Share

Jul 23, 2020

நாலு வேலி நிலம் வைத்தீஸ்வரன்

"நாலு வேலி நிலம்" தி. ஜானகிராமன் நாடகம். 
எஸ். வி. சகஸ்ர நாமம் சேவாஸ்டேஜ் மேடையேற்றியது. பின்னர் இது படமாகவும்
 நடிகர் சகஸ்ர நாமம் அவர்களால்
 தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அவர் பொருளாதார இழப்புக்கு ஆளாக வேண்டியிருந்தது. 

சகஸ்ர நாமம் மீது எப்போதும் எனக்கு மிகுந்த வாஞ்சையும், அபிமானமும், மரியாதையும் உண்டு. 
ஏனென்றால்  பி. எஸ். ராமையா, 
தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, 
எம். வி. வெங்கட்ராம், அசோகமித்திரன் போன்ற தமிழின் பேரிலக்கியவாதிகளுடன் 
அவர் நட்பு கொண்டிருந்தார்.
 அதற்கு காரணம் அன்று அவர் நல்ல வாசகர். இது அன்றைய நடிகர்களிடம் இல்லாத குணநலன். 

எம். வி. வெங்கட்ராம் கதை ஒன்று. 
தலைப்பு 'கோடரி' என்று நினைக்கிறேன். 
அந்த கதை எஸ். வி சகஸ்ர நாமத்திற்கு 
பிடித்த கதை. 

இப்படி இலக்கிய கவனம் கொண்ட ஒரு நடிகராக மற்ற நடிகர்களிடம் இருந்து தப்பித்து, 
வித்தியாசப் பட்டு எப்படியோ அவரால் 
இயங்க முடிந்திருக்கிறது. 

கவிஞர்களில் எனக்கு எஸ். வைத்தீஸ்வரன் மீது விசேஷ அன்பும், அபிமானமும், மரியாதையும் உண்டு. 

இதற்கு காரணம் அவர் சகஸ்ர நாமத்தின் சகோதரி மகன் என்பதோடு கவிதையுலகை தாண்டிய அவரது இளமைக் கால நாடக, திரையுலக நடிப்பு மற்றும் இந்த சூழலுடனான பரந்து பட்ட அனுபவங்கள். 
இது பிற நவீன இலக்கியம் சார்ந்த கவிஞர் பெருமக்களிடம் இருந்து அவரை தனித்து காட்டுகிற அம்சம். 

என்னுடைய ஆசான்களான 
ந. முத்துசாமி, அசோகமித்திரன் இருவருக்கும் பேலன்ஸிங்காக 
வைத்தீஸ்வரனுக்கு நண்பராக இருக்க சாத்தியப்பட்டிருக்கிறது. 

எஸ். வி. சகஸ்ர நாமம், எஸ். வி. சுப்பையா இருவரும் சகோதரர்களா? என அவர்கள் பற்றிய பதிவில் அபத்தமாக கேட்பவர்கள் இன்றும் உண்டு. 
தெலுங்கர் எஸ். வி. ரங்காராவையும் இவர்களோடு 
'சகோ' சம்பந்தப்படுத்தி குழப்பி பின்னூட்டம் வந்ததுண்டு. 

சிங்காநல்லூர் வி. சகஸ்ர நாமம் 
செங்கோட்டை வி. சுப்பையா 
இருவரும் சகோதரர்கள் அல்ல. 

 'நாலு வேலி நிலம்' 
படத்தில் பழம் பெரும் குணச்சித்திர நடிகர் 
எஸ். வி. சுப்பையா அவர்களுடன் 
இளமையான இன்ஸ்பெக்டர் வேடத்தில்
 நம்முடைய கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன்
 நடித்திருக்கிறார் 

https://m.facebook.com/story.php?story_fbid=2759525584260890&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.