Share

May 14, 2019

சுகிர்தம், கனிவு, நேர்த்தி


கர்நாடக சங்கீத பாடல்களை கேட்கும் போது கண் கலங்கி அறியாமல் கண்ணீர் முத்து முத்தாய் உருளும்.
இது போல பழைய திரைப் பாடல்களை
இன்றைய தலைமுறையினர் பிரமாதமாக பாடுவதை கேட்கும் போது இயல்பாய் கண்ணீர் வருகிறது.
“அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி. என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி” பாடலை
விஜய் டிவியில் ஒரு பெண் பிள்ளை மிக அற்புதமாக பாடுவதை கேட்க வாய்த்த போது எழுந்த உணர்வலைகள்.
குரலின் சுகிர்தம், கனிவு, நேர்த்தி!
ஆண்டாளே..கோதை நாச்சியாரே.. ’ என் தட முலைகள் மானிடவர்க்கென்று பேச்சு படில் வாழ்கில்லேன்’ என்ற நீ
இந்த பாடலை இப்பெண் பாட கேட்க வேண்டும்.வைஷ்ணவம் இல்லை இதில் என்று உன்னால் ஒதுக்கவே முடியாது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.