Karur Sorrow
- R.P. ராஜநாயஹம்
Steel heart against sentiments and emotions
சம கால நடப்புகள் பற்றிய
கடும் அதிர்ச்சியோ,
அதீத பரவசமோ எப்போதுமே கிடையாது. முடிந்தவரை எல்லோருமே விவாதிக்கும் விஷயங்களை
தொட விரும்பியதில்லை.
நிலை குலைய வைக்கும் தாங்கவே முடியாத பெருந்துயரம்
பெண்களின் கண்ணீர்
குழந்தைகளின் கண்ணீர்
கரூரில் பெண்களும் குழந்தைகளும் அதிகமாக பலியாகியிருக்கிறார்கள்.
"தேர் வருமெனத் தெருமுனை பார்த்தேன்
வந்த தேர் என்னை மிதித்துச் சென்றது"
- கவிஞர் நீலமணி
Could not afford further thunderous shock.
தாங்கிக்கொள்ளவே முடியாத பெருந்துயரம். அழுதாலும் தீரவில்லை.
People were packed and squashed like sardines in a worst crowd. This Vijay crowd was worser than the worst. The congestion trauma came with being stuck and unable to move.
கொடூர மரணங்கள் நிகழ ஆரம்பிக்கிற போதே தான் Pompous விஜயின் திமிர்த்தனமான ஆணவப் பேச்சு.
இப்போது கேட்டுப்பார்த்தால் எந்த சராசரிக்கும் கீழான மனிதனுக்கும் கூட கடுங்கோபம் ஏற்படும். Awkward delivery.
யாரை கிண்டலும் நையாண்டியும் செய்து பாடினாரோ அந்த செந்தில் பாலாஜி (soft target) தான்
முதல் ஆளாக மருத்துவ மனையில் resque வேலையில் உடுக்கையிழந்தவன் கை போல பாதிக்கப்பட்டவர்களின் இடுக்கண் களைய பரிதவிப்புடன் இயங்கினார்.
Field worker Senthil Balaji.
தூங்காமலே கரூர் வரும் முதல்வர்.
துணை முதல்வர்.
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வந்த ஆம்புலன்ஸ்களையே தாக்கிய த.வெ.க. தொண்டர்கள்.
சொன்னபடி பகலிலே வந்திருந்தால் மின்சாரத்தை துண்டிக்கும் சூழ்நிலை வந்திருக்காது.
Irresponsible TVK leaders. கட்சியின் தலையே சரியில்லை.
தும்பிக்கய ஊனி நாலு கால தூக்கி நின்னு சங்கு சக்கரமா சுத்தும் போது
இறுமாப்பில் குரங்குகள் வாலை கிளைகளில் தொங்கப்போட்டு ஊஞ்சலாடாமல் இருக்குமா?
தலைவர் கலைஞர் தோல்வி முகம் கண்ட சமயத்திலேயே மதுரை தல்லாகுளத்தில் தேர்தல் கூட்டம் என்றால் இந்த பக்கம் கோரிப்பாளையம் தேவர் சிலை தாண்டி பாலத்திலும் அந்த பகுதியில் பாண்டியன் ஹோட்டல் வரையிலும் மக்கள் பரபரப்பாக நிற்பதை பார்க்கும்படியாகத்தான் அந்தக் காலம் இருந்திருக்கிறது. மரங்களில் கூட உட்கார்ந்து கலைஞர் பேச்சை கேட்டிருக்கிறார்கள்.
நடு நிசியில் எள் போட்டால் எள் எடுக்கமுடியாது என்கிற அளவுக்கு ஜனங்கள். பெண்கள் எப்போதும் போல மிகவும் அதிகம்.
கூட்டத்தில் தன் பேச்சை முடிக்கு முன் எம்.ஜி. ஆர் சொன்னார்: ”தயவு செய்து தாய்மார்கள் இங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்று விடுங்கள். நான் ஆண்களிடம் தனியாக கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது. தாய்மார்கள் செல்லலாம்.”
பெண்கள் கூட்டம் முற்றிலும் வெளியேறி சென்று விட்டதை அறிந்த பின் எம்.ஜி.ஆர் சொன்னார்.”இப்போது ஆண்கள் செல்லலாம்.”
( எம்ஜிஆர் பேச்சு என்ற ராஜநாயஹம் ஆர்ட்டிக்கிள்ளில் இருந்து இதை மட்டும் கிள்ளி ஆனந்த விகடன் இதழில் போட்டுக் கொண்டார்கள். Copy cat )
இப்படியா சினிமா வெறி பிடித்த பைத்தியங்கள்.
அராஜகமான த.வெ.க. தொண்டர்கள்.
Oh wonder !
How many goodly creatures are there here!
How beauteous Mankind is!
O brave new world!
That has such people in it!"
-Shakespeare in ‘ Tempest’
இப்போது டி.வி. இருக்கிறது. எத்தனை சேனல்கள். Live telecast.
பெண்கள் குழந்தைகளுடன் வர வேண்டாம் என்று சொல்லக்கூடிய முதிர்ச்சியில்லை. Pompous leader.
சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்த போது கூட்ட நெரிசல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அவர் ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
தி.மு.க. விற்கு எதிராக வலைத்தளத்தில் எப்போதும் நாராசமாக கொக்கரிக்கிற எதிரிகள்.
நையாண்டியும் ஏகடியம் ஏளனம் செய்கிற இண்ட்டர்நெட் திண்ணையர்.
"அறிவாலயம் அல்சேஷன் ராஜநாயஹம்" என்று பெருமைப்படுத்தப்படும் அளவுக்கு பெரிதாக தி.மு.க. விற்கு சேவைகள் செய்ததில்லை. எதிர் கட்சிகளுக்கு பதில் விளக்கம் கொடுத்ததில்லை.
தினம் முதல்வர், துணை முதலமைச்சர் F.B. பக்கங்களில் எதிர் கட்சிகளின் அருவருக்கத்தக்க, மோசமான அநாகரீக தாக்குதல்.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி
(காலையில பேப்பர் பாத்தப்ப தான் தெரிஞ்சது) கேப்பையில் இப்போது நெய் வடிகிறது.
அன்பில் மகேஷ் குமுறி அழுவது நடிப்பாம்.
கரூர் இளமைக்கால நினைவுகளில் பசுமையாக நின்ற ஊர்.
அப்பா சுங்க இலாகா அதிகாரியாக திருச்சி, நாகை, கரூர், மதுரையில் பணியாற்றியதால் சொந்த ஊர் போல.