Share

Jul 31, 2020

பிச்சாண்டார் கோவில் சொத்து

தியாகபிரும்மத்தின் சஹானா ராக
 கீர்த்தனை "கிரிபை"
 M.D.ராமநாதன் பாடியதை 
எத்தனை தடவை கேட்டாலும் 
திகட்டவே செய்யாது. 
அதோடு அப்போது ஏற்படும் 
ஆத்மீக அனுபவம் விசேசமானது.
இந்த பாக்யம் போதுமே 
என ஒரு மனநிறைவு ஏற்படும்.

19 வது நூற்றாண்டில்
 மகா வைத்யநாத பாகவதர் 
இந்த சஹானா "கிரிபை" யை 
அனுபவித்து பாடுவாராம். 

ஒவ்வொரு கச்சேரியிலும் 
விரும்பி பாடும் வழக்கத்தை கொண்டிருந்தார். 
ரசிகர்களும் அவர் மறந்தாலும் 
ஞாபகப்படுத்தி கேட்டு மகிழ்வார்கள்.

ஒரு முறை பிச்சாண்டார் கோவில் சுப்பையர் 
இந்த சஹானா கீர்த்தனையை பாடும்போது 
மகா வைத்யநாதர் கேட்டிருக்கிறார். 

நெகிழ்ந்து கண்ணீர் மல்க 
சுப்பையர் அவர்களை 
இவர் தழுவிக்கொண்டாராம்.

அதன் பிறகு எந்த கச்சேரியிலும் 
அந்த கீர்த்தனையை மகா வைத்யநாத பாகவதர் பாடியதே கிடையாது.

கிரிபை பாட சொல்லி பல சங்கீத ரசிகர்கள் விரும்பிகேட்கும்போதெல்லாம் மறுத்து விடுவாராம்.
 "அது பிச்சாண்டார் கோவில் சொத்து "
 என்பதே அவர் பதிலாயிருந்திருக்கிறது.

.....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.