Share

Jul 19, 2020

ஜடிலை, வார்க்ஷி, திரௌபதி

அர்ஜுனனுக்கும் பாஞ்சாலிக்கும்
 திருமணம் செய்வது பற்றி 
துருபதன் ஆலோசிக்கிறான். 

தர்மரை கேட்கிறான்.
 தர்மர் " பாஞ்சாலியை 
நாங்கள் ஐந்து சகோதரர்களுமே
 திருமணம் செய்துகொள்ள வேண்டும் 
என்று தாயார் குந்தி உத்தரவு " என்கிறார். 

பாஞ்சாலியின் தகப்பன் துருபதன் 
பதட்டமடைந்து வேதனையுடன்
 " அது எப்படி சாத்தியம் ?'' என்று கேட்கிறான். 

வியாசரிடம் " இது முறை கெட்ட செயல் அல்லவா?" புகாராக துருபதன் முன் வைக்கிறான்.

வியாசர் தேற்றுகிறார் " ஐந்து பேரை 
பாஞ்சாலி மணப்பது தவறே அல்ல. 
இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன.                                                      ஜடிலை என்ற பெண், 
சப்த ரிஷிக்களையும் மணந்திருக்கிறாள். 
வார்க்ஷி என்ற பெண்
 'பிரதேசுக்கள்' என்ற பத்து சகோதரர்களை 
கல்யாணம் செய்திருக்கிறாள் "

ஜடிலைக்கு ஏழுபேர்,
வார்க்ஷிக்கு பத்து பேர் என்று 
பாஞ்சாலி கணவர்களை விட அதிகமாக 
பாஞ்சாலி காலத்திற்கு முன் 
அந்த இரு ஸ்த்ரிகள் 
வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.