வாய்ப்பை ஒருவரின் கவனக்குறைவால் இழந்திருக்கிறார்.

இவர் எழுதி கொடுத்த பாடலை தொலைத்து விட்டு 'செங்குட்டுவன் பாடலே எழுதி தரவில்லை' என்று சின்னவரிடமே இவர் பெயரை கெடுத்து விட்டிருக்கிறார்.

A slip between the cup and lip.

'  நான் உங்கள் வீட்டு பிள்ளை ' பாடல் முன்னதாக
 புதிய பூமிக்காக பூவை செங்குட்டுவன் எழுதி
   எம். ஜி.ஆர் பேரியக்கத்திற்கு எப்படி பயன்பட்டது
 என்பது சரித்திரம்.

' திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மேலே எதிரொலிக்கும். '

கேட்க திகட்டாத சத்தான பாடல்.

அதிமதுர மதுரயிலே குருவி மண்டையன் மாற்றி பாடுவான் ' திருத்தணி மல மேல எலி கொறிக்கும் '
மதுர வக்ரம்.

' திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் ' பகுத்தறிவு வாதிகளின் கிண்டலுக்கும், கவுண்டமணி ஜோக்குக்கும் பயன்பட்டது.

' தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ' டி. கே. கலாவுக்கு முதல் பாடல்.

கண்ணதாசன் தான் கந்தன் கருணை படத்தில்
' திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' பாடல் இடம்
பெற செய்திருக்கிறார்.

ஏ. பி. நாகராஜன் பல வாய்ப்பு தந்திருக்கிறார்.
'ஆடுகின்றானடி தில்லையிலே '

' ஏடு தந்தானடி தில்லையிலே' எஸ். வரலட்சுமி பாடினார். பாடல் கடைசியில் சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து முடிப்பார்.

குன்னக்குடி இவருக்காக இசைந்திருக்கிறார்.

இங்கே அவர் பாடல்களை பட்டியலிட தேவையில்லை.

கணக்கற்ற பக்திப் பாடல்கள் எழுதியவர்.
'முத்தமிழை பாட வந்தேன்
 முருகனையே வணங்கி நின்றேன். '

' முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே'

'தண்ணீரில் மீன் அழுதா
கண்ணீரை கண்டது யாரு'
இது பூவையாரின் பல்லவி.
 இதை ஒரு ஆல்ரவுண்டர்
தான் எழுதிய பாடலாக
எடுத்துக்கொண்டார். அறிவு திருட்டு.

திருக்குறள் வரிகளை பாடல்களாக மாற்றிய பெரும் பணியில் பூவை செங்குட்டுவன்
 பங்கு உண்டு.

 இவருக்கு 84 வயது.
இயற் பெயர் முருக வேல் என்பது
அவருடைய personal legend பற்றி
 தெளிவாக சுட்டுகிறது.

'வணங்கிடும் கைகளின் வடிவத்தைப்
பார்த்தால் வேல் போல் இருக்குதடி '
கருத்தாழமிக்க வரிகளை எழுதியவர் இளமைக்காலத்தில் பகுத்தறிவு வாதி.

தன் வாய்ப்புகளை தட்டிப் பறித்த 
கவிஞர் வாலி பற்றி  
பூவை செங்குட்டுவன்
 என்னிடம் நயமாக சொன்னார்.
'நல்ல கவிஞர் தான். ஆனால்
போற்றத் தக்க மனிதர் அல்ல '

......

"சினிமா எனும் பூதம்" பாகம் 2ல் இடம் பெற்றிருக்கிறது


Sep 4, 2025

Annoying nuisance

Annoying 
Nuisance
Flies

போராடும் போர்க்களமே
ஈக்களுமே சொல்கிறதே

Sep 3, 2025

SUB TEXT

'போக போக தெரியும்' 

கட்டுடைத்தால்

Subtext 

'மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா'

மகனுக்கு invitation

அட்ஜஸ்ட் பண்ணிக்க 
மீண்டும் வந்துடேன்

மீண்டும் மீண்டும் கெடு

'போக போக தெரியும்' Subtext

'போக போக தெரியும்' 

கட்டுடைத்தால்

Subtext 

'மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா'

மகனுக்கு invitation

அட்ஜஸ்ட் பண்ணிக்க 
மீண்டும் வந்துடேன்

மீண்டும் மீண்டும் கெடு

Subtext 

" வா 
அருகில் வா"

வந்துடு