Share

May 3, 2019

எழுத்தாளர் டெய்லர் கர்ணன்


ஜி.நாகராஜன் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள அவருடைய நண்பர் ஒருவரை தேடியதுண்டு.  எழுத்தாளர் தான். டெய்லர்.  பெயர் கர்ணன். ஜி.நாகராஜனின் நெருக்கமான நண்பராக  இருந்திருக்கிறார். அவருக்கு சி.சு.செல்லப்பாவுடன் சினேகிதம் இருந்திருக்கிறது. கர்ணனின் சிறுகதை தொகுப்பை செல்லப்பா அங்கீகரித்திருக்கிறார். அவரே வெளியிட்டிருக்கிறார் என்றும் ஞாபகம். ’பொழுது புலர்ந்தது’ என்று ஒரு சிறுகதை தொகுப்பு கர்ணனுடையது தான்.
அவரை நானும் சரவணன் மாணிக்கவாசகமும் மதுரையில் 1982ல் சேர்ந்து தேடிய முயற்சி அன்று ஈடேறவேயில்லை.  டெய்லர் கடை பூட்டியிருந்தது.
இப்போது சோமு நூற்றாண்டு விழாவிற்கு வந்திருந்த கர்ணனை நிகழ்வு முடிந்தவுடன் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. அபூர்வ சந்திப்பு.
பெரியவருக்கு 2004ல் எழுதிய ’அவர்கள் எங்கே போனார்கள்’ புத்தகத்திற்கு தமிழக அரசு விருது கூட கிடைத்திருக்கிறது.
மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸில் கூட்டம் முடிந்த பின் என்னைப் பார்த்து பிரியத்துடன் புன்னகைத்தார். நடக்க சிரமப்படுகிறார். வாக்கர் மூலம் நடக்க வேண்டிய நிலை. கழுத்தில் செர்விக்கல் காலர். அவர் தான் எழுத்தாளர் கர்ணன் என்பது தெரிய வந்த போது ஜி.நாகராஜன் நினைவு மேலெழும்பியது.
வழக்கறிஞர் பா.அசோக் மொபைலில்  படம்பிடிக்க முனைந்த போது கழுத்தில் உள்ள செர்விக்கல் காலரை கழற்றி விடவா என்று கேட்டார். அசோக் அதற்குள் இரண்டு படம் எடுத்து விட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.