Share

Mar 20, 2020

திருடனுக்கு தேள் கொட்டி விட்டது


என்னுடைய Inspiration பதிவு நான் என் ப்ளாக்கில் 2008, 2009 இரு ஆண்டுகளில் எழுதிய வெவ்வேறு பதிவுகளை இணைத்து நேற்று  ஸ்டேட்டஸாக வெளியிட்டிருக்கிறேன். இவற்றை 2012ல் ஃபேஸ்புக்கில் நுழைந்த பின்னர் இங்கேயும் பதிந்துள்ளேன்.
2014ம் ஆண்டு கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட என் 'இலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்' நூலிலும் இவை இடம் பெற்றிருக்கின்றன.

https://rprajanayahem.blogspot.com/2009/08/blog-post_22.html?m=0

 யவனிகா ஸ்ரீராம் பதிவை share செய்து விட்டு இதையும் வெளியிட்டுள்ளேன்.
நகுலன் பற்றிய அவர் பதிவு எனக்கு பிடித்திருந்ததால் தான் என் பழைய பதிவுகளை நேற்று புது ஸ்டேட்டஸாக இங்கு போட்டேன்.
நகுலன் - பெக்கெட் பதிவு, ஆத்மாநாம் - ரைம்போ பதிவுகளில் உள்ள ஒத்த தன்மையை சுட்டிக்காட்டி இதை வாசகர்கள் பார்வைக்கு இங்கே புதிதாக பதிந்தேன். இதெல்லாம் தான் ராஜநாயஹம் பாணி.

தினமும் புதிய வாசகர்கள் என்னை படிக்க வருகிறார்கள். அவர்களுக்காக என் பழைய பதிவுகள் இங்கே அவ்வப்போது பதிவேற்றம் செய்கிறேன்.

என்னுடைய 2009 'நகுலன் கவிதையில் பெக்கெட் ' பதிவை S. Mohan Shanmugam என்கிற நபர் வரிக்கு வரி காப்பியடித்து 2019 ல் தன் பதிவில் இடையில் செருகியிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. வேதனை.

என்னுடைய பல சினிமா பதிவுகள் மட்டுமல்லாமல் அரசியல் பதிவுகளும், இலக்கிய பதிவுகளும் கூட இப்படி அப்பட்டமாக திருடப்படுவது
வேதனை தான்.

அபத்தம் என்னவென்றால் 2018ல தான் எழுதிய பதிவின் லிங்க்கை என்னுடைய நேற்றைய Inspiration பதிவில் கமெண்டாகவே போட்டு அந்த மோகன் சண்முகம் கேள்வி 'ஒத்த சிந்தனை என்பது இது தானா?'
S. Mohan Shanmugam காப்பியடித்து எழுதியுள்ள பதிவின் லிங்க்
https://m.facebook.com/story.php?story_fbid=579512679649232&id=100027715163407

திருடன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதை.
இப்போது தேள் கொட்டி விட்டது.
தவளை தன் வாயால் கெட்ட கதை.

காப்பி பேஸ்ட் செய்ததையே மறந்துட்டான். Strange.

An incorrigible moron.

நல்ல வேளை. என் 2009 பதிவின் லிங்க்கை நான் Inspiration பதிவில் நேற்று கொடுக்கவில்லை.
கொடுத்திருந்தால் இந்த plagiarism இன்று தெரிய வந்திருக்காது.

சிலர் என் பதிவை திருடி போட்ட பின் வேறொருவர் அங்கிருந்து காப்பி பேஸ்ட் செய்யும் போது அது ராஜநாயஹம் எழுதியது என்பதே தெரியாது போய் விடுவது இன்னொரு மகத்தான சோகம்.

மனம் உடைந்து போய் விட்டேன்.

இந்த அநியாயத்தை தார்மீக கோபம் கொண்ட எல்லோரும் தயவுசெய்து தட்டிக் கேட்க வேண்டும்.

https://m.facebook.com/story.php?story_fbid=2681137458766370&id=100006104256328

........................
..........................................................................


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.