Share

May 1, 2021

2021 சட்டசபை தேர்தல் முடிவு?

 சீமான் கட்சிக்கும், தினகரன், விஜய் காந்த் கட்சிகளுக்கும் இந்த தேர்தலில் ஒரு சீட்டு கூட கிடைக்க வாய்ப்பேயில்லை. 

கமல் கட்சிக்கும் அதே நிலை தான். படுதோல்வி உறுதி.

சென்ற தேர்தலில் விஜய் காந்த் தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி

 தி. மு.க விற்கு எதிராக செய்த வேலையை 

இந்த தேர்தலில் கமல் கட்சி செய்தது. 


 ஆனால் கமல் மட்டும் அவசியம் ஜெயித்து

 சட்ட சபைக்கு போக வேண்டும். 


தி. மு. க வெற்றி பெற்று

 ஆட்சி அமைக்கப் போவது உறுதி. 

பத்து வருடத்திற்கு மேல் ஒரு கட்சிக்கு மூன்றாவது வெற்றி வாய்ப்பு என்கிற துயர சோதனை நடக்கவே கூடாது. 


நாளை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து 

முதல் மூன்று, நான்கு மணி நேரம் வரும் முன்னணி நிலவரங்கள் பார்த்து பரவசம், குதூகலம், கவலை அதிர்ச்சியடைய வேண்டியதேயில்லை. டி. வி சேனல்களைப் பார்க்கத் தேவையில்லை. 

ஆளுங்கட்சி, எதிர் கட்சி அந்த நேர முன்னணி நிலவரங்கள் பிற்பகலுக்கு மேல் முற்றாக மாறி விடும் வாய்ப்பு உண்டு. 


நிதானமாக மதியம் மூன்று நான்கு மணி போல தேர்தல் ரிசல்ட் பார்க்க 

டி. வியை 'ஆன்' செய்பவர்கள்

 ஸ்திதப்ரக்ஞை மிக்கவர்கள். 

ஓரளவு முன்னணி, தேர்தல் முடிவின் போக்கு பற்றி உணர முடியும். 


வழக்கம் போல தேர்தல் முடிவுகள் சிலவற்றில் ஆச்சர்யமும் இருக்கும். 


சென்ற 2016ல் மக்கள் நலக்கூட்டணிக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது என்று நான் ஒரு மாதத்திற்கு முன்பே உறுதி படக் கூறிய போது பலரும் கோபமாக அதை மறுத்தார்கள். 

கருணாநிதியை விட விஜய்காந்த் மேலாக கம்யூனிஸ்டுகளுக்கும், திருமாவளவனுக்கும் ஏன் தெரிய வேண்டும் என்றும் கேட்டிருந்தேன். 


பல நிறுவனங்களின் தேர்தல் கணிப்புகளில் 

தி. மு. க  வெற்றி பெறும் என்று சொல்லப்பட்ட போது, 

அதற்கு முன்னரே 'தி. மு.க  ஆட்சியமைக்க வாய்ப்பேயில்லை. அண்ணா திமுக ஜெயிப்பது சந்தோஷப்படுகிற விஷயம் இல்லை' என்று நான் எழுதியிருந்தேன். 


சென்ற 2016 தேர்தல் பற்றி நான் எழுதிய இரண்டு பதிவுகள் லிங்க் கீழே 

https://rprajanayahem.blogspot.com/2016/05/2016.html?m=0

https://rprajanayahem.blogspot.com/2016/05/blog-post.html?m=0


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.